புதுடெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேற்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல முக்கிய நிகழ்ச்சிகளை பாஜக தொடங்கி உள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று ஜுன் 12 முதல் 14 வரை, விக் ஷித் பாரத் சங்கல்ப்சபை கூட்டங்கள், கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் சிறுபான்மையினரை கவரும் உத்தியை நேற்று முதல் பாஜக கையாள தொடங்கி உள்ளது. இதில், உ.பி.யின் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்துவாராக்கள் முன்பாக சவுபால் எனும் சிறப்புக் கூட்டங்களை பாஜக நடத்துகிறது. பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனை விளக்க விவாதங்கள் இதில் நடைபெற உள்ளன. இவற்றில் குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர்…
Author: admin
சென்னை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை தகுதியான நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி , 2024-25ம் கல்வியாண்டில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கடந்த மார்ச் வரை மதிப்பூதியம் பெறும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல், 2025-26-ம் கல்வியாண்டில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கும் வகையில் ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொகுப்பூதியத்தில்…
வாஷிங்டன்: “மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று. அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரியாக ஒருவார காலத்துக்கு முன் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட ட்ரம்ப் – மஸ்க் தற்போது ஆவேசம் தனிந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஏற்கெனவே ட்ரம்ப் – மஸ்க் மோதலில் வார்த்தைகள் தடித்தபோது, பள்ளிக் குழந்தைகள் மோதலைப் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஒரே வாரத்தில் இருவரும் சமரச பாதைக்கு திரும்பியதும் பகடிக்குள்ளாகி இருக்கிறது. ‘ஒரு வல்லரசின் அதிபரும், ஒரு பெரும் பணக்காரரும் கேலிக்கூத்து செய்கின்றனர்’ என்று நெட்டிசன்கள் நகையாடி வருகின்றனர். மஸ்க் Vs ட்ரம்ப் – நடந்தது என்ன? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் செயல்திறன் துறையை (டிஓஜிஇ – DOGE) தொழிலதிபர் எலான் மஸ்க் கவனித்து வந்தார். ஆனால், அவரது…
2021 தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக அமைச்சர்களில் முக்கிய மானவர் கே.சி.வீரமணி. ஜோலார்பேட்டை தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற வீரமணி, இரண்டு முறையும் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். அந்த செல்வாக்கில் கடந்த முறையும் இங்கு போட்டியிட்டார். ஆனால், மு.க.ஸ்டாலினே இங்கு வந்து போட்டியிட்டாலும் வீரமணியை வீழ்த்துவது கடினம் என்று சொல்லப்பட்ட நிலையில், வெறும் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜியிடம் தோற்றுப் போனார் வீரமணி. தொகுதி முழுவதும் உறவினர்கள், நண்பர்கள் என செல்வாக்கான மனிதராக வலம் வந்த கே.சி.வீரமணியின் அரசியல் செல்வாக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொஞ்சம் சரிய ஆரம்பித்தது. இருந்த போதும் நம்பிக்கையோடு கடந்த தேர்தலில் வாக்குக் கேட்டார். திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரான இவரை எதிர்த்து தொகுதிக்கு புதியவரான வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் க.தேவராஜியை களமிறக்கியது திமுக. அமைச்சரை தோற்கடித்தால் அமைச்சர் ஆகலாம் என்ற நம்பிக்கையில் கிராமங்களில் கூட…
உலகளவில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது பெண்களிடையே மிகவும் பொதுவான நான்காவது புற்றுநோயாகும், 2022 ஆம் ஆண்டில் (WHO) சுமார் 660,000 புதிய வழக்குகள் உள்ளன. இது பொதுவாக காலப்போக்கில் மெதுவாக உருவாகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது புற்றுநோயாகும், இது கருப்பை வாயின் உயிரணுக்களில் தொடங்குகிறது. கருப்பை வாய் கருப்பையின் (கருப்பை) கீழ், குறுகிய முடிவு. கருப்பை வாய் கருப்பையை யோனி (பிறப்பு கால்வாய்) உடன் இணைக்கிறது. காலகட்டத்தில், செல்கள் அழிக்கப்படாவிட்டால் அல்லது அகற்றப்படாவிட்டால், அசாதாரண செல்கள் புற்றுநோயாக மாறி, கர்ப்பப்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மேலும் ஆழமாக பரவத் தொடங்கலாம்.வித்தியாசமாக, ஆரம்பத்தில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு பொதுவாக அறிகுறிகள் இல்லை, இதைக் கண்டறிவது கடினம். புற்றுநோய் பரவிய பிறகு அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. பொதுவாக நிகழும் சில அறிகுறிகளைப் பார்ப்போம். ((ஆதாரம்: தேசிய புற்றுநோய் நிறுவனம்)அசாதாரண யோனி இரத்தப்போக்குகர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முதல் மற்றும் அடிக்கடி அறிகுறிகளில் ஒன்று…
