Author: admin

அரசு திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவரான தர்மா, எழுதி இயக்கியுள்ள படம், ‘ஆகக்கடவன’. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். வின்சென்ட், சி.ஆர். ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர். சாரா கலைக்கூடம் சார்பாக அனிதா லியோ, லியோ வெ. ராஜா தயாரித்திருக்கும் இதற்கு, சாந்தன் அன்பழகன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “நாம் பேசும் வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கூறும் படமிது. அதை வெறும் கருத்துக்கூறுவதாக இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லி இருக்கிறோம். இந்த மாதம் வெளியாகிறது” என்றார்.

Read More

சென்னை: பொது எதிரி​யான மக்​கள் விரோத திமுக அரசை வீழ்த்த பாஜக​வுடன் கூட்​டணி அமைத்த பழனி​சாமிக்கு பாராட்​டு​கள் என்று அதி​முக செயற்​குழு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அதி​முக செயற்​குழு கூட்​டம், அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் அவைத்​தலை​வர் அ.தமிழ்​மகன் உசேன் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில் மொத்​தம் 16 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. அதன் விவரம்: கடந்த தேர்​தலில் 525 தேர்​தல் வாக்​குறு​தி​களை அளித்​து, அவற்றை நிறைவேற்ற முடி​யாமல் தவறான தகவல்​களை தந்​து, அனைத்து தரப்பு மக்​களை​யும் ஏமாற்​றி, வஞ்​சிக்​கும் திமுக அரசுக்கு கண்​டனம். நீட் ரத்து விஷ​யத்​தில் கபடநாடகம் நடத்தி வரும் திமுக ஆட்​சி​யாளர்​களின் வாய்​ஜாலத்தை மாணவ, மாணவி​களும், மக்​களும் இனி​யும் நம்ப தயா​ராக இல்​லை. எனவே, மக்​களிட​மும் திமுக தலை​வர் ஸ்டா​லின் பகிரங்க மன்​னிப்பு கேட்க வேண்​டும். திமுக அரசின் மீது மக்​களுக்கு இருக்​கும் கடுங்​கோபத்தை மறைக்​கவே மொழி கொள்​கை, கல்வி கொள்​கை, கச்​சத்​தீவு மீட்​பு, தொகுதி…

Read More

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில்கள் கோடையில் 6 மாதங்கள் மட்டும் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். இந்நிலையில் உத்தராண்டில் வருடாந்திர சார்தாம் யாத்திரை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 3-வது கோயிலாக கேதார்நாத் கோயில் நேற்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இமயமலையில் சுமார் 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். மேலும் 11-வது ஜோதிர்லிங்க தலமாகும். நடை திறக்கும் விழாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது மனைவி கீதாவுடன் பங்கேற்றார். கோயில் கதவுகள் திறக்கப்பட்ட பிறகு,…

Read More

மலையாள திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார். அவருக்கு வயது 49. தமிழில் விக்ரம் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘காசி’. இந்தப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு பிரசாத். தொடர்ந்து மலையாளத்தில், ‘ரன்வே’,‘மாம்பழக்காலம்’, ‘பென் ஜான்சன்’, ‘லோகநாதன் ஐஏஎஸ்’, ‘லயன்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர், கல்லீரல் பிரச்சினை காரணமாகக் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.30 லட்சம் தேவைப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தினர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த விஷ்ணு பிரசாத்துக்கு மனைவி மற்றும் அபிராமி, அனானிகா என்ற மகள்கள் உள்ளனர்.

Read More

ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்​ப​தியை கொலை செய்​து, 15 பவுன் நகை மற்​றும் பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற குற்​ற​வாளி​களைப் பிடிக்க 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு மாவட்​டம் சிவகிரி அருகே​யுள்ள விளக்​கேத்தி பகு​தியில் உள்ள மேகரை​யான் தோட்​டத்​தைச் சேர்ந்தவர் ராம​சாமி (75). இவரது மனைவி பாக்​கி​யம் (65). இவர்​களது மகன் கவிசங்​கர், மகள் பானுமதி ஆகியோ​ருக்கு திருமண​மான நிலை​யில், ராம​சாமி தன் மனைவி பாக்​கி​யத்​துடன் தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார். இந்​நிலை​யில், முத்​தூரில் வசித்து வரும் கவிசங்​கர், ராம​சாமிக்கு போன் செய்​த​போது அவர் எடுக்​க​வில்லை. இதையடுத்​து, அரு​கில் வசிக்​கும் உறவினர்​களுக்கு தகவல் தெரி​வித்​து, தோட்​டத்​துக்​குச் சென்று பார்க்​கு​மாறு கூறி​யுள்​ளார். இதன்​படி, கவிசங்​கரின் உறவினர்​கள் தோட்​டத்​துக்​குச் சென்று பார்த்​த​போது, அங்கு ராம​சாமி மற்​றும் பாக்​கி​யம் ஆகியோர் கொலை செய்​யப்​பட்​டுக் கிடந்​தது தெரிய​வந்​தது. மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில் குமார், டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்​.பி. சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்​தில்…

