Author: admin

பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது. கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே நடை திறப்பின்போது இந்திய ராணுவத்தினர் தெய்வீக ராகங்களை இசைத்து பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கினர். பத்ரிநாத் கோயில் நடை திறப்பு நிகழ்வில், உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மாநில பிரிவு தலைவர் மஹிந்திர பட் மற்றும் டெஹ்ரி எம்எல்ஏ கிஷோர் உபத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்ரிநாத் யாத்திரை பாதுகாப்பாகவும், சீரானதாகவும் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டதையடுத்து இந்தாண்டுக்கான சார்தாம்…

Read More

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவும், அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பும் மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன். நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும்” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டில் ஒன்றில் கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, “ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக் கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது அது நேர்மையாக இருக்கிறதா இல்லையா என்று தெரியும். ஒரு படம் என்று வரும்போது 150 முதல் 200 பேர் வரை பணிபுரிகிறோம். அவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் வெளியாவது என்பது ஒரு கனவு. படம் அனைவருக்கும் பிடிக்கும்போது அது ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் அவர்களை மகிழ்ச்சியாகவே இருக்கவிடக்கூடாது என்பது போல சில விமர்சனங்கள் இருக்கின்றன. நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள்…

Read More

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக வழிகாட்டுதல்படி, மாநகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும். அப்படியெனில், 426 சதுர கிமீ பரப்பளவு கொண்ட சென்னையில் 144 சதுர கிமீ (33 சதவீதம்) பரப்பளவுக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும்.…

Read More

நாங்கள் அனைவரும் அங்கு இருந்திருக்கிறோம் – ஆர்டர் செய்வது, கூடுதல் சமைப்பது, அந்த சுவையான வறுத்த அரிசியை அடுத்த நாள் சேமித்தல். ஆனால் அது பாதிப்பில்லாத மீதமுள்ள உணவு ஒரு நேர வெடிகுண்டாக இருந்தால் என்ன செய்வது? 2008 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் தெரிவிக்கப்பட்ட ஒரு சோகமான வழக்கில், பேசிலஸ் செரியஸால் மாசுபடுத்தப்பட்ட அரிசி உட்கொண்டு ஒரு இளைஞன் திடீரென இறந்தான். பல நாட்கள் அறை வெப்பநிலையில் விடப்பட்ட வறுத்த அரிசியை தனிநபர் சாப்பிட்டிருந்தார். நுகர்வு சில மணி நேரங்களிலேயே, அவர் கடுமையான அறிகுறிகளை அனுபவித்து இறந்தார். இது “ஒரு இளம் வயதுவந்தோரின் திடீர் மரணம் பேசிலஸ் செரியஸ் உணவு விஷம்”கிளினிக்கல் மைக்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்டது.”அக்டோபர் 1, 2008 அன்று, தக்காளி சாஸுடன் ஸ்பாகெட்டியின் எஞ்சியவற்றை சாப்பிட்ட பிறகு 20 வயது நபர் நோய்வாய்ப்பட்டார், இது 5 நாட்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு அறை வெப்பநிலையில் சமையலறையில் எஞ்சியிருந்தது. பள்ளிக்குப் பிறகு, அவர்…

Read More

Last Updated : 05 May, 2025 06:30 AM Published : 05 May 2025 06:30 AM Last Updated : 05 May 2025 06:30 AM கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ஆகாய கப்பலை, டிஆர்டிஓ நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதனை செய்தது. இது வானில் 17 கி.மீ உயரம் வரை பறந்தது. | படம்: பிடிஐ | புதுடெல்லி: கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆகாய கப்பல் பரிசோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன், வானில் மிக உயரத்தில் பறக்கும் ஆகாய கப்பல் தொழில்நுட்பம் உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளன. இந்நிலையில் அதேபோன்ற ஆகாய கப்பலை ஆக்ராவை சேர்ந்த ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஏடிஆர்டி) உருவாக்கியது.…

Read More

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய ஏ, ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கெதிரான ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், நேற்று பெர்த்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் நவ்நீத் கவுர் 21-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். அதுவே வெற்றி கோலாக மாறியது.

Read More

சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 2,911 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இன்றையதினம் மட்டும் 31 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வரும் ஜூலை மாதத்துக்குள் 3,000 கும்பாபிஷேகங்களை நிச்சயம் எட்டுவோம். மேலும், இதுவரை கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,665.61 கோடி மதிப்பிலான 7,546.33 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநர் குழுவால் 11,808 கோயில்களுக்கு திருப்பணி அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,917.11 கோடி மதிப்பிலான 25,150 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றிலே இல்லாத அளவிற்கு இந்து…

Read More

தீவிரமான தூசி, மாசுபாடு, வானிலை, நீரின் தரம் மற்றும் தயாரிப்பு பயன்பாடு ஆகியவற்றின் மத்தியில், கிட்டத்தட்ட ஒவ்வொரு பெண்ணும் முடி உதிர்தலுடன் போராடுகிறார்கள். தயாரிக்கப்பட்ட ஹேர்கேர் தயாரிப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம், நம் தலைமுடி பிரச்சினைகளுக்கு உதவ இயற்கையான வழிகளுக்கு நாம் எப்போதும் திரும்பும் ஒரு காலம் வருகிறது. டன் விருப்பங்களில், இதுபோன்ற ஒரு இயற்கை சூப்பர்ஃபுட் இன்னும் ஒளி தேவைப்படுகிறது மற்றும் நுகரப்படுகிறது, ஆனால் பயன்படுத்தப்படவில்லை. நாங்கள் மோரிங்கா ஓலிஃபெரா மரத்திலிருந்து வரும் மோரிங்காவைப் பற்றி பேசுகிறோம், மேலும் சுறுசுறுப்பான முடி ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்காக அறியப்படுகிறோம். வைட்டமின்கள் ஏ, சி மற்றும் துத்தநாகத்தின் குணங்களைக் கொண்டு, இது பயன்படுத்த எளிதானது மற்றும் சந்தையில் கிடைக்கிறது. கோடையில் முடி வளர்ச்சிக்கு இந்த சூப்பர்ஃபுட் பயன்படுத்த 5 வழிகளைப் பார்ப்போம்.

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ராணுவ ஜெனரல்கள் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மேலும் தெரிவித்துள்ளதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பிரதமர் மோடியின் தலைமையிடமிருந்து தீர்க்கமான பதிலடியை உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இஸ்லாமாபாத்தில் முக்கிய தலைவர்களிடையே பயத்தை வரவழைத்துள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் பலர் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டனர். அதற்கான டிக்கெட்டுகளையும் அவர்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டனர். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இனியும் பொறுமை காக்காது என்பது பாகிஸ்தான் அமைச்சர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். எனவேதான் பதிலடி தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவதாக கூறுகின்றனர். தீவிரவாதிகளை மண்ணை கவ்வச்…

Read More