Author: admin

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிக தள்ளுபடி விகித (எம்டிஆர்) கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது: யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் வசூலிக்கப்படும் என்று எழுந்துள்ள ஊகங்கள் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. இது போன்ற ஆதாரமற்ற ஊக செய்திகள் மக்களை தவறாக வழிநடத்தும். தேவையற்ற பயத்தை உருவாக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, யுபிஐ வாயிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எம்டிஆர் என்பது ஒரு வணிகர் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து டிஜிட்டல் வழிகளில் பணம் பெறுவதற்காக வங்கிக்கு செலுத்தும் கட்டணம் ஆகும். வணிக தள்ளுபடி விகிதம் பரிவர்த்தனை தொகையின் சதவீதத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. அதிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதத்தில்…

Read More

பஒமெக்ரானேட் ஜூஸ் பல ஆண்டுகளாக காலை உணவு பிரதானமாக இருந்து வருகிறது, ஆனால் வளர்ந்து வரும் ஆராய்ச்சி இப்போது தமனி அடைப்பைக் குறைக்க உதவக்கூடும் என்பதைக் காட்டுகிறது. ஆம், அது உண்மை! இங்கே எப்படி …மருத்துவ ஊட்டச்சத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, ஒரு வருடத்திற்கு மாதுளை சாற்றை உட்கொண்ட பங்கேற்பாளர்கள் தமனி பிளேக்கில் 30% குறைப்பு வரை அனுபவித்ததாக ஆய்வு கண்டறிந்தது. டெக்னியன்-இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்களின் தலைமையில், இந்த ஆய்வு சாற்றின் உயர் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்திற்கு இந்த விளைவைக் கூறியது-குறிப்பாக பனிகலஜின் போன்ற பாலிபினால்கள். இந்த சேர்மங்கள் இரத்த ஓட்டத்தை ஆதரிப்பதாகவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதாகவும், சில நபர்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.இது எவ்வாறு உதவுகிறதுமாதுளை (அல்லது எங்கள் நல்ல பழைய அனார்) பாலிபினால்கள், டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், இது உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது, இது தமனி சேதம்…

Read More

அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். காரணம் என்ன? – விபத்து குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் கூறும்போது, “விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையைவிட்டு பறக்க தொடங்கிய பிறகு, போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை. அடுத்த 2 நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.லேண்டிங்…

Read More

சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தார். ஜாபர்கான்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் மூலதன நிதியின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநகராட்சி சமூக நலக் கூடம் புனரமைக்கும் பணி, சுந்தரமூர்த்தி தெரு முதல் கண்ணம்மாள் தெரு வரையிலான கால்வாய் மறுசீரமைப்பு பணி, அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய எகோ பிளாக் மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: முதுநிலை மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் எவ்வித குழப்பமும் இல்லை. இதற்கான கலந்தாய்வு தேதியை மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாணவர்களுக்கு…

Read More

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இதற்​காக மைதானத்​துக்கு வெளியே லட்​சகணக்​கான ரசிகர்​கள் திரண்​டிருந்​தனர். அப்​போது ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் இறந்​தனர். இதுதொடர்​பாக கப்​பன் பூங்கா போலீ​ஸார் ஆர்​சிபி அணி​யின் நிர்​வாகம், பாராட்டு விழா ஏற்​பாடு​களை கவனித்​துக் கொண்ட டிஎன்ஏ நிறு​வனம், கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்​கம் ஆகிய​வற்​றின் மீது 6 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இதையடுத்து ஆர்​சிபி அணி​யின் வணிக பிரிவு நிர்​வாகி நிக்​கோல் சோசலே, டிஎன்ஏ நிறு​வனத்​தின் துணை தலை​வர் சுனில் மேத்​யூ, வணி​கப்​பிரிவின் நிர்​வாகி கிரண், ஒருங்​கிணைப்பு நிர்​வாகி சுமந்த் ஆகியோரை போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி கைது செய்​தனர். கைதான 4 பேரும் பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், அவர்​கள் ஜாமீன்​கோரி கர்​நாடக உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனு நீதிபதி எஸ்​.ஆர்​.கிருஷ்ணகு​மார்…

