Author: admin

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ராணுவ வீரர்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாகனம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில், அந்த வாகனத்தின் பயணம் செய்த அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், போலீஸார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ராணுவ வாகனம் முழுவதுமாக நொறுங்கிவிட்டது.

Read More

நாமக்கல்: சர்வர் கோளாறு காரணமாக திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று மேற்குறிப்பிட்ட இரு மையங்களுக்கும் வந்திருந்தனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் தீவிர பரிசோதனைக்குப் பின் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 420 மாணவ, மாணவியருக்கு பின் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலதாமத்தை தவிர்க்க பயோமெட்ரிக் சிஸ்டம் இல்லாமலே மாணவ, மாணவியர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்…

Read More

சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று (மே.4) தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று மதியத்துக்கு மேல் திடீரென பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில், கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (மே.4, 5 தேதிகளில்) கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் ஒருசில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும்…

Read More

திண்டுக்கல்: கொடைக்கானல் கீழமலைப்பகுதி தாண்டிக்குடியில் தவெக தலைவர் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’ நடத்தினார். அவரைக் காண சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்த மலைக்கிராம மக்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி மலைக் கிராமமான தாண்டிக்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் தவெக தலைவர் நடிக்கும் படப்பிடிப்பு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மே.1-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த விஜய், அங்கிருந்து கொடைக்கானல் கீழ் மலைப் பகுதி கிராமமான தாண்டிக்குடிக்கு கார் மூலம் சென்றடைந்தார். மே 2-ம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றார். அன்று அப்பகுதியில் மழை பெய்தது. முதல் நாள் மக்கள் அவரைக் காண காத்திருந்தபோதும் படப்பிடிப்பு முடிந்து காருக்குள்ளே அமர்ந்து பயணித்தார். இந்நிலையில் நேற்று மே 3-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் ஓட்டலுக்கு திரும்பும்போது திடீரென திறந்த ஜீப்பில் பயணித்து ‘ரோடு ஷோ’ நடத்தினார். தாண்டிக்குடி மலைக்…

Read More

இது அழகாக அழகாக இருக்கிறதுஅதன் நீண்ட, நேர்மையான, வாள் வடிவ இலைகள் மற்றும் பச்சை-வெள்ளை வடிவங்களுடன், பாம்பு ஆலை வீட்டிற்குள் ஒரு அழகியல் மற்றும் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. இது நவீன, மிகச்சிறிய இடங்களில் அழகாக பொருந்துகிறது, மற்றும் படுக்கையறை முதல் பால்கனியில் வரை, முழுவதும் அழகாக இருக்கிறது.

Read More

மீண்டும் பெரிய நடிகர்களுடன் இணைந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம். ‘வேட்டையன்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த நிறுவனம் லைகா. இந்நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் தோல்வியை தழுவியது. இதனால் படத்தயாரிப்பினை சில காலத்துக்கு நிறுத்தியது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தினை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்நிறுவனத்தின் பொருளாதார சிக்கல்கள் அனைத்து சரி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் படங்கள் தயாரிப்பில் களமிறங்கவுள்ளது லைகா நிறுவனம். இதற்காக மகாவீர் ஜெயின் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. தொடர்ந்து ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம். விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

Read More

கோவை: “தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் தொடரும் நிலையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி திமுகவினர் தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.” என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், ‘நலம்’ இலவச மருத்துவ முகாம், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்தது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். புலியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்ட முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகளிர் நல மருத்துவம், கண் நலம் மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆகிய மருத்துவ பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: கோவை தெற்கு சட்டப்பேரவை…

Read More

இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் இளவரசர் ஹாரி 2018 இல் மேகன் மார்க்கலை மணந்ததிலிருந்து, இங்கிலாந்து அரச குடும்பத்தினருடனான அவரது சமன்பாடுகள் கீழ்நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது. 2020 ஆம் ஆண்டில், மூத்த உழைக்கும் அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் தங்கள் பாத்திரங்களில் இருந்து விலகியதாக அறிவித்தபோது ஹாரியும் மேகனும் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இருவரும் முதன்முதலில் கனடாவிற்கும் பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மாண்டெசிட்டோ வீட்டிற்குச் சென்றனர், அங்கு அவர்கள் இப்போது தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்- ஆர்ச்சி மற்றும் லிலிபெட். இருப்பினும், அப்போதிருந்து, இளவரசர் ஹாரி தனது குடும்பத்தை பகிரங்கமாக பேட்மவுத் செய்தார், மேலும் ஒரு வெடிக்கும் நினைவுக் குறிப்பை ‘ஸ்பேர்’ எழுதினார்- இவை அனைத்தும் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் தனது சமன்பாடுகளை மேலும் கஷ்டப்படுத்தின. இப்போது, ​​இங்கிலாந்துக்குச் செல்லும்போது அரசாங்கத்திடமிருந்தும் அவரது குடும்பத்தினருக்கும் பொலிஸ் பாதுகாப்பைக் கோரி நீதிமன்ற வழக்கையும் இழந்தார்- இது அரச குடும்பத்தின் உழைக்கும் உறுப்பினர்களுக்கு…

Read More

கோவா மாநில கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கோவா மாநிலத்தின் ஷிர்காவ் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ தேவி லைராயி கோயில் அமைந்துள்ளது. இது, கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஸ்ரீ தேவி லைராயி கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்க கோவா மட்டுமன்றி, மகாராஷ்டிரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீதேவி லைராயி கோயிலில் குவிந்து பூக்குழி இறங்கினர். மலைக்குன்றின் மீது கோயில் அமைந்திருக்கிறது. குறுகிய மலைப் பாதை வழியாக பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். அதேநேரம் தேவியை வழிபட்ட பக்தர்கள் மலைப் பாதை வழியாக…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்” என்று ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது காலித் ஜமாலி ஆர்டி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வெறித்தனமான ஊடகங்களும், அங்கிருந்து வரும் சில பொறுப்பற்ற அறிக்கைகளும் எங்களை சில கட்டாயத்துக்கு நிர்பந்திக்கின்றன. அங்கிருந்து கசிந்துள்ள சில தகவல்கள் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்தியா – பாகிஸ்தான் போர் என்று வரும் போது நாங்கள் எண்ணிக்கை பலம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாங்கள் வழக்கமான பதிலடியோடு, அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். பாகிஸ்தான் மக்களின் முழு ஆதரவுடன் ராணுவம் முழு சக்தியையும் வெளிப்படுத்தும்.” என்றார். முன்னதாக, கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்…

Read More