மதுரை: வங்கிகளில் நகைக் கடன்களை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிக்கும் முறையை ரத்து செய்யும் சுற்றறிக்கையை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பிச்சைராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வங்கி நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் கடந்த 2024 செப்.30-ல் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த சுற்றறிக்கையில், ஒரே பான் எண்ணை பயன்படுத்தி பல நகைக் கடன்கள் பெறுவது, நகைக் கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திரும்ப வைப்பது, புதுப்பிப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாகவும், பொது மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் இதுவரை நகைக் கடன்களை ஆண்டு முடிவில் வட்டியை மட்டும் திரும்ப செலுத்தி கடனை புதுப்பிக்கலாம். அப்படி செய்யும்போது அசல்…
Author: admin
தோல் பராமரிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு வரும்போது, விலையுயர்ந்த கிரீம்கள், லோஷன்கள் மற்றும் டேப்லெட்டுகளை வாங்க நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. பெரும்பாலான இயற்கை சுகாதார பொருட்கள் உங்கள் சமையலறையில் உள்ளன, அவற்றில் ஒன்று மஞ்சள் கொண்ட ஓக்ரா நீர். பிண்டி என்று அழைக்கப்படும் ஓக்ரா, குறிப்பாக கோடையில் ஒரு பிரதான காய்கறி, மற்றும் பல சுகாதார நன்மைகளுடன் வருகிறது. சில மஞ்சள் (ஹால்டி) தண்ணீருடன் இணைந்தால், இது பல வியாதிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆண்டிபயாடிக் ஆக மாறும், மேலும் மென்மையான, கண்ணாடி தோலைக் கூட கொடுக்கும்! மஞ்சள் நிறத்துடன் ஓக்ரா நீரைப் பயன்படுத்துவதன் 5 நன்மைகள் இங்கே ….
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்துள்ள தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இது பாதுகாப்பு தோல்வி என்றும் ஜம்மு காஷ்மீரை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா கூறுகையில், “இது பாதுகாப்புத் தோல்வி மற்றும் உளவுத்துறை குறைபாடு விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் எங்களின் வாழ்க்கை சிறப்பாக செல்வதை அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பியிருக்க மாட்டார்கள். எங்கள் மக்களுக்கிடையில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அதனால் அவர்கள் இந்தத் தாக்குதலை (பஹல்காம்) நடத்தியுள்ளனர். ஆனால் அது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை எவ்வாறு பாதிக்கும் என்ற உண்மையை அவர்கள் யோசித்துப் பார்க்கவில்லை. கடந்த பத்தாண்டுகளாக அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்ற, மசூதிகளை எரிக்க கதைகள் நடந்து வருகின்றன. நாங்கள் ஏற்கனவே அவைகளை எதிர்கொண்டு வருகிறோம். தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் தலைவர் ஜெனரல் ஆசிம் முனிர் இரண்டு நாடு கொள்கையைப் பேசித் தூண்டிவிட்டுள்ளார்.…
கேப்டனாகவும், வீரராகவும் ஷ்ரேயஸ் அய்யர் நல்ல முதிர்ச்சியடைந்து விட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். இதன் மூலம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுவிட்டது போல் ஆகிவிட்டது ஷ்ரேயஸ் அய்யருக்கு. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு இட்டுச் சென்றார். ஷ்ரேயஸ் அய்யரை ரிக்கி பான்டிங் அருகிலிருந்து வழிநடத்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அய்யரின் வளர்ச்சியைப் பார்த்துள்ளார் ரிக்கி பான்டிங். 2019 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்களில் ஷ்ரேயஸ் அய்யர் – பான்டிங் கூட்டணி பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிடல்ஸை அழைத்துச் சென்றது. 2020-ல் இறுதிப் போட்டியும் கண்டனர். இப்போது பஞ்சாப் கிங்ஸிலும் இவர்கள் இருவரது கூட்டணி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை வெகுவாகப் பிரகாசமாக்கியுள்ளது, “அனுபவம் ஸ்ரேயஸை பட்டைத் தீட்டியுள்ளது” என்கிறார் ரிக்கி பான்டிங். நேற்று சிஎஸ்கேவின் 190 ரன்களை அனாயசமாக சேஸ் செய்து கொடுத்தார் ஸ்ரேயஸ்…
Last Updated : 01 May, 2025 02:37 PM Published : 01 May 2025 02:37 PM Last Updated : 01 May 2025 02:37 PM புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் நாளை திறக்கப்படவுள்ளது | படங்கள்: எம்.சாம்ராஜ் புதுச்சேரி: புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு நாளை (மே 2) திறக்கப்படுகிறது. புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைபாட்டால் முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதனால் புதுவை பேருந்து நிலையம் கடலுார் சாலையில் உள்ள ஏஎஃப்டி மில் திடலில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. திறந்தவெளி திடல் என்பதால் பேருந்து நிலையத்துக்கு தேவையான வசதிகள்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவு உலகளவில் வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான குழப்ப நிலை சர்வதேச சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக, அதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (-1.22%) 75,365 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346 புள்ளிகள் குறைந்து (-1.49) 22,904 புள்ளிகளில் நிலைத்தது. லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். இதனால், உலோகம், மருந்து, ஐடி துறைகள் கணிசமான சரிவை…
ஒரு லானிஸ்டர் எப்போதுமே தனது கடன்களை செலுத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரியும் – ஆனால் நெட்மார்பில் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ரசிகர்களின் ஆரம்ப அணுகல் பொறுமையை திருப்பித் தருமா?சிம்மாசனத்தின் விளையாட்டு: கிங்ஸ்ரோட். அனைத்து முக்கிய மொபைல் இயங்குதளங்களிலும், பி.சி. முதல் வெளியீடு மற்றும் ஆரம்ப அணுகல் முதலில் மார்ச் 2025 இல் நீராவி ஆரம்ப அணுகல் மூலம் வெளியிடப்பட்டது, கிங்ஸ்ரோட் ஒரு ‘கலப்பு’ பயனர் மதிப்பீட்டை சந்தித்தது. சில வீரர்கள் அதன் அதிசயமான கதைசொல்லல் மற்றும் பழக்கமான வெஸ்டெரோஸ் அமைப்பைப் பாராட்டினாலும், விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு பணமாக்குதலை மையமாகக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மிகவும் மேம்பட்ட நீராவி மதிப்பாய்வு குறிப்பிட்டது: ‘இது ஸ்டெராய்டுகளில் ஒரு மொபைல் கேம் போன்றது, நல்ல வழியில் இல்லை.’ கேம் ஆப் த்ரோன்ஸ்: ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டினின் சின்னமான பிரபஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட அதிரடி-சாகச ஆர்பிஜி கிங்ஸ்ரோட் 21 மே 2025 அன்று முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது,…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் பொதுநல மனுவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சார்பில் வழக்கறிஞர் ஹதேஷ் குமார் சாஹு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். “இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்ததன் மூலம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு கைகோர்த்துள்ள ஒரு முக்கியமான தருணம் இது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் நமது படைகளின் மன உறுதியைக் குலைக்காதீர்கள்” என்று நீதிபதி என். கோடீஸ்வர்…
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கல்லூரி புதிய கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய திருமண மண்டபம், கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கொளத்தூர் பூம்புகார் நகரில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கல்லூரி கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 1) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்து…
அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக, அந்நாட்டு பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக யுத்தத்தை வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பல்வேறு பாதகங்கள் இருந்தாலும் கூட, ஜவுளித் துறையில் பெரும் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டார். ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவு உலகளவில் வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கையின்படி, சீனாவுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத…