Read More

சேலம்: டெல்​லி​யில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். சேலத்​தில் நேற்று ரூ.1,649 கோடி மதிப்​பில், ஒரு லட்​சம் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கிய முதல்​வர் ஸ்டா​லின், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி, முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்து வைத்​தார். சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற இந்​நிகழ்ச்​சி​யில், ஆட்​சி​யர் பிருந்​தாதேவி வரவேற்​றார். அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், ராஜேந்​திரன் முன்​னிலை வகித்​தனர். நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது:டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து 4-வது ஆண்​டாக உரிய காலத்​தில் நீர் திறந்து வைத்​த​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். உழவர்​களுக்கு இன்​னும் மகிழ்ச்​சியை கூட்​டும் வகை​யில், நெல் குவிண்​டாலுக்கு ரூ.2,500 வழங்​கப்​படும். அதற்​கேற்ப சாதாரண ரகத்​துக்கு ரூ.131, சன்ன ரகத்​துக்கு ரூ.156 கொள்​முதல் விலை உயர்த்தி வழங்​கப்​படும். இனி சாதாரண ரகம் ரூ.2,500-க்​கும், சன்ன ரகம் ரூ.2,545-க்​கும் கொள்​முதல் செய்​யப்​படும். இதனால், 10 லட்​சத்​துக்​கும் அதி​க​மான…

Read More

கல்லீரல் ஆரோக்கியம் திடீரென்று ஒரு கணம் கொண்டிருக்கிறது – நேர்மையாக, இது நேரம் பற்றியது. பல ஆண்டுகளாக, மக்கள் அதிகமாக குடித்துக்கொண்டிருந்தபோது அல்லது ஒரு மருத்துவர் ஹெபடைடிஸ் போன்ற பயங்கரமான விஷயங்களைக் கொண்டு வந்தபோது மட்டுமே தங்கள் கல்லீரலைப் பற்றி மட்டுமே நினைத்தார்கள். ஆனால் இப்போது? எல்லோரும் கொழுப்பு கல்லீரல், போதைப்பொருள், நொதி அளவுகள் மற்றும் கல்லீரல் தொடர்பான எல்லாவற்றையும் பற்றி பேசுகிறார்கள்-அதனால்தான் இங்கே.முதலாவதாக, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அமைதியாக உலகளாவிய தொற்றுநோயாக மாறி வருகிறது. இனி கல்லீரல் பிரச்சினைகள் இருக்க நீங்கள் ஒரு குடிகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை -ஜங்க் உணவு, சர்க்கரை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, மற்றும் மன அழுத்தம் கூட அதை குழப்பக்கூடும். அது முன்னேறும் வரை தங்களுக்கு ஒரு சிக்கல் இருப்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை. இரண்டாவதாக, உங்கள் கல்லீரல் உங்கள் உடலின் பிரதான போதைப்பொருள் உறுப்பு. இது நீங்கள் எறியும்…

Read More

புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி கூறினார். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்திருந்த சூழலில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முதல் கட்டமாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் சென்றடைந்த அவர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து பிரசல்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐரோப்பிய யூனியனின் தலைவர்களை அவர் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் நேற்று பயணத்தை தொடங்கிய எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்த சந்திப்பு…

Read More

பெக்கன்ஹாம்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இதற்​காக இந்​திய அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதன் ஒரு கட்​ட​மாக இந்​தியா ஏ, இந்​தியா அணி​கள் மோதும் பயிற்சி ஆட்​டம் பெக்​கர்​ஹாமில் இன்று தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில், இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் வீரர்​கள் மத்​தி​யில் உரை​யாடு​வதை பிசிசிