ஹாங்காங்: இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஹாங்காங்கில் இருந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ஹாங்காங்கில் கட்டுமானத் தளம் ஒன்றில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டின் எஞ்சிய பகுதி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், இந்த வெடிகுண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் நீளமும் ஏறக்குறைய 450 கிலோ கிராம் எடையும் கொண்டது என்று ஹாங்காங்ஹ் காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஹாங்காங் காவல் துறை அதிகாரி ஒருவர், “வெடிகுண்டை அகற்றுவதில் ஆபத்து இருக்கிறது. இது இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். பாதுகாப்பு நலன் கருதி 18 குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து சுமார் 6,000 பேரை வெளியேற்றத் திட்டமிட்டோம். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தொடங்கி சனிக்கிழமை காலை 11.30 மணி வரை நீடித்தது. இந்த நடவடிக்கையால்…
Author: admin
தனுஷ் படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. இதில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இன்று அப்படம் வெளியாகி ஓராண்டு ஆகிறது. இதனை முன்னிட்டு தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் தமிழரசன். அடுத்த படத்தில் தனுஷை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். முன்னதாக, அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பது செய்தியாக வெளியானாலும், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ’லப்பர் பந்து’ ஓராண்டு ஆனது குறித்தும், தனுஷ் படம் குறித்து தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா? போனா உதவி இயக்குநர் ஆக முடியுமா? உதவி இயக்குநர் ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா? பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ஒகே பண்ண முடியுமா? நடிகர்கள் ஓகே…
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (செப்.21), நாளை மறுதினமும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா…
68 வது கிராமி விருதுகள் சில மாதங்கள் தொலைவில் உள்ளன, ஆனால் வரவிருக்கும் விழாவைச் சுற்றியுள்ள சலசலப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது – எந்தவொரு உத்தியோகபூர்வ பரிந்துரைகளும் அறிவிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே. இருப்பினும், பிளாக்பிங்கின் ரோஸ் தனது சர்ச்சைக்குரிய FYC பிரச்சாரத்தைப் பற்றி ஆய்வுக்கு உள்ளானதால், எல்லா சலசலப்புகளும் வரவேற்கப்படவில்லை. பிளாக்பிங்கின் ரோஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடன்: இன்ஸ்டாகிராம் | ரோஸஸ்_அரே_ரோசிFYC பிரச்சாரங்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றனஒவ்வொரு ஆண்டும், கலைஞர்கள் தங்கள் படைப்புகளை கிராமி பரிசீலிப்புக்காக சமர்ப்பிக்கிறார்கள். நவம்பர் வரை உத்தியோகபூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படாது என்றாலும், சமர்ப்பிக்கும் காலம் மூடப்பட்டுள்ளது, மேலும் சாத்தியமான போட்டியாளர்களின் குறிப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றில், பிளாக்பிங்கின் ரோஸ் கிராமி வாக்காளர்களுக்கு உங்கள் பரிசீலனைக்கு (FYC) தொகுப்புகளுக்கு அனுப்புவதன் மூலம் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளார். புருனோ செவ்வாய் கிரகத்துடன் பிளாக்பிங்க் ரோஸ். கடன்: இன்ஸ்டாகிராம் | ரோஸஸ்_அரே_ரோசிரெக்கார்டிங் அகாடமி இந்த பெட்டிகளில் சமர்ப்பிக்கப்பட்ட இசையின் பாராட்டு நகல்களை…
மும்பை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) ஆகிய அனைத்தும் கடந்த 9-ம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைதளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள், நாட்டில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன. மேலும், அவை டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று காலை விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர். மும்பையிலுள்ள பிகேசி ஆப்பிள் ஐபோன் ஸ்டோர் முன்பு…
கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று ஒரே இரவில் உக்ரைன் மீது 40 ஏவுகணைகள் மற்றும் 580 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த சரமாரியான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருடான சந்திப்பின்போது, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வலியுறுத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவைக் கட்டுப்படுத்த அந்த நாட்டுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்ய அதிபர்…
சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடவே, குடிநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி…
நல்ல பார்வை என்பது மங்கத் தொடங்கும் வரை பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்பட்ட ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். கண்ணாடிகள், காண்டாக்ட் லென்ஸ்கள் அல்லது கண் சோதனைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும், ஆனால் உண்மை என்னவென்றால், பலரும் உணர்ந்ததை விட பார்வையைப் பாதுகாப்பதில் உணவு மிகப் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. வறட்சியைத் தடுப்பதில் இருந்து வயது தொடர்பான கண் நிலைமைகளின் அபாயத்தைக் குறைப்பது வரை, தட்டில் என்ன நடக்கிறது என்பது கண்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை நேரடியாக ஆதரிக்கிறது. இந்திய சமையலறைகளில் பல தாழ்மையான, உள்நாட்டில் கிடைக்கக்கூடிய உணவுகள் கண்களுக்கு இயற்கை பாதுகாப்பாளர்களாக செயல்படலாம். அவற்றில் பத்து பேரை இங்கே ஒரு நெருக்கமான பார்வை.
பெங்களூரு: பெங்களூரு சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ‘சாலைகளில் உள்ள பள்ளங்களை யாரும் உருவாக்குவதில்லை, இயற்கை காரணங்களாலும், கனமழையாலும் அவை உருவாகின்றன’ என்று கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார் கூறினார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “சாலையில் ஏற்பட்ட பள்ளங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் இங்கே இருக்கிறோம். பாஜக இதில் அரசியல் செய்கிறது; அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இன்று மாலை, முதல்வர் சித்தராமையாவும் இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்துகிறார். பள்ளங்கள் இயற்கையால் ஏற்படுகின்றன; யாரும் அவற்றை உருவாக்க விரும்பவில்லை. பெங்களூருவில் வாகனங்களின் அதிகரிப்பு, அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக மழை காரணமாக அதிகளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே 7,000 க்கும் மேற்பட்ட பள்ளங்களை நிரப்பிவிட்டோம், பெங்களூருவின் சாலைகளில் இன்னும் 5,000 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளன. பள்ளங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
காசா: ”இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. – இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள். இன்றைய நிலவரப்படி காசாவில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்தான் அங்கிருந்து இப்படியொரு வேதனைக் குரல் ஒலித்துள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இன்றுவரை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என்பதே இஸ்ரேலின் முழுக்கமாக இருக்கிறது. இந்த உறுதிப்பாட்டை முன்வைத்தே இடையில் லெபனான், சிரியா, ஏமன், ஈரான், கத்தார் எனப் பல நாடுகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவிட்டது. இதில் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.…