நியூயார்க்: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகரித்துள்ளார். எந்தெந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எவ்வளவு வரி விதிக்கின்றனவோ அந்த அளவுக்கே பரஸ்பரம் வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் உறுதியாக கூறியுள்ளார். இந்நிலையில் ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (யுஎன்சிடிஏடி), செகரட்டரி ஜெனரல் ரெபெக்கா கிரின்ஸ்பேன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பல நாடுகளுக்கு அதிக வரி விதித்துள்ளதால் உலகளவில் வர்த்தக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகளவிலான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உரியதாக வர்த்தகம் இருக்க வேண்டும். இன்றைய சவால்களை பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய வர்த்தக விதிகள் உருவாக வேண்டும். ஏழை மக்கள் பெரிதும் பாதிக்காத வகையிலும் மேம்பாட்டை கருத்தில் கொண்டும் வர்த்தகம் அமைய வேண்டும். இது ஒத்துழைப்புக்கான நேரமே தவிர சிக்கலை அதிகரிப்பதற்கான நேரமல்ல. இவ்வாறு ரெபெக்கா கிரின்ஸ்பேன் கூறியுள்ளார்.
Author: admin
கவனச்சிதறல்கள் நிறைந்த உலகில், உங்கள் மனதைக் கூர்மைப்படுத்துவது மற்றும் கவனம் செலுத்துவது ஒரு வல்லரசாகும். உங்கள் மூளைக்கு சிறந்த கவனம் செலுத்துவதற்கும் அதிக உற்பத்தி செய்வதற்கும் சில உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தது. மேலும், தெற்காசியாவில் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடனான தொலைபேசி உரையாடலின்போது மார்கோ ரூபியோ, இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்,…
சென்னை: சமூக வலைதளத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம், அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற நபர் கடந்த 28-ம் தேதி, தனது சமூக வலைதளத்தில், “சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், அதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும். நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு இரங்கல் செய்தி வரும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள். தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு சீமானுக்கே” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.…
ஆம்னி பேருந்துகளுக்கு சுங்கச் சாவடிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொல்லிமலையில் நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்து போன்ற பொதுப் போக்கு வரத்து வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை ஒரே நாளில் பதிவு செய்து இயக்க அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அனுமதிக்கும் ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் பேருந்துகளை தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளுக்கு தேவையில்லாமல் அபராதம் விதிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். போக்குவரத்துத் துறை சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுநர் செய்யும் போக்கு வரத்து விதி மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் மீது மட்டுமே அபராதம் விதிக்க…
சமீபத்திய வளர்ச்சியில் கல்லீரல் நோய் சிகிச்சைஒரு புதியது மருத்துவ சோதனை பிரபலமான எடை இழப்பு மருந்து என்று அழைக்கப்படுகிறது வெகோவிஇது மக்கள் தங்கள் பசியைக் குறைப்பதன் மூலமும், குடலைக் குறைப்பதன் மூலமும் உடல் எடையை குறைக்க உதவுகிறது, எந்தவொரு கல்லீரல் நோயையும் குணப்படுத்துவதற்கான மந்திர முடிவுகளை அளித்துள்ளது.கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இந்த மந்திர எடை இழப்பு மருந்துடன் குணப்படுத்த முடியும். வெகோவியில் எனப்படும் ஒரு கூறு உள்ளது semaglutide இது நோயாளிகளிடையே கல்லீரல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.ஓசெம்பிக் மற்றும் ரைபெல்சஸ் போன்ற பிற மருந்துகளிலும் ஒரே செயலில் உள்ள மூலப்பொருள் செமக்ளூட்டைட் ஆகும். இந்த ஆய்வு வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோஹெபடைடிஸால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்திருந்தாலும், பொதுவாக அழைக்கப்படுகிறது மாஷ்மதுபானமற்றது கொழுப்பு கல்லீரல் நோய் அமெரிக்காவில் சுமார் 33% பெரியவர்களை பாதிக்கிறது, மேலும் 5% முதல் 7% மக்கள் இந்த நோயின் மேம்பட்ட பதிப்பைக்…
