அரசு திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவரான தர்மா, எழுதி இயக்கியுள்ள படம், ‘ஆகக்கடவன’. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். வின்சென்ட், சி.ஆர். ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர். சாரா கலைக்கூடம் சார்பாக அனிதா லியோ, லியோ வெ. ராஜா தயாரித்திருக்கும் இதற்கு, சாந்தன் அன்பழகன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “நாம் பேசும் வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கூறும் படமிது. அதை வெறும் கருத்துக்கூறுவதாக இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லி இருக்கிறோம். இந்த மாதம் வெளியாகிறது” என்றார்.
Author: admin
சென்னை: பொது எதிரியான மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த பாஜகவுடன் கூட்டணி அமைத்த பழனிசாமிக்கு பாராட்டுகள் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: கடந்த தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களை தந்து, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். நீட் ரத்து விஷயத்தில் கபடநாடகம் நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களின் வாய்ஜாலத்தை மாணவ, மாணவிகளும், மக்களும் இனியும் நம்ப தயாராக இல்லை. எனவே, மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழி கொள்கை, கல்வி கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி…
டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில்கள் கோடையில் 6 மாதங்கள் மட்டும் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். இந்நிலையில் உத்தராண்டில் வருடாந்திர சார்தாம் யாத்திரை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 3-வது கோயிலாக கேதார்நாத் கோயில் நேற்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. இமயமலையில் சுமார் 11,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். மேலும் 11-வது ஜோதிர்லிங்க தலமாகும். நடை திறக்கும் விழாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது மனைவி கீதாவுடன் பங்கேற்றார். கோயில் கதவுகள் திறக்கப்பட்ட பிறகு,…
மலையாள திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார். அவருக்கு வயது 49. தமிழில் விக்ரம் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘காசி’. இந்தப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு பிரசாத். தொடர்ந்து மலையாளத்தில், ‘ரன்வே’,‘மாம்பழக்காலம்’, ‘பென் ஜான்சன்’, ‘லோகநாதன் ஐஏஎஸ்’, ‘லயன்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர், கல்லீரல் பிரச்சினை காரணமாகக் கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.30 லட்சம் தேவைப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தினர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த விஷ்ணு பிரசாத்துக்கு மனைவி மற்றும் அபிராமி, அனானிகா என்ற மகள்கள் உள்ளனர்.
ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து, 15 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன் கவிசங்கர், மகள் பானுமதி ஆகியோருக்கு திருமணமான நிலையில், ராமசாமி தன் மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், முத்தூரில் வசித்து வரும் கவிசங்கர், ராமசாமிக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, அருகில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, தோட்டத்துக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதன்படி, கவிசங்கரின் உறவினர்கள் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார், டிஐஜி சசிமோகன், ஈரோடு எஸ்.பி. சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்தில்…
தஞ்சாவூர்: அதிமுக -பாஜக கூட்டணி வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்கிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் வராஹி அம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்துகொண்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதம் அழியவும், நமது நாட்டின் ராணுவம் வலிமை பெறவும், யுத்தத்தில் வெற்றி பெறவும் தெய்வ பலம் எப்போதும் அவசியம் என்பதால், சத்ரு சம்ஹார யாகம் நடத்தி உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களுக்கு நிதி இல்லை என்கிறார்கள். ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம், சிலை, மணிமண்டபம் என்றால் உடனே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்கள், வரவேற்பு என்ற பெயரில் கோவை மற்றும் மதுரையில் பொது சொத்தை சேதப்படுத்தி, மக்களுக்கு தொந்தரவு…
லக்னோ: பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரியானாவின் அம்பாலா, மேற்கு வங்கத்தின் ஹசிமாரா பகுதியில் உள்ள இந்திய விமானப் படை தளங்கள் சார்பில், ‘ஆபரேசன் ஆக்ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்று உள்ளன. போர் பயிற்சியின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தின் கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் நேற்று தரையிறங்கின. பின்னர் அங்கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்றன. உ.பி.யின் மீரட், பிரயாக்ராஜை இணைக்கும் வகையில் 1,047 கி.மீ. தொலைவுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. போர் உள்ளிட்ட அவசர காலங்களை கருத்தில் கொண்டு இந்த சாலையில் ஷாஜகான்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 3.5 கி.மீ. தொலைவுக்கு போர் விமானங்கள் தரையிறங்க சிறப்பு ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓடுதளத்தில் இந்திய விமானப்படையின் மிகப்பெரிய…
சென்னை: முழுமையான விசாரணைக்குப்பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ்கள் அளித்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க…
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனை விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.8,755-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.76,400-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி கிராம் ரூ.109-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,09,000-ஆக இருந்தது.
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
