மும்பை: கறுப்புத் திங்கள் என வருணிக்கும் அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்ட மறுநாளில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்து மீட்சி ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்றே நிம்மதியைத் தந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.8) காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,283.75 புள்ளிகள் உயர்ந்து 74,421.65 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 415.95 புள்ளிகள் உயர்ந்து 22,577.55 ஆக இருந்தது. இந்த மீட்சிப் போக்கு தொடர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகக் கூறி, பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அதே விகதத்தில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கான பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான வரி விகிதத்தை மேலும் அதிகரிப்போம் என சீனா அறிவித்தது. இந்த வரிவிதிப்பு யுத்தம் மற்றும் இதன் தாக்கத்தால்…
Author: admin
முதன்முறையாக, மூளை உயிரணுக்களில் டிமென்ஷியா எவ்வாறு வெளிவருகிறது என்பதைக் காண ஆராய்ச்சியாளர்களின் குழு உயிருள்ள மனித மூளை திசுக்களைப் பயன்படுத்தியது. “நோயைப் படிப்பதற்கான புதிய வழி புதிய மருந்துகளைச் சோதிப்பதை எளிதாக்குவதோடு, வேலை செய்யும்வற்றைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்” என்று கார்டியன் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வை மேற்கோள் காட்டி அறிக்கை செய்தது. “ஆய்வில், எடின்பர்க்கில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முதல் முறையாக அல்சைமர் உடன் இணைக்கப்பட்ட ஒரு புரதத்தின் நச்சு வடிவம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டியது, அமிலாய்டு பீட்டாமூளை உயிரணுக்களுக்கு இடையிலான முக்கிய தொடர்புகளுடன் ஒட்டிக்கொண்டு அழிக்க முடியும். “அமிலாய்ட் பீட்டா என்பது ஒரு ஒட்டும் புரதமாகும், இது டிமென்ஷியாவில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது, குறிப்பாக அல்சைமர். ஆரோக்கியமான மூளையில், அது தவறாமல் அழிக்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், இது தேவையற்ற குப்பைப் போன்ற மூளை உயிரணுக்களுக்கு…
நைரோபி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளைப் போலவே கென்யாவிலும் டி20 லீக் போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளது. கென்யாவில் முதன்முறையாக டி20 லீக், சிகேடி20 என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்த டி20 லீக் போட்டி மூலம் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கும். உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்குவதற்கும் கென்யா கிரிக்கெட் வாரியம் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கும். டி20 தொடர் 25 நாட்கள் நடைபெறும். இதில் கும். ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். இந்தப் போட்டிக்காக ஏஓஎஸ் ஸ்போர்ட் டோர்னமெண்ட் நிறுவனம் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்யவுள்ளது.
பிரபல கேரள கால்பந்து வீரர் ஐஎம் விஜயன். இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்த அவர், பல மலையாளப் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷாலின் ‘திமிரு’, கார்த்தியின் ‘கொம்பன்’, உதயநிதியின் ‘கெத்து’, விஜய்யின் ‘பிகில்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள போலீஸ் கால்பந்து அணியில் கவுரவ வீரராக 1986-ம் ஆண்டு ஆடி வந்தார். 1987-ம் ஆண்டு போலீஸ் கான்ஸ்டபிளாக நியமிக்கப் பட்டார். பின்னர் மலபார் ஸ்பெஷல் போலீஸில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவி வழங்கப்பட்டிருந்தது. அவர் பதவி காலம் முடிவடைவதாக இருந்த நிலையில், கால்பந்து விளையாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பின் காரணமாக, டெபுடி கமாண்டன்ட்டாக அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கரூர்: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தைச் சேர்ந்தவர் பிரபு(40). கற்றாழையை கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி மதுமிதா, மகள் தியா(10), மகன் ரிதன்(3). இந்நிலையில், பிரபு, மனைவி மதுமிதா, குழந்தைகள், மாமனார் முத்து கிருஷ்ணன்(61) ஆகியோருடன் ஏப். 17-ம் தேதி கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு படா பஜார் ரபிந்தரசரணி பகுதியில் 5 தளங்கள் கொண்ட ஹோட்டலில் குடும்பத்தினர் அனைவரும் தங்கியிருந்தனர். இந்நிலையில், இரவு உணவு வாங்கு வதற்காக பிரபுவும், அவரது மனைவியும் வெளியே சென்றுள்ளனர். அந்நேரத்தில் மின் கசிவு காரணமாக ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இதில் முத்துகிருஷ்ணன், அவரது பேரக் குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். முதல்வர் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்…
சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏப்ரல் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.1,280 மற்றும் ஏப்ரல் 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720, ஏப்ரல் 7-ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்தது. இந்த வரிசையில் இன்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று (ஏப்.8) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,225-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம்…
இருதய நோய் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகவே உள்ளது. பதில்களுக்கான தொடர்ச்சியான தேடலுக்கு மத்தியில், இதய ஆரோக்கியத்துடன் நம்பிக்கைக்குரிய தொடர்புகளுடன் ஊட்டச்சத்து விவாதங்கள் -செலினியம் -ஒரு சுவடு கனிமம் பெரும்பாலும் விலகிச் செல்லப்படுகிறது.ஆனால் இது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு நவநாகரீக ஊட்டச்சத்து அல்ல. இந்த நேரத்தில், இணைப்பு 39,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய NHANES தரவைப் (2003–2018) பயன்படுத்தி ஒரு பெரிய அளவிலான ஆய்வில் இருந்து வருகிறது. கண்டுபிடிப்புகள் செலினியம், உணவின் மூலம் சரியான அளவில் உட்கொள்ளும்போது, மாரடைப்பு போன்ற இருதய நிகழ்வுகளின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று கூறுகின்றன. ஆனால் இயற்கையில் உள்ள பெரும்பாலான விஷயங்களைப் போலவே, சமநிலையும் எல்லாமே.சலசலப்பு என்னஆர்வத்தைத் தூண்டியது உணவுக்கு இடையில் ஒரு நிலையான தலைகீழ் தொடர்பு செலினியம் உட்கொள்ளல் மற்றும் இருதய நோய். இதன் பொருள் செலினியம் உட்கொள்ளல் அதிகரித்ததால் -ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் -இதய நோய்க்கான ஆபத்து குறைவதாகத் தோன்றியது.இனிமையான இடம்? ஒரு…
புதுடெல்லி: இந்திய ஆடவர் கால்பந்து அணி வரும் ஜூன் 4-ம் தேதி தாய்லாந்துக்கு எதிராக சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) நேற்று அறிவித்தது. ‘ப்ளூ டைகர்ஸ்’ என அழைக்கப்படும் இந்திய கால்பந்து அணி தற்போது ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தகுதிச் சுற்று இறுதிகட்ட போட்டியில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் வரும் ஜூன் 10-ம் தேதி ஹாங்காங்குடன் இந்திய அணி மோத உள்ளது. இந்த ஆட்டத்துக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு தாய்லாந்து அணிக்கு எதிரான நட்புரீதியிலான ஆட்டம் உதவக்கூடும். இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதும் போட்டியானது ஜூன் 4-ம் தேதி தாய்லாந்தின் ரங்சித் நகரில் உள்ள தம்மாசாட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஃபிபா தரவரிசை பட்டியலில் இந்தியா 127-வது இடத்திலும், தாய்லாந்து 99-வது இடத்திலும் உள்ளன. இதுவரை இந்தியா, தாய்லாந்து அணிகள் 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.…
தூத்துக்குடி; திமுகவுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் சேர்ந்தால்தான், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும். டெல்லியில் கட்சித் தலைவர்கள், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது, கட்சி மற்றும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி, கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் ஆலோசனை வழங்கினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் எதுமில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலைக் கேட்டு, அமைச்சர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதுதான் சரியான செயல்பாடாக இருக்கும். நமது நாட்டிலேயே இருந்துகொண்டு இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவது தேச துரோக செயல். அவர்களை தேச விரோதிகள் என்றுதான் சொல்ல முடியும். காலனி என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். அதேபோல, பல நல்ல விஷயங்களை அரசு செய்ய…
சென்னை: தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அட்சய திருதியை நாளன்று வழக்கம்போல் நகைக் கடைகளில் விற்பனை களைகட்டியது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு 3-வது நாளில் வரும் வளர்பிறை திதி அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் ஐதீகமும் மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்குத் தொடங்கி நேற்று மாலை 6.45 மணி வரை நீடித்தது. அதேநேரம் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் ஏற்றத்தில் உள்ளது. ஆனால், தங்கம் விலை என்னதான் ஏறினாலும், ஒரு குண்டுமணி அளவுக்காவது வாங்க வேண்டும் என என்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், வாடிக்கையாளர்களை கவர, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை…
