Author: admin

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஓரிரு இடங்களிலும், வரும் 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும், 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய…

Read More

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தின் அருகில் இன்று விமானம் விபத்துக்குள்ளான நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சமூக ஊடக தளங்களில் தனது சுயவிவரப் படத்தை கருப்பு வண்ணத்தில் மாற்றியுள்ளது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர். விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெகானி பகுதியில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கினர். ஏர் இந்தியா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில், “அகமதாபாத் – லண்டன் கேட்விக் விமானம் AI171, இன்று…

Read More

பரந்​தூர் விமான நிலை​யம் அமைய​வுள்ள ஏகனாபுரம் கிராமத்​தில் கட்​டிட சீரமைப்​பு பணி​கள் உள்பட பல்​வேறு பணி​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக அப்பகுதி மக்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். இதனைத் தொடர்ந்து தங்​கள் கிராமத்​தில் உள்ள பழுதடைந்த நியாய விலைக் கடையை அவர்​களே சரி செய்​துள்​ளனர். காஞ்​சிபுரம் அருகே உள்ள பரந்​தூரில் 5476 ஏக்​கர் பரப்​பள​வில் பசுமை வழி விமான நிலை​யம்​ அமைய உள்​ளது. மொத்​தம் 13 கிராமங்​களில் இருந்து இந்த விமான நிலை​யத்​துக்​காக நிலங்​கள் கையகப்​படுத்​தப்பட உள்​ளன. இந்த நிலங்​களில் நீர்​நிலைகள், ஏரி, குளங்​கள், விவ​சாய நிலங்​கள், வீடு​கள், அரசு புறம்​போக்கு நிலங்​கள் உள்​ளிட்​டவை அடக்​கம். இந்த விமான நிலை​யத்​துக்​காக நிலம் எடுக்​கப்​படும் கிராமங்​களில் ஏகனாபுரம் உள்​ளிட்ட கிராமங்​கள் முழு​வது​மாக கையகப்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாக வைத்து ஆயிரம் நாளை கடந்து மக்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் இந்த கிராமத்​தில் பழுதடைந்த அரசு கட்​டிடங்​களை சீரமைத்​தல், சாலை அமைத்​தல், சிறு​பாலங்​கள் அமைத்​தல்…

Read More

உலகெங்கிலும் மரணத்திற்கு மாரடைப்பு முக்கிய காரணமாகும். தூக்கத்தில் கூட, மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், இது அடிப்படை இதய நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இதய நோய்கள் மற்றும் தாக்குதல்களைத் தடுக்க வழக்கமான சோதனை முக்கியமானது என்றாலும், தூக்கத்தில் மாரடைப்பைத் தடுக்கும் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஆழமாக தோண்டுவோம் …மாரடைப்பு மற்றும் தூக்கத்தின் தொடர்புதூக்கத்தின் போது, ​​உங்கள் உடல் ஓய்வெடுக்கும்போது, ​​அது இன்னும் நிறைய வேலைகளைச் செய்து வருகிறது. தூங்கும் போது, ​​உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு பொதுவாக மெதுவாகச் செல்கிறது, ஆனால் சில நேரங்களில், சில நிலைமைகள் இதயம் கடினமாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ செயல்படக்கூடும். தடுக்கப்பட்ட தமனிகள், உயர் இரத்த அழுத்தம் அல்லது ஒழுங்கற்ற இதய தாளங்கள் போன்ற சிக்கல்கள் தூக்கத்தின் போது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.இது தவிர, ஸ்லீப் அப்னியா போன்ற தூக்கக் கோளாறுகளால் சிலர் அவதிப்படுகிறார்கள், இது தூக்கத்தின் போது சுவாசிப்பதைத் தடுக்கிறது…

Read More

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர். முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில்…

Read More

எடப்பாடி அருகே சிறுவனை வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி கவுண்டம்பட்டியில் வீட்டில் வளர்க்கும் நாய்கள் வெறிபிடித்து வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்துள்ளன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தைகளை விரட்டி கடிக்கும் நாய்களை வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இந்நிலையில் நாய்களை கட்டிப் போட்டு வளர்க்காததால் வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி நாய்கள் கடித்துள்ளன. இது குறித்து உரிமையாளரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கேட்டதற்கு, ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சிறுவன் ஒருவரை நாய்கள் விரட்டி…

Read More

முதியோர் தம்பதியினர் கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ் இந்திய உறவினரின் குடும்ப ஷெல்-அதிர்ச்சி லண்டன்: ஏர் இந்தியா விமானத்தில் கொல்லப்பட்ட ஒரு வயதான இந்திய தம்பதியினரின் பிரிட்டிஷ் இந்திய உறவினர் விமான நிறுவனத்துடனான தனது கோபத்தைப் பற்றி பேசியுள்ளார், ஏர் இந்தியா பயன்படுத்தும் கடற்படை பயங்கரமானது என்று கூறினார்.துஷர் ஜோகியும் அவரது குடும்பத்தினரும் வியாழக்கிழமை ஷெல்-அதிர்ச்சி அடைந்தனர், அவர்களின் உறவினர்கள் விமானம் ஏற்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதாக செய்தி வந்தபோது.ஜோகியின் உறவினரின் மாமியார்-குஜராத்தில் உள்ள மின்சார வாரியத்தின் முன்னாள் பொது மேலாளரான வல்லப் நக்ஜி அகெடா மற்றும் அவரது மனைவி வினாபென் வல்லாப் அகெடா, ஒரு இல்லத்தரசி, இருவரும் வதோதராவைச் சேர்ந்தவர்கள்-போயிங் விமானத்தில் 21e மற்றும் 21f இடங்களில் இருந்தனர். 70 களில், அவர்கள் மூத்த மகள், கணவர் மற்றும் வாசிப்பில் வசிக்கும் பேரக்குழந்தைகளுடன் சில மாதங்கள் செலவிட இங்கிலாந்துக்கு வர வேண்டும். மகள் மற்றும் அவரது முழு குடும்பத்தினரும் வியாழக்கிழமை மாலை ஹீத்ரோவுக்கு செல்லும்…

Read More

புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. அங்கு, உணவுடன் கூடிய தட்டுகள் மற்றும் தண்ணீர் டம்ளர்கள் மேசையில் மீது இருப்பது தொடர்பான புகைப்படங்கள் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு இன்று மதியம் 1.38-க்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-7 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தில், பயணித்த 242 பேரில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அகமதாபாத்தின் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விமானம் மோதியதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.…

Read More

சென்னை: ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை முதலில் சொன்ன ஹீரோ அதர்வா தான். நான் அவரைச் சந்தித்து கதையை சொன்னேன். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதர்வா நடிக்கவில்லை என்றதும் மிகவும் வருத்தப்பட்டேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டி என் ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் மாரி செல்வராஜ் பேசும் போது, “இப்படத்தை என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம். திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க…

Read More

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், அதன் இணைப்புப் பாலம் சரிந்து விழுந்ததால் இடிந்தன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றி வருகிறது. மேலும் இடிபாடுகளுக்கான காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படும். சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததை நாங்கள் வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். மேலும் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள்…

Read More