சென்னை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஜூன் 4-ம் தேதி ஜூன் 8-ம் தேதி அதிகாலை வரை 11,026 பேருந்துகளில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 430 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கடந்த 4-ம் தேதி இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் இருபுறமும் 3 கி.மீ. வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மேலும், போக்குவரத்து துறை மீது பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கு அரசு விரைவுபோக்குவரத்துக்கழகம் அளித்த விளக்கத்தில், நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக பயணிகள் வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும்,பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில்…
Author: admin
22 வயதிற்குள் ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற உமிழும் ஸ்பானிஷ் பரபரப்பான கார்லோஸ் அல்கராஸ், நீதிமன்றத்தில் மற்றும் வெளியே தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துகிறார். டென்னிஸ் ரசிகர்கள் அவரது வேகம், சக்தி மற்றும் களிமண்-நீதிமன்ற வழிகாட்டி ஆகியவற்றால் வெறித்தனமாக இருக்கும்போது, அனைவரின் உதடுகளிலும் மற்றொரு கேள்வி உள்ளது: இந்த இதய துடிப்பு ரோலர்-கோஸ்டர் இளங்கலை யாரையும் டேட்டிங் செய்கிறதா?”நான் ஒற்றை … யாரையாவது தேடுகிறேன்”நேர்மையின் புத்துணர்ச்சியூட்டும் அளவில், கார்லோஸ் சமீபத்தில் தி சண்டே டைம்ஸிடம், “இல்லை, நான் தனிமையில் இருக்கிறேன், நான் யாரையாவது தேடுகிறேன். சரியான நபரைச் சந்திப்பது டென்னிஸ் வீரராக கடினமாக இருக்கும், ஏனெனில் நீங்கள் எல்லா நேரத்திலும் பயணம் செய்கிறீர்கள்” அவரது தொனி கூச்சமாக இருந்தது, ஆனால் உண்மையானது-இங்கே கவர்ச்சியான பிரபலமான தெளிவற்ற தன்மை இல்லை, நிலையான பயணமும் பின்-பின்-போட்டிகளும் நிலையான உறவுகளை ஒரு சவாலாக மாற்றுவதை ஒருவர் ஒப்புக்கொள்கிறார்.”நீங்கள் எப்போதும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தால்…
புதுடெல்லி: உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் செயல்பாட்டை விளக்கிக் கூறுவதற்காக அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் தனித்தனியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர். அந்த வகையில் பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு 6 ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியது. இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: நாங்கள் பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், இங்கிலாந்து, பிரஸல்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தோம். அந்த நாடுகளின் நாடாளுமன்ற மூத்த தலைவர்கள், சிந்தனையாளர்கள், இந்தியர்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினோம். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதுடன் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கும் நாங்கள் சென்றிருந்தோம். இந்தியா, ஐரோப்பா இடையே புதிய…
சீன தைபே: தைவான் ஓபன் சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் ஒரே நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கப் பதக்கம் வென்றனர். தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபே நகரில் நேற்று முன்தினம் தொடங்கின. முதல் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் நடப்பு ஆசிய சாம்பியனும் இந்திய வீராங்கனையுமான ஜோதி யர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பூஜா பந்தய தூரத்தை 4.11.65 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மகளிருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்சா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ்எஸ், நித்யா காந்தே ஆகியோர் அடங்கிய அணி…
வாஷிங்டன்: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சீன வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் கூறியதாவது: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, நெல் உள்ளிட்ட தானியங்களை அழிக்கும் தன்மை கொண்டது. அதோடு கால்நடைகள், மனிதர்களுக்கும் பூஞ்சை பரவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பூஞ்சையால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். கைது செய்யப்பட்ட யுன்கிங்…
