Author: admin

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் Duo 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப டெக் கேட்ஜெட்களை பயன்படுத்த விரும்பும் பயனர்களை கருத்தில் கொண்டு புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் Duo 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் 1.58 இன்ச் AMOLED செகண்டரி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இதில் பயனர்கள் பின்பக்க கேமராவை கொண்டு செல்ஃபி எடுப்பது, போன் அழைப்புகளை பெறவும், நோட்டிபிகேஷன்களை பாக்கவும், மியூசிக் கன்ட்ரோல் செய்வது போன்ற டாஸ்குகளை மேற்கொள்ளலாம். சிறப்பு அம்சங்கள் 6.67 இன்ச் பிரதான டிஸ்பிளே மீடியாடெக்…

Read More

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து எல்கேஜி பயின்ற சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விக்கிரவாண்டி பள்ளி விவகாரம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிவடைந்து, குற்றப்பத்திரிகை…

Read More

ஜெய்ப்பூர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்து முத்திரையைப் பதித்துள்ளார். முதல் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்துவிட்ட சூர்யவன்ஷிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. 180 ரன்கள் இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 178 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி கண்டது. இந்தப் போட்டியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசி எதிரணியினரை மிரள விட்டார். தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி ராஜஸ்தான் அணியின் இளம்புயலாக உருவெடுத்துள்ளார். மேலும் மிக இளம்வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையையும் வைபவ் பெற்றுள்ளார். அவர் 14 ஆண்டுகள் 23 நாட்களே…

Read More

அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா…

Read More

சென்னை: “ஜூலை 14-ல் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு நடைபெறும். டிஜிட்டல் சர்வே, ட்ரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்றும் முடிவுற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ரோப்கார் அமைக்க ரூ.32 கோடி செலவாகும் என்று கருத்துரு பெறப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கூடுதல் நிதி ஒதுக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் தொடங்கப்படும்,” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பேரவையில் இன்று (மார்ச் 24) கேள்வி நேரத்தின்போது, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, “திருப்பரங்குன்றம் கோயிலின் கும்பாபிஷேகம் உரிய காலம் தாண்டி சென்று கொண்டிருக்கிறது, ரோப்கார் வசதிக்கு உரிய நிதி ஒதுக்கப்படாததால் அதனுடைய திட்டமே செயல்படாமல் இருக்கிறது. முதல்படைவீடாம் திருப்பரங்குன்றத்துக்கு சிறப்பு நிதி ஏதும் ஒதுக்காத காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கையில், “ரோப்காரை பொறுத்தளவில் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் திருப்பரங்குன்றம்,…

Read More

ராம் நடித்த ‘சவரக்கத்தி’, விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’, ‘அயோக்யா’, ‘துர்கா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜெய் கார்த்திக். இவர் இப்போது சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:நான் பி.சி.ஸ்ரீராம் சாரிடம் அசிஸ்டென்டாக இருந்து ஒளிப்பதிவாளர் ஆனேன். ‘லியோ’, ‘கேம் சேஞ்சர்’, ‘சிக்கந்தர்’ உள்ளிட்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு மட்டும், நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இப்போது நான் பணியாற்றியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ‘இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’ படம் என்பதால் முழு படத்தையும் இரவில்தான் எடுத்தோம். அதிகமான லைட்டிங்கை பயன்படுத்த இயலவில்லை. ஒரு படத்தின் கதையை தொந்தரவு செய்யாமல் ஒளிப்பதிவு இருக்க வேண்டும் என்பதால் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அதிகம் மெனக்கெட்டோம். எங்களுக்கு அனுமதி கிடைத்த சிறிய இடத்தில், சாலைகள் தொடர்பான காட்சிகளைப் படமாக்கினோம். பின்னர் அதை வெவ்வேறு இடங்களில் நடப்பது போல மாற்றினோம். ‘துப்பறிவாளன் 2’ படத்துக்காக லண்டன்,…

