சம்பவத்திலிருந்து கணம் (@கோஸ்ட் சைபர் 04) செவ்வாய்க்கிழமை மாலை சிகாகோ நகரத்தில் உள்ள குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐ.சி.இ) துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டத்தில் ஒரு கார் மோதியதை அடுத்து 66 வயதான ஒரு பெண் கை மற்றும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது வைரலாகிய ஒரு வீடியோவில், சமூக ஊடக தளங்களில், ஒரு மெரூன் செடான் எதிர்ப்பாளர்கள் மூலம் வேகமாக வருவதைக் காணலாம், கிட்டத்தட்ட பல பாதசாரிகளைத் தாக்கும். ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் காட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பு சிறிது நேரத்தில் துரத்துவதைக் காண முடிந்தது.ஹீதர் பிளேர் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வீட்டிற்கு திரும்பும் வழியில் தெருவில் பீப்பாய் இருக்கும் போது அவளைத் தாக்கி, இடது கையை முறித்துக் கொண்டார். சிகிச்சைக்காக அவர் வடமேற்கு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பிளேர் சிபிஎஸ் நியூஸிடம் கூறினார்.”இது ஒரு வன்முறைச் செயல் என்று நான் நினைத்தேன்,…
Author: admin
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 விமானம் விபத்துக்குள்ளானது என்று அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1.10 மணி அளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி உள்ளது. விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில், 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானம் மதியம் 1.10 மணி அளவில் இந்த விபத்தை அடுத்து…
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள வரதராஜநகர் – மணவாளநகர் பாலத்தில் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். ஆகவே, அப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்ததாவது: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், வரதராஜநகர்- மணவாளநகர் ஆகிய பகுதிகளுக்கு இடையே கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 300 மீட்டர் நீளமுள்ள பாலம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இப்பாலத்தையும், பாலம் அருகே இருந்த ரயில்வே கடவுப்பாதையையும் கடந்துதான் திருவள்ளூரிலிருந்து, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி மற்றும் சென்னை பகுதிகளுக்கு, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் சென்னையிலிருந்து, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் திருவள்ளூரை கடந்து…
இந்த நாட்களில் ஆளுமை சோதனைகள் மிகவும் பிரபலமாகிவிட்டன, இது அவர்களின் வேடிக்கையான மற்றும் எளிதான வழியை மக்களை ஒரு வேதனையில் டிகோட் செய்வதற்கான வழிமுறையாகும். எப்படி? இவை எளிய சோதனைகள், பொதுவாக உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, அவை சில காரணிகளைப் பொறுத்து ஒரு நபரின் உண்மையான பண்புகளை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன. உதாரணமாக, இந்த குறிப்பிட்ட சோதனை இயற்கை கருப்பொருள், மேலும் மக்கள் உங்களை நம்பியிருப்பதற்கான தனித்துவமான காரணத்தை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. சோதனை ஆறு வண்ணமயமான இலைகளின் படத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் நீங்கள் நிறைய தேர்வுசெய்ததைப் பொறுத்து உங்களைப் பற்றி டிகோட் செய்யப்படலாம். புதிரானது, இல்லையா? இந்த சோதனைக்கு- இது முதலில் பகிரப்பட்ட okdiario.com- கண்களை மூடிக்கொண்டு, ஓய்வெடுக்கவும், மேலே உள்ள படத்தைப் பாருங்கள். நீங்கள் மிகவும் விரும்பும் இலைகளைத் தேர்ந்தெடுத்து, உங்களைப் பற்றி வெளிப்படுத்துவதைப் படியுங்கள்:1. நீங்கள் இலை 1 ஐ எடுத்தால், இதன் பொருள் …ஆழமான, உண்மையான இணைப்புகளை…
புது டெல்லி: முதலீட்டாளர்களிடம் ரூ.2,700 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தி வருகிறது. குஜராத்தின் தோலேரா நகரில் அதிக வருமானம் மற்றும் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து, முதலீட்டாளர்களை ரூ.2,700 கோடி அளவுக்கு ஏமாற்றியதாக நெக்ஸா எவர்கிரீன் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகார்களின் பேரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெக்ஸா எவர்கிரீன் என்ற நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெக்ஸா எவர்கிரீன் நிறுவனம் மீது ராஜஸ்தான் காவல்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் சிகார், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனு, குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி…
சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அடம் பிடிப்பது வரலாற்றின் மீதோ, அறிவியல் மீதோ இருக்கும் அக்கறையினால் அல்ல. ஆர்.எஸ்.எஸ்-பாஜக பரிவாரம் புராணங்களின் அடிப்படையிலும், புனைகதைகளின் அடிப்படையிலும் கட்டமைக்க முயல்கிற திணிப்பிற்கு மாறாக கீழடி அகழாய்வின் முடிவுகள் வெளிவந்து கொண்டே இருப்பதுதான். கீழடி அகழாய்வில் மண் அள்ளிப்போடும் நோக்கத்துடன் அகழாய்வு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமிற்கு மாற்றப்பட்டார். பிறகு வந்த ஸ்ரீராம் என்ற அதிகாரி கீழடியில் மேற்கொண்டு ஆய்வு செய்ய எதுவும் இல்லை என்றார். ஒன்றிய அகழாய்வுத்துறை நிதி ஒதுக்க மறுத்து ஆய்விலிருந்து விலகிக் கொண்டது. இந்நிலையில் தமிழக தொல்லியல்துறை நடத்தும்…
லண்டன்: “வங்கதேச இடைக்கால அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால் எப்போதும் ஏதோ தவறாகிவிடுகிறது” என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் குழுவின் இயக்குநர் பிரான்வென் மேடோக்ஸ் உடன், முகமது யூனுஸ் உரையாடினார். அப்போது, “பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு அனுப்பிய ராஜதந்திர குறிப்பை மீண்டும் நினைவூட்டுவீர்களா?” என பிரான்வென் மேடோக்ஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முகமது யூனுஸ், “அது தொடரும். முழு செயல்முறையும் மிகவும் சட்டப்பூர்வமாகவும், மிகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடன் சிறந்த உறவை உருவாக்க விரும்புகிறோம். அது எங்கள் அண்டை நாடு. அவர்களுடன் எந்த அடிப்படை பிரச்சினையும் இருக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இந்திய பத்திரிகைகளில் இருந்து வரும் அனைத்து போலி செய்திகளாலும் ஒவ்வொரு முறையும் எப்படியோ விஷயங்கள் தவறாகிவிடுகின்றன. அவர்களுக்கு, உயர்மட்ட…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 6.5 சென்ட் நிலத்தை உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் அதை திருப்பித் தரக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என, நில உரிமையாளர்கள் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து, இரண்டு மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு 2023 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சென்னை பெருநகர…
பி.டி.எஸ்ஸின் கிம் தாஹியுங் (வி) இராணுவத்திலிருந்து திரும்பி வந்துள்ளார், அதேபோல் அவரது ஒப்பிடமுடியாத சூப்பர் ஸ்டார் ஆராவும் இருக்கிறார். ஜூன் 10 அன்று அவர் வெளியேற்றப்பட்டதிலிருந்து, குழுவின் தலைவர் கிம் நம்ஜூன் (ஆர்.எம்) உடன், ரசிகர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவர்கள் அதில் இருக்கும்போது, அவர்களும் விரைவாக கண்காணிக்க வேண்டும் – உடனடியாக வாங்கவும் – அவர் பயன்படுத்துவதைக் கண்டார். ஆடம்பர பாகங்கள் முதல் அன்றாட அத்தியாவசியங்கள் வரை, தாஹியுங் தொடுதல்கள் அலமாரிகளில் இருந்து பறக்கின்றன.BTS இன் V இன் ஒப்பிடமுடியாத விற்பனை சக்தி அவரது இராணுவ வெளியேற்றத்திற்கு இடமளிக்கிறது V போக்குகளை அமைப்பதில் புதியவரல்ல, பிராண்டுகள் அதை நன்கு அறிவார்கள். செலின் மற்றும் கார்டியர் போன்ற உலகளாவிய பெயர்களின் முகமாக, கிம் தாஹியுங் நீண்ட காலமாக பேஷன் உலகில் மிகவும் பிடித்த அருங்காட்சியகமாக இருந்து வருகிறார். இப்போது, இராணுவத்திலிருந்து புதியது, அவர் ஒரு விளம்பர பிரச்சாரத்தில்…
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பேருந்தில் வருபவர்கள் மேலூர் பிரதான சாலையில் இறங்கி சுமார் அரை கி. மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் மாற்று திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதை தவிர்க்க பேட்டரி கார் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சம் செலவில் இரு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு காரில் ஓட்டுநர் உட்பட்ட 6 பேர் பயணம் செய்யலாம். பேட்டரி கார் சேவையை மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி எஸ். எம். சுப்புரமணியம் இன்று காலை தொடங்கி வைத்தார். கூடுதல் பதிவாளர் ஜெனரல் அப்துல் காதர், நிர்வாக பதிவாளர் பிரேம் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு பேட்டரி கார்களும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பிரதான வாயில் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும். இதை…