Read More

தஞ்சாவூர்: அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது என்று இந்து மக்கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை வளவன்​புரத்​தில் வராஹி அம்​மன் கோயி​லில் இந்து மக்​கள் கட்சி சார்​பில் நேற்று நடை​பெற்ற சத்​ரு சம்​ஹார யாகத்​தில் கலந்​து​கொண்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பயங்​கர​வாதத்தை வளர்க்​கும் பாகிஸ்​தான் மற்​றும் பயங்​கர​வாதம் அழிய​வும், நமது நாட்​டின் ராணுவம் வலிமை பெற​வும், யுத்​த​த்தில் வெற்றி பெற​வும் தெய்வ பலம் எப்​போதும் அவசி​யம் என்​ப​தால், சத்​ரு சம்​ஹார யாகம் நடத்தி உள்​ளோம். தமிழகத்​தில் விவ​சா​யிகளின் நலன் காக்​கும் திட்​டங்​களுக்கு நிதி இல்லை என்​கிறார்​கள். ஆனால், கருணாநிதி பெயரில் பல்​கலைக்​கழகம், சிலை, மணிமண்​டபம் என்​றால் உடனே நிதி ஒதுக்​கீடு செய்​கிறார்​கள். நடிகர் விஜய் ரசிகர் மன்​றத்தை சார்ந்​தவர்​கள், வரவேற்பு என்ற பெயரில் கோவை மற்​றும் மதுரை​யில் பொது சொத்தை சேதப்​படுத்​தி, மக்​களுக்கு தொந்​தரவு…

Read More

லக்னோ: பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரி​யா​னா​வின் அம்​பாலா, மேற்​கு ​வங்​கத்​தின் ஹசி​மாரா பகு​தி​யில் உள்ள இந்​திய விமானப் படை தளங்​கள் சார்​பில், ‘ஆபரேசன் ஆக்​ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் பயிற்சி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரஃபேல் உள்​ளிட்ட போர் விமானங்​கள் பங்​கேற்று உள்​ளன. போர் பயிற்​சி​யின் ஒரு பகு​தி​யாக உத்தர பிரதேசத்​தின் கங்கை விரைவுச் சாலை​யில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்​ளிட்ட போர் விமானங்​கள் நேற்று தரை​யிறங்​கின. பின்​னர் அங்​கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்​றன. உ.பி.யின் மீரட், பிர​யாக்​ராஜை இணைக்​கும் வகை​யில் 1,047 கி.மீ. தொலை​வுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது. போர் உள்​ளிட்ட அவசர காலங்​களை கருத்​தில் கொண்டு இந்த சாலை​யில் ஷாஜ​கான்​பூர் மாவட்ட எல்​லைப் பகு​தி​யில் 3.5 கி.மீ. தொலை​வுக்கு போர் விமானங்​கள் தரை​யிறங்க சிறப்பு ஓடு​தளம் அமைக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்த ஓடு​தளத்​தில் இந்​திய விமானப்​படை​யின் மிகப்​பெரிய…

Read More

சென்னை: முழுமையான விசாரணைக்குப்பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ்கள் அளித்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க…

Read More

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனை விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.8,755-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.76,400-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி கிராம் ரூ.109-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,09,000-ஆக இருந்தது.

Read More

சென்னை: இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வெழுத நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் விண்​ணப்​பித்து உள்​ள​தாக கூறப்​படு​கிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்​தி, குஜ​ராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்​தம் 720 மதிப்​பெண்​ணுக்கு நடத்​தப்​படும். தேர்வு மையத்​தில் பின்​பற்ற வேண்​டிய நடை​முறை​கள் ஹால்​டிக்​கெட்​டில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளன. அதன்​படி தேர்வு மையத்​துக்​குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி தரப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பின் வருபவருக்கு எக்​காரணம் கொண்​டும் அனு​மதி தரப்​ப​டாது. இதுகுறித்த கூடு​தல் தகவல்​களை என்ற இணை​யதளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம் என்று என்​டிஏ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Read More