Author: admin

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய கோர விபத்து இது. வேகமாக வளர்ந்து வரும் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டது ஏர் இந்தியாவின் 171 என்ற போயிங் ரக விமானம். கேப்டன் சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர் ஆகியோர் விமானத்தை இயக்கினர். போயிங் 787-8 ட்ரீம்லைனர் எனும் இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் நாட்டையும், 7 பேர் போர்ச்சுகீஸ் நாட்டையும், ஒருவர் கனடாவையும் சேர்ந்தவர்கள். விமானம் சரியாக 1.38…

Read More

கோவை: “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பை மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்,” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் என்ன வாக்குறுதிகள் அளித்தோம். அவற்றை எவ்வாறு நிறைவேற்றி உள்ளோம் என்பதை மக்களிடம் தெரிவிக்கவே இந்நிகழ்வு. 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை படித்து பாருங்கள் என நாங்கள் கூறுகிறோம். ஆனால் திமுக-வில் யாரும் இவ்வாறு கூற மாட்டார்கள். 2014-ல் அளித்த வாக்குறுதி, முழுவதுமாக நிறைவேற்றியிருக்கிறோம். அதில் பொது சிவில் சட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை இந்திய மக்களுக்கு கொடுப்போம் என கூறினோம். கருப்பு பணத்தை மீட்பதற்காக எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தோம். கடந்த…

Read More

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் இருந்து லண்டனுக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பயணி ஒருவர் உயிர் பிழைத்ததை அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் உறுதி செய்துள்ளார். “11ஏ இருக்கையில் பயணித்த பயணி ஒருவரை போலீஸார் உயிரோடு இருப்பதை அடையாளம் கண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என அவர் தெரிவித்தார். 11ஏ இருக்கையில் பயணித்த பயணியின் பெயர் ரமேஷ் விஷ்வகுமார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 38 என்ற தகவலும் வெளியாகி உள்ளது. குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். நடந்தது என்ன?- விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு…

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தாதது கண்டிக்கத்தக்க ஒன்று என அதிமுக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பட்டியலினத்தவர், சமுதாயத்தில் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களின் ஏற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அம்பேத்கரின் எண்ணப்படி, சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகள் தரமாக கல்வி பயில வேண்டும் என மத்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் ஏழை, எளிய குழந்தைகள் தரமான கல்வி பயில 25 சதவீத மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவச கல்வியை வழங்க வேண்டும். இதற்காக கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும். தமிழகத்தில் ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரமான தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத…

Read More

மும்பை: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதை டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக டாடா குழும சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட தகவல்: ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்கள் துயரத்தை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகள் இல்லை. தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள், காயமடைந்தவர்கள் சார்ந்தே எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம். விபத்தில் சேதமடைந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில் எங்களது பங்கு இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உரிமை டாடா குழுமத்தின் வசம் உள்ளது. கடந்த 2021-ல் இந்த…

Read More

திண்டுக்கல்: “திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு,” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் அருகே ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு கிராமத்தில் ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 12) நடைபெற்றது. பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது: “திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்கள் வேண்டும் என கேட்பது அவர்களது உரிமை. கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கொடி தூக்கவில்லை, மிரட்டவில்லை அவர்களின் உரிமையை கேட்கின்றனர். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். தண்ணீர் இல்லா பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள்?…

Read More

நீங்கள் எப்போதாவது ஒரு உடற்பயிற்சி கூடத்தில் காலடி வைத்திருந்தால் அல்லது ஆன்லைனில் உடற்பயிற்சி உள்ளடக்கத்தைப் பின்பற்றினால், கிரியேட்டினைச் சுற்றியுள்ள மிகைப்படுத்தலை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருக்கிறீர்கள். இது உடற்பயிற்சி சப்ளிமெண்ட்ஸின் OG போன்றது -வலிமை, தசை வளர்ச்சி மற்றும் மூளை சக்தியுடன் கூட உதவுகிறது. ஆனால் எப்போதுமே ஒரு நீடித்த கவலை உள்ளது: கிரியேட்டின் உங்கள் சிறுநீரகங்களுடன் குழப்ப முடியுமா?குறுகிய பதில்? ஆரோக்கியமான மக்களுக்கு – இது முற்றிலும் பாதுகாப்பானது. ஆனால், எதையும் போலவே, சில நுணுக்கங்கள் உள்ளன.கிரியேட்டின் என்றால் என்ன?உங்கள் உடல் உண்மையில் கிரியேட்டினை சொந்தமாக ஆக்குகிறது. இது கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கணையம் ஆகியவற்றில் தயாரிக்கப்பட்டு, உங்கள் தசைகளில் சேமிக்கப்படுகிறது. நீங்கள் விரைவாக, வெடிக்கும் விஷயங்களைச் செய்யும்போது, ​​எடையை உயர்த்துவது அல்லது தூக்குவது போன்றவை, உங்கள் தசைகள் படைப்பின் வேக ஆற்றலுக்காக பயன்படுத்துகின்றன. சப்ளிமெண்ட்ஸ் (வழக்கமாக கிரியேட்டின் மோனோஹைட்ரேட்) அந்த இருப்புக்களைத் தூண்டுகிறது, இதனால் நீங்கள் கடினமாகச் சென்று விரைவாக…

Read More

அகமதாபாத்: அகமதாபாத் நகரில் இன்று ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களின் உயிரை காக்க ரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA). இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான விபத்து காரணமாக காயமடைந்த பி.ஜி மருத்துவக் கல்லூரியை சேர்ந்த சுமார் 60 எம்பிபிஎஸ் மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உடல்நலன் சீராக உள்ளது. 4 முதல் 5 மாணவர்களை காணவில்லை. மேலும், சூப்பர் ஸ்பெஷலிஷ்ட் மருத்துவர்கள் 3 முதல் 4 பேர் காணவில்லை என்றும், விமானத்தில் பயணித்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உயிரை காக்கும் வகையில் ரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் யு.என். மேத்தா இருதயவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்,…

Read More

சென்னை: “மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்? குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 போதுமா?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை; நெல்லுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ள கொள்முதல் விலையும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக எதையும் செய்யாமல் துரோகம் செய்வதை மட்டுமே தமிழக அரசு தொழிலாகக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. குறுவைப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத்…

Read More

இப்போதெல்லாம் புற்றுநோய் பெருகிய முறையில் பொதுவானதாகி வருகிறது, 5 பேரில் 1 பேர் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் புற்றுநோயைப் பெற வாய்ப்புள்ளது. புற்றுநோயைக் கண்டறிவதில் மரபணுக்களும் சுற்றுச்சூழலும் கடுமையான பங்கைக் கொண்டிருந்தாலும், சில உணவுப் பழக்கவழக்கங்கள் மரபணு வரலாறு இல்லாமல், சாதாரண தனிநபரில் புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். இந்த பழக்கங்களைப் புரிந்துகொள்வதும் சிறிய மாற்றங்களைச் செய்வதும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய நான்கு பொதுவான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் இங்கே … (ஆதாரம்: ஃபிட்வித்ஷில்பாச்சாவ்லா)பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கிறதுபழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பிய சூப்பர்ஃபுட்கள் ஆகும், அவை உங்கள் உடலை உயிரணுக்களில் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கும்போது, ​​உங்கள் உடல் வீக்கத்தை எதிர்த்துப் போராடுவது கடினம் மற்றும் டி.என்.ஏ சேதத்தைத் தடுப்பது இரண்டும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.பழங்கள்…

Read More