சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சகாயம் ஐஏஎஸ்-க்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சகாயம் ஐஏஎஸ், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக பணியாற்றியபோது தொழில்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தின் வழியே, 2012-ம் ஆண்டில் மிகப்பெரிய கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல கருங்கல் குவாரிகள் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து கிரானைட் மற்றும் கனிம மணற்கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் 2014-ல் உத்தரவிட்டது. இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு சகாயம் ஐஏஎஸ், தன்னை கொலை செய்யப்போவதாக மிரட்டல்கள் வருவது குறித்து தமிழக அரசின் தலைமை செயலரை சந்தித்து முறையிட்ட நிலையில், அவருக்கு ஆயுதமேந்திய தனிப்படையை பாதுகாப்புக்கு உயர் நீதிமன்றம்…
Author: admin
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன் என்று ஸ்ரீநகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் இப்த்கார் அலி (45). இவர் ஜம்மு-காஷ்மீர் போலீஸில் பணியாற்றி வருகிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இந்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ஜம்மு மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேரை வெளியேற்ற ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டது. இதில் இப்த்கார் அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் அடங்குவர். இதையடுத்து அவர்கள் பஞ்சாப் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் அலி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் இப்த்கார் அலி, அவரது குடும்பத்தாரை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டாம் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து இப்கார் அலி கூறியதாவது: நானும், என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறி எங்களை பஞ்சாப் எல்லைக்கு…
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: * பிரதமர் மோடி: பொதுத் தேர்தலில் லாரன்ஸ் வோங் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவும், சிங்கப்பூரும் மக்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளுடன், வலுவான பன்முக ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஒத்துழைப்பு, நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்காக உங்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். * முதல்வர் ஸ்டாலின்: மக்கள் செயல் கட்சியை, அதன் 14-வது தொடர்ச்சியான வெற்றிக்கு வழிநடத்திச்…
வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளுக்கு14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும் மூலப் பொருளில் இந்த எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குழாய் வழித்தடம் பூமிக்கடியில் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டரை விட விலை குறைவு. தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுக வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்என்ஜி எனப்படும்…
புதுடெல்லி: மண்ணின் மைந்தர்களாக இருந்த தாக்கரேவின் குடும்பம் தற்போது இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளாக மாறிவிட்டனர் என்று சிவசேனா எம்பி மிலிந்த் தியோரா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதள எக்ஸ் பதிவில் கூறியதாவது: ஒரு காலத்தில் மண்ணின் மைந்தர் என்று பெருமையாக சொல்லிக்கொண்ட சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் குடும்பம் தற்போது இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளாக மாறிவிட்டனர். பஹல்காமில் குண்டுகள் பாய்ந்து பலர் உயிரிழந்து கொண்டிருந்தபோது அவரின் குடும்பம் ஐரோப்பாவில் சந்தோஷமாக விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மகாராஷ்டிர தினத்துக்கும் அவரது குடும்பம் வரவில்லை. ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. சிவசேனா (யுபிடி) கட்சி தலைமை ஆடம்பர அரசியலை கடைபிடித்து வருகிறது. அதேநேரம், பஹல்காம் தாக்குதல் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நின்ற மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையை பாராட்டியே ஆகவேண்டும். மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தேவை பகுதி நேர அரசியல்வாதிகள் அல்ல. எப்போதும் கடைமையாற்றும் போர் வீரர்கள்தான் நம்மாநிலத்துக்கு…