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலால் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றியதாக தெரிகிறது. ஏனெனில், ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானின் எல்லையில் பல மசூதிகள் உள்ளன. அங்கு 5 வேளை தொழுகைக்கு முன்பு பாங்கு ஒலிக்கப்படும். அந்த ஒலி இந்திய எல்லைகளிலும் கேட்பதுண்டு. அந்த பாங்கு ஒலியை காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினரும் கேட்பதுண்டு. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்த பாங்கு ஒலிகள் கேட்பது இல்லை என இந்திய எல்லைகளில் இருந்து தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற சூழல், கார்கில் போரின் போதும் இருந்தது. கார்கில் போருக்கு பிறகு தற்போது மீண்டும் எல்லையின் பாகிஸ்தான் மசூதிகளில் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எல்லைப் பகுதிகளில்…
சென்னை: இந்திய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த், பக்தி சேவா சமயம் அக்ரிபிட் அமைப்புடன் இணைந்து பாரத சேவா மற்றும் சங்கல்பம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். திட்டத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு காணொளி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய செல்போன் யுகத்தில், நம் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாச்சாரம் அதன் அருமை, பெருமைகளை பற்றி எல்லாம் தெரியாமல், இளைஞர்கள் மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அதேநேரம் வெளிநாட்டினர் மேற்கத்திய கலாச்சாரத்தில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று இந்திய கலாச்சாரம் நோக்கி வந்து கொண்டிருகின்றனர். தியானம், யோகா போன்றவைகள் மூலம் அவர்கள் பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர். அந்தவகையில் நம் பாரத நாட்டின் கலாச்சாரத்தையும், சம்பிரததாயத்தையும் இளைஞர்கள் இடத்திலும் மக்களிடையேயும் கொண்டு போய்…
கோவை: கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே விலை குறைந்துள்ளது. இது தற்காலிகமானது தான் விரைவில் மீண்டும் உயரும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு பிறகு படிப்படியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை புதிய வரலாறு படைத்து வருகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதை நினைத்து மக்கள் மகிழ்ச்சியடைந்த சூழலில் மீண்டும் கிடுகிடுவென உயர தொடங்கியது தங்கத்தின் விலை. கடந்த வாரம் ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களில் ரூ.2,000 வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் குறையுமா?…
மிஷா அகர்வால்ஒரு பிரபலமான சமூக ஊடக செல்வாக்கு இறந்தார் தற்கொலை அவரது 25 வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு. இன்ஸ்டாகிராமில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர் தளம் இருந்தபோதிலும், மிஷா மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் தனது பின்தொடர்பவர்களில் சிலரை இழந்தபோது மேலும் அதிகரித்தது. கடந்த சில வாரங்களிலிருந்து அவள் தனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்பு அவள் செயலில் காணவில்லை.அவள் ஏன் மிகவும் மகிழ்ச்சியற்றவள்?ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டுவதற்கான ஒரு நிறுத்த இலக்கைக் கொண்டு, இன்ஸ்டாகிராம் தனது முழுமையான அடையாளத்தை ஆணையிட அனுமதித்ததாக மிஷாவின் அறிமுகம் பகிர்ந்து கொண்டது. இந்த அபிலாஷை அவளை முழுவதுமாக நுகரும், அவளுடைய வாழ்க்கையின் மற்ற அம்சங்களை உயர்த்தியது. அவளது பின்தொடர்பவரின் எண்ணிக்கை சில மாதங்களுக்கு முன்பு குறையத் தொடங்கியபோது, மிஷா மனச்சோர்வடைந்ததாக உணர்ந்தார், மேலும் மனச்சோர்வுக்கு ஆளானார். சமூக ஊடகங்களில் தனது மனநலப் போராட்டங்களின் வீடியோக்களை அவர் அடிக்கடி பகிர்ந்து கொண்டார், நகைச்சுவையின்…