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏ.க்கள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் கடந்த மே மாதம் குற்றம்சாட்டினார். இதற்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநபா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் நாகேந்திராவை கைது செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பெல்லாரி காங்கிரஸ் எம்.பி. துக்கா ராம், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நரா பாரத் ரெட்டி, நாகேந்திரா, ஜி.என்.கணேஷ் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு பின்னணி பாடகி மங்ளி. இவர் தனி இசை ஆல்பங்களை அதிகமாக வெளியிட்டுப் பிரபலமானார். பின்னர் தெலுங்கு சினிமாவில் அவருக்குப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இவரது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு ஹைதராபாத் அருகே உள்ள ஈர்லபல்லி எனும் இடத்தில் உள்ள சொகுசு பங்களாவில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்தார். இதில் இவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சுமார் 50 பேர் கலந்து கொண்ட இந்தக் கொண்டாட்டம் விடிய, விடிய நடந்தது. இதனால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் நேற்று அதிகாலை 3 மணியளவில் ‘பார்ட்டி’ நடந்த இடத்துக்குச் சென்றனர். அங்கு, வெளிநாட்டு மதுபானங்களும், கஞ்சாவும் உபயோகிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அனைவரிடமும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாடகி மங்ளி உட்பட பலர் கஞ்சா உபயோகித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ரங்காரெட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்ட பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.399.81 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 102 திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.975.63 கோடி மதிப்பீட்டில் 108 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்கு தேர்வான 49 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வர பேட்டரி வாகனம், குப்பை பெருக்கும் இயந்திர வாகனங்கள், நாய் பிடிக்கும் வாகனங்களை தொடங்கி வைத்தார். ஊக்கத் தொகை வழங்கல்:…
புதுடெல்லி: வழக்கு விசாரணையின்போது பெண் நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய வழக்கறிஞருக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2015-ம் ஆண்டு கிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கு நடைபெற்றது. அப்போது, கட்சிக்காரருக்கு ஆதரவாக வாதடிய வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோட், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக கோபமடைந்து பெண் விசாரணை நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். மேலும், அந்த பெண் நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதையடுத்து, பெண் நீதிபதி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கறிஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 18 மாத சிறைதண்டையும், மேலும், இரண்டு குற்றங்களுக்காக தலா 3 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. கூடுதல் அமர்வு மேல் முறையீட்டில் தண்டனையை உறுதி செய்ததுடன், பெண் நீதிபதிக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கவும்…
லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்குச் சுருட்டியதில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் இதற்கு முதல் தொடரில் பும்ரா அண்ட் கோ ஆஸ்திரேலிய பேட்டிங்கை கலங்கடித்ததனால் ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா பேட்டிங் சரிவுக்கு ஆஸ்திரேலியாவின் துல்லிய பவுலிங் மட்டும் காரணமல்ல. ஐசிசி ஃபியூச்சர் டூர் புரொகிராம் என்னும் ஷெட்யூலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே அதிக டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. மற்றபடி தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், மே.இ.தீவுகள் போன்ற நாடுகளுக்கு அவ்வளவாகப் போட்டிகள் நடைபெறுவதில்லை ஒன்று அவர்கள் அவர்களுக்குள் ஆடுகிறார்கள், அல்லது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் குறைந்த அளவிலேயே மோதுகின்றனர். நல்ல தரமான பிட்சில் தரமான பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடுவதற்கு கொஞ்சமாவது அவர்களுடன் ஆடும் பழக்கம் வேண்டும். அந்தந்த நாட்டு உள்நாட்டுக் கிரிக்கெட்டும் தனியார்…
