Author: admin

சென்னை: “9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழகம்தான் இருக்கிறது” என்று உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், “உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. டெக்னாலஜி, கொள்கை உருவாக்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு பார்ட்னர்ஷிப் ஆக தான் இதை நான் பார்க்கிறேன்” என்று அவர் கூறினார். சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) திறந்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “உலக வங்கியுடன் நம்முடைய பார்ட்னர்ஷிப் 1971-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2022-ம் ஆண்டில், புதுடெல்லிக்கு…

Read More

உங்கள் ஆண் குழந்தைக்கு ஒரு நவநாகரீக ஆனால் குறிப்பிடத்தக்க பெயரைத் தேடி? சிவபெருமானை அடிப்படையாகக் கொண்ட 10 நவநாகரீக பெயர்கள் இங்கே.

Read More

புதுடெல்லி: “தயவுசெய்து என்னை தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம். செனாப் பாலத்துக்காக பாராட்டப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவர். செனாப் நதியின் மீது கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் வளைவுப் பாலத்துக்கான பெருமை இந்திய ரயில்வேக்கும், ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஹீரோக்களுக்கும் சொந்தமானது” என்று பேராசிரியர் மாதவி லதா தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது லிங்க்டு இன் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செனாப் ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததற்கு இந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் பாலம் ஒரு சிவில் இன்ஜினியரிங் அற்புதம். திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் அனைத்துப் பெருமையும் இந்திய ரயில்வே மற்றும் AFCONS-க்கு உரியது. இந்தப் பாலத்தின் கட்டுமானத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வழிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதற்காக இன்று நான் வணக்கம் செலுத்தும் மில்லியன் கணக்கான பெயர் தெரியாத ஹீரோக்கள் உள்ளனர். AFCONS-ன் புவி தொழில்நுட்ப ஆலோசகராக எனது பங்கு…

Read More

‘பென்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகி இருக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவுற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. இதனை பேஷன் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்கோட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. ‘எல்.சி.யூ’ யுனிவர்சிஸில் இணைந்துள்ளது ‘பென்ஸ்’. இதன் கதையை எழுதி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, சம்யுக்தா மேனன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். தற்போது இதில் மாதவன், மடோனா செபஸ்டின் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ‘லியோ’ படத்தில் விஜய்யின் தங்கையாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மடோனா செபஸ்டின். அவர் ‘பென்ஸ்’ படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதன் மூலம், எல்.சி.யூவில் இப்படம் இணைவது மீண்டுமொரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More

சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், “பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் வருவதை உறுதி செய்ய ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குறிப்பிட்ட தெருக்கள் மிகவும் குறுகலானவை என்பதால் தேர்…

Read More

நீங்கள் படத்தைப் பார்த்து, இது ஒரு வழக்கமான பூங்கா காட்சி என்று நினைக்கலாம். இருப்பினும், உங்களுக்கான ஒரு சவால் இங்கே: இந்த படத்திற்குள் மறைக்கப்பட்ட ஹிப்போவைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.இந்த மூளை டீஸரில், உங்கள் பணி எளிதானது: இந்த பிஸியான படத்தில் மறைக்கப்பட்ட ஹிப்போவைக் கண்டறியவும். ஆனால் இங்கே திருப்பம்: 20/20 பார்வை மற்றும் உயர் ஐ.க்யூ கொண்டவர்கள் மட்டுமே இதை 12 வினாடிகளில் செய்ய முடியும். நீங்கள் அதை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? கண்டுபிடிப்போம்! கீழேயுள்ள படத்தைப் பார்த்து, இந்த அழகான, பிஸியான பூங்கா காட்சியில் மறைக்கப்பட்ட ஹிப்போவைக் கண்டறியவும். நல்ல அதிர்ஷ்டம்!ஒரு பிரகாசமான வெயில் நாளில் பல்வேறு நபர்கள் திறந்தவெளியில் வேடிக்கையாக இருக்கும் ஒரு துடிப்பான பூங்கா காட்சியை படம் காட்டுகிறது. முன்பக்கத்தில், ஒரு பெண் ஒரு அழகான நாயை ஒரு நடைப்பயணத்திற்கு ஒரு மோசமான நாயை அழைத்துச் செல்கிறாள். அவரது இடதுபுறத்தில், ஒரு இளைஞன் ஹெட்ஃபோன்களுடன் சைக்கிள்…

Read More

கொல்கத்தா: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக அவர் சாடினார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தவறியதற்காக பாஜக அரசு, ராஜினாமா செய்ய வேண்டும். இந்தக் கொடூரமான தாக்குதல் நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. நமது வீரர்கள் ஒப்பிடமுடியாத துணிச்சலைக் காட்டிய போதிலும், மீண்டும் மீண்டும் நிகழும் பாதுகாப்பு மீறல்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது? 26 பொதுமக்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினரோ அல்லது காவல் துறையினரோ…

Read More

சென்னை: கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப் படுகின்றன. கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2023-ம் முதல் வழங்கப்படுகிறது. நடப்பாண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது. அதன் விவரம்: 2025-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகியோர் www.awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் செய்த சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட…

Read More

‘டூட்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் படம் ஒன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்திவாசன் இயக்கிவரும் ‘டூட்’ (DUDE) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தீபாவளி வெளியீடாக இருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, மீண்டும் படமொன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதனை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் இப்படத்தின் திரைக்கதையினை எழுதி முடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். விரைவில் முதற்கட்டப் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு. முன்னதாக ‘லவ் டூடே’ படத்தினை இயக்கி நாயகனாக நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வந்தார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க திட்டமிட்டு பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்.

Read More

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 10) நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும், 7 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் செல்லாதவை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 19-ல் நடைபெறும் தேர்தலுக்காக வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று (ஜூன் 10) முற்பகல் 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆய்வுக்குப் பின், ஐ.எஸ்.இன்பதுரை (அதிமுக), ம.தனபால் (அதிமுக), கமல்ஹாசன் (மநீம), எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக), கவிஞர் சல்மா (எ) ராஜாத்தி, பி.வில்சன் ஆகிய 6 வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை என அறிவிக்கப்படுகிறது. மேலும், அக்னி ஆழ்வார், கண்டே சயன்னா, ரெ.கந்தசாமி, சுப்பிரமணியன், பத்மராஜன், மேஷாக் கிருபாகரன் மற்றும் கே.பி.எம். ராஜா ஆகிய…

Read More