Read More

சட்டப்பேரவையில் நேற்று, தாமத வரிக்கான அபராத வட்டி குறைப்பு, கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கம் உள்ளி்ட்ட 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்குவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகளுக்கு உரிமம் வழங்கும் முறையை எளிதாக்கி, ஆன்லைனில் வழங்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகம் செய்தார். அதன்பிறகு, நிதி ஒதுக்கம் தொடர்பான 4 சட்ட மசோதாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார். ஏற்கெனவே, தீ தடுப்புக்கான செயல்பாட்டு நேரத்தைக் குறைக்க, அறிவியல்சார் நில வரைபடம் அடிப்படையில் புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் ஏற்படுத்துவது குறித்த தீயணைப்பு சட்டத்திருத்த மசோதா, கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை காப்பதற்கான சட்ட மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.…

Read More

சென்னை: 2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2025 மார்ச் 31-ம் தேதி வரை சென்னை மண்டலத்தில் ரூ.9,234 கோடி வைப்புத் தொகையுடன 10.44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அஞ்சல் மண்டலத்தில் சென்னை மாநகர் கோட்டங்கள், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகள் அடங்கி உள்ளன. 2024-25-ம் ஆண்டில் மட்டும் இந்த மண்டலத்தில் இத்திட்டத்தில் 74,332 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வைப்புத் தொகையாக ரூ.1,798 கோடி பெறப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் பெறப்பட்ட…

Read More

விதைகளுடன் எப்படி வளர வேண்டும் விதைகளிலிருந்து வளர, நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஸ்ட்ராபெர்ரிகளிலிருந்து விதைகளை மெதுவாக எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை ஒரு திசு காகிதத்தில் வைத்து, லேசாக மூடிமறைத்து, பின்னர் அவை வறண்டு போகும் வரை வெயிலில் வைக்கவும். ஒருமுறை காய்ந்தவுடன், இவற்றை பானைகளிலும் மண்ணிலும் நடவு செய்யுங்கள், முளைப்பதற்காக மண்ணை ஈரப்பதமாக வைத்திருங்கள்.

Read More

பட கடன்: ASU இன் வலைத்தளம் வாஷிங்டனில் இருந்து TOI நிருபர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிறந்த அமெரிக்க விஞ்ஞானி ராஜினாமா செய்தார் தேசிய அறிவியல் அறக்கட்டளை . டிரம்ப் நிர்வாகம் நாட்டில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. சேத்துராமன் பஞ்சநாதன்ஐ.ஐ.டி.”பஞ்ச்” அவர் சக ஊழியர்களிடையே பிரபலமாக அறியப்பட்டதால், அவர் புறப்படுவதற்கான காரணங்களை ஆராயவில்லை, ஆனால் அவரது அனைத்து ஊழியர்களிடமிருந்து விஞ்ஞான வட்டாரங்களில் பரந்த அளவில் எடுத்துக்கொள்வது என்னவென்றால், என்.எஸ்.எஃப் இன் 9 பில்லியன் டாலர் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை குறைத்து, ஏஜென்சியின் 1,700-பெர்சன் ஊழியர்களைக் குறைக்க வெள்ளை மாளிகை அழுத்தம் குறித்த விரக்தி காரணமாக அவர் வெளியேறினார்.”இது உலகளாவிய போட்டித்தன்மையின் அடிப்படையில் நம் தேசத்திற்கு ஒரு முக்கிய தருணம். என்.எஸ்.எஃப் என்பது நம்மை விஞ்ஞான ஆதிக்கத்தை உண்மையாக்குவதற்கான மிக முக்கியமான முதலீடாகும். நாங்கள் எங்கள் போட்டி விளிம்பை இழக்கக்கூடாது” என்று டாக்டர் பஞ்சநாதன் மெமோவில் வலியுறுத்தினார், டிரம்ப்/மஸ்க்…

Read More