Author: admin

சென்னை: எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சிக்கு பின்னர், ராஜ்யசபா சீட் வழங்காவிட்டால் திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா என செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர் பதலளித்து கூறும்போது, “இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதற்காகவும் திராவிட இயக்கத்தை காப்பதற்காகவும் திமுகவோடு கரம் கோர்க்கிறோம் என கட்சியில் ஒரு மனதாக முடிவெடுத்து கூட்டணியில் இணைந்தோம். இது சித்தாந்ததத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. இந்த பதவி கொடுப்பார்களா அந்த பதவி கிடைக்குமா என கணக்கு போட்டுக் கொண்டு, கூட்டணி வைக்கவில்லை. எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் மதிமுக தொடரும்” என்றார். தொடர்ந்து, பிழைக்கு இடமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் என வைகோ தெரிவித்தார்.

Read More

திருச்சி: வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கும், அருகில் உள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கும் நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதி வாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்று தெரிவிக்காமல், பொத்தாம்பொதுவாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிஹார் உட்பட 6 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் காலத்தில் இதுபோன்று பலவிதமான அறிவிப்புகளை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம். எனினும், சாதி வாரி கணக்கெடுப்பை அறிவிப்புடன் நின்றுவிடாமல், முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்புக்கு என்றும் தயாராக உள்ளார். தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளோம்.…

Read More

சென்னை: சிபிஐ, வருமான வரி, புலனாய்வு, அமலாக்கத் துறை என துறையை வைத்து மிரட்டினாலும், கவலைப்பட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக எம்எல்ஏ இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், காவல் துறை மானிய கோரிக்கையில் நான் பதில் அளித்து பேசும்போது, தமிழகத்தின் வளர்ச்சி பற்றி கூறினேன். ‘‘ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம், இன்று கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது’’ என்றேன். இதில் ‘ஊர்ந்து வந்து’ என்பதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கூறினார். ‘ஊர்ந்து’ என்பது அவர்களுக்கு பிடிக்காவிட்டால், ‘தவழ்ந்து’ என்று மாற்றுங்கள் என்றேன். ஏற்கெனவே எஸ்டிபிஐ மாநாட்டில் பேசிய பழனிசாமி, ‘‘நான் தவழ்ந்து, தவழ்ந்து, படிப்படியாக வந்து முதல்வர் ஆகியுள்ளேன்’’ என்று பேசியுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது. இதை நேற்றுதான் பார்த்தேன். இல்லாவிட்டால்…

Read More

சென்னை: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்காக முதல் தேசிய மாநாடு மே 2, 3-ம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) டீன் கே.சாந்தாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை மருத்துவ மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் தேசிய மாநாடு மே 2, 3-ம் தேதிகளில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக 1-ம் தேதி (இன்று) முன் மாநாட்டு செயல்முறை விளக்க பட்டறை நடைபெறுகிறது. நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு ஒரு முழுமையான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதே மாநாட்டின் நோக்கமாகும். மாநாட்டின் கருப்பொருளான ‘பன்முக அணுகுமுறை’ என்பது மாநாட்டின் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்யும். இளங்கலை மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பின்போது பயிலும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில், அறிவியல் உரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சட்ட மருத்துவ பிரச்சினைகள், எதிர்கால தொழில்…

Read More

சென்னை: சென்னையில் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டிடங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், போப் பிரான்சிஸ் மறைவுக்கும், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உறுப்பினர்கள் பேசினர். அதன் விவரம்: நிலைக்குழு தலைவர் இளைய அருணா: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்படும் வேலைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்படும் வேலைகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும். மேயர் பிரியா: இதுதொடர்பாக அடுத்த மன்ற கூட்டத்துக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும். திமுக உறுப்பினர் க.வி.நாகவள்ளி (88-வது வார்டு):…

Read More

சென்னை: கோயில்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்து வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துள்ளனர். அவ்வாறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்மிக தலங்களில் இறையன்பர்கள் ஏற்கக்கூடிய நிகழ்ச்சியை தவிர்த்து, ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது உள்ளிட்ட எது நடந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தாங்கள் அரசியல் செய்ய களம் இல்லாமல் போய்விடும் என்பதால்தான், எல்.முருகன் போன்றவர்கள் எதை பார்த்தாலும் குற்றம்சாட்டுகின்றனர். பிரதமர் மோடி தமிழகம் வரும் ஒவ்வொரு முறையும் திமுகவுக்கு 3 சதவீத வாக்குகள் உயரும். எனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கும் தமிழகத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

தமிழகத்தில் இன்று (மே 2) முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 4, 5-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், 6, 7-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களிலும், 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று…

Read More

சென்னை: கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். ‘அயோத்தி’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஹரீஷ் கண்ணன், இசையமைப்பாளராக ஜென் மார்ட்டின், எடிட்டராக ஆர்.சி.பிரனவ் பணியாற்றியுள்ளனர். இதன் டீசர் அண்மையில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. ’திருடி’ என்ற இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ஆஷிக் ஏஆர் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ’தனியே நான் தவிச்சு நின்னேனே’ என்று தொடங்கும் இப்பாடல் கேட்பதற்கு இனிமையாகவும், காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

Read More

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏப்.30-ம் தேதி ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மங்களகரமான நாளான ஏப்.30-ம் தேதி புதன்கிழமை அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று, கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த பிப். 10-ம் தேதி ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதுவரையில் இல்லாத அளவுக்கு அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த 2025-26 நிதியாண்டில் ஒரேநாளில் அதைவிட அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் ஏப்.30-ம் தேதி ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.…

Read More

360 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு மேல், லாம்ப்ரேஸ் மிகப் பழமையான மீன்களில் ஒன்றாகும். அவர்கள் சுற்று, உறிஞ்சும் போன்ற வாய்களைக் கொண்டுள்ளனர், அவை மற்ற மீன்களைப் பிடிக்கவும் உணவளிக்கவும் பயன்படுத்துகின்றன. அவை மிகவும் ஈர்க்கக்கூடியதாகத் தெரியவில்லை என்றாலும், பூமியின் காலநிலை மற்றும் சூழலில் பெரிய மாற்றங்களைத் தக்கவைக்க லாம்ப்ரேஸ் முடிந்தது. ஆறுகள் மற்றும் ஏரிகளில் காணப்படும் இந்த பண்டைய உயிரினங்கள் பல இடங்களுக்கு ஏற்றவை, இன்னும் பல உயிரினங்கள் இறந்துவிட்டன.அவர்களின் வாழ்க்கைச் சுழற்சி தனித்துவமானது – லார்வாக்கள் பெரியவர்களாக மாறுவதற்கு முன்பு பல ஆண்டுகளாக ஆற்றங்கரைகளில் புதைக்கப்பட்டதால் தொடங்குகின்றன. சில இனங்கள் ஒட்டுண்ணி, மற்றவர்கள் பெரியவர்களாக உணவளிக்காது. அவற்றின் பழமையான தோற்றம் இருந்தபோதிலும், நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளில் லாம்ப்ரேஸ் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் முதுகெலும்பு பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுகளுக்காக ஆய்வு செய்யப்படுகிறது.

Read More