தூத்துக்குடி: தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை. அதைப் பாதுகாப்பதில் முதல்வர் அக்கறை காட்டவில்லை. முதல்வரின் கவனம் முழுவதும், பாஜக-அதிமுக கூட்டணியை குறை சொல்வதில்தான் உள்ளது. மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. திருநெல்வேலி மாநகரில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. இதையெல்லாம் முதல்வர் கவனிக்காமல், தேர்தல் கூட்டணி பற்றியே பேசி வருகிறார். அவருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்தன. அனைத்தையும் பரிசீலனை செய்துவிட்டு, தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய தற்போது முடிவெடுத்துள்ளது. பொதுக் கூட்டங்களிலும், சட்டப்பேரவையிலும் ஆளுநர் குறித்து தொடர்ந்து விமர்சனம்…
காரைக்கால்: காரைக்கால் அம்மையார், சோமநாதர், அய்யனார் கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பான வகையில் நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதர்- நித்ய கல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில், சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், பூர்ண புஷ்கலா அய்யனார் கோயில் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 17 ஆண்டுகளை கடந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.90 லட்சம் மதிப்பில் கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் ஏப்.30-ம் தேதி காலை தொடங்கின. மே 1-ம் தேதி மாலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு, நேற்று காலையுடன் 6 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து காலை 6.30 மணியளவில் பூர்ண புஷ்கலா சமேத அய்யனார் கோயில் விமானம், அம்மையார் திருக்குளத்து…
தாராபுரம்: வெளியூர் சென்று விட்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர். சிறுமி படுகாயம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி நாகராஜ்(40), ஆனந்தி(35). இவர்களது மகள் தீக்ஷிதா(15). மூவரும் குடும்பத்துடன் திருநள்ளாறு கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு நேற்று இரவு அவர்களது வீட்டிற்கு திரும்பினர். தாராபுரத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பிய அவர்கள் குள்ளாய்பாளையம் பாலத்தில் வந்தபோது, பாலத்துக்காக தோண்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்படாத பள்ளத்தில் இருட்டில் நிலை தடுமாறி விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ், ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி தீக்ஷிதா படுகாயங்களுடன் கிடந்தார். நீண்ட நேரத்துக்கு பின் அவ்வழியாக வந்தவர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின்…
“மகிழ்ச்சி ஒரு பட்டாம்பூச்சியைப் போலவே பிரத்யேகமானது, நீங்கள் அதை ஒருபோதும் தொடரக்கூடாது. நீங்கள் மிகவும் அசையாமல் இருந்தால், அது வந்து உங்கள் கையில் குடியேறக்கூடும். ஆனால் சுருக்கமாக மட்டுமே” என்று ரஸ்கின் பாண்ட் கூறினார், சரியாக! ஆனால், மகிழ்ச்சியை அடிக்கடி அனுபவிக்க உங்கள் மூளைக்கு தீவிரமாக பயிற்சி அளிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உளவியல் ஆராய்ச்சி நமது எண்ணங்கள், நடத்தைகள் மற்றும் நமது சூழல் கூட மூளையை அதிக மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை நோக்கி மாற்றியமைக்க முடியும் என்பதை காட்டுகிறது. உடல் ஆரோக்கியத்தைப் போலவே, உணர்ச்சி உடற்பயிற்சியும் வளர நடைமுறையில் எடுக்கும். எனவே, உங்கள் மூளைக்கு மகிழ்ச்சியாக இருக்க பயிற்சி அளிக்க சில அறிவியல் ஆதரவு உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளுக்கு, மத்திய அரசு, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி 4 ஆண்டுகள் முடிவடைந்து 5-ம் ஆண்டு தொடங்கும் நிலையில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்றன. காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை அயல் நாடுகளிலும், ஐ.நா. சபையிலும் பாராட்டி வரவேற்கப்படுகின்றன. கரோனா, இயற்கை பேரிடர், உதவ வேண்டிய மத்திய அரசின் பாராமுகம், நிதி அளிக்க முடியாதென நாடாளுமன்றத்திலேயே கூறிய பிடிவாதம் அனைத்தையும் கடந்து தமிழக மக்களை எல்லா வகையிலும் காத்து, எல்லாருக்கும் எல்லாம் என்பதைத் தத்துவமாகவே வடித்துத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகத்தை, நாட்டிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளார். இன்று மகளிர், மாணவர்கள் தொழிலாளர்கள், தொழில் முகவர்கள் என…