மதுரை: மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் காத்திருந்தனர். மதுரையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது. இதையடுத்து, அமித்ஷாவை வரவேற்க தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வந்தனர். இவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் வந்தனர். மதுரை ஒத்தக்கடையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ட அரங்கப் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. மத்தியப் பாதுகாப்புப் படை வசம் அரங்கத்தை ஒப்படைத்த பிறகே டெல்லியிலிருந்து…
விஜய் மல்லையாவின் சமீபத்திய போட்காஸ்ட் தோற்றம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சாகா பற்றிய அவரது நுண்ணறிவுகளுக்காகவும், இந்தியாவுக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளுக்காகவும் கவனத்தை ஈர்த்தது, ஆனால் அவர் கைக்கடிகார ஆடைகளைத் தேர்ந்தெடுத்ததற்காகவும். அவர் ஒரு ஹூப்லாட் கிங் பவர் எஃப் 1 இந்தியா, சுமார், 47,400 மதிப்புள்ள ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு ரோஸ் கோல்ட் வாட்ச், தற்போதைய சட்ட சவால்களுக்கு மத்தியில் ஆடம்பரத்திற்கான தனது நீடித்த சுவையை வெளிப்படுத்தினார். விஜய் மல்லியா மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார், ஆனால் இந்த முறை, அவரது வார்த்தைகளுக்கு மட்டுமல்ல. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் எழுச்சி மற்றும் செயலிழப்புக்கு பிரபலமற்ற முன்னாள் அதிபர், தொழில்முனைவோர் ராஜ் ஷாமியானியின் போட்காஸ்டில் ஒரு அரிய பொது தோற்றத்தை வெளிப்படுத்தினார், அங்கு அவர் தனது பயணம், அவரது ஐபிஎல் குழு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் 2016 முதல் அவரைப் பின்பற்றிய நிதி புயல் பற்றி திறந்தார். ஆனால் அனைத்து தலைப்புச் செய்திகளுக்கும் மத்தியில் அவரது…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் வாகனங்களை பதிவு செய்யும்போது வாகன விற்பனையாளர்கள் பலர் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற புகார் உள்ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்பனையாளர்களின் வர்த்தக உரிமங்களை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்கிய இடைநீக்க காலத்தில் லக்னோ, பாராபங்கி, சீதாபூர், குஷிநகர், மொரதாபாத் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களின் விற்பனையாளர்கள் சிக்கி உள்ளனர். இந்த விற்பனையாளர்கள் 25 பேரும், வாகனங்களை விற்கவோ அல்லது பதிவு கோரிக்கைகளை பதிவேற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் புதிய வாகனங்கள் பதிவுக்கான ‘வாஹன்’ இணையத்திலும் இந்த 25 விற்பனையாளர்களும் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உ.பி. போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில், ‘‘சம்பந்தப்பட்ட 25 விற்பனையாளர்களையும் பலமுறை எச்சரித்தோம். கடந்த ஜனவரி முதல் மே 2025 வரையிலான அவர்களது பதிவுகள் குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. 25 விற்பனையாளர்களுக்கும் விளக்கம்…
லக்னோ: சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரியா சரோஜுடன், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்த விழாவில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். லக்னோவிலுள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு ரிங்கு சிங், பிரியா சரோஜ் ஆகியோரை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரவீண் குமார், பியூஷ் சாவ்லா, உத்தர பிரதேச மாநில ரஞ்சி அணியின் கேப்டன் அர்ஜுன் ஜுயால், சமாஜ்வாதி எம்.பி.க்கள் ஜெயா பச்சன், டிம்பிள் யாதவ், இக்ரா ஹசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டி20 சர்வதேச…
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதன்பிறகு அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் அவர் செயல்பட்டார். இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் தரப்பில் “பிக், பியூட்டிபுல்” என்ற மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது. புதிய மசோதாவை மஸ்க் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதன்காரணமாக அரசு செயல் திறன் துறை தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர், அதிபர் ட்ரம்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 5-ம் தேதி எலான் மஸ்க் சமூக வலைதளத்தில்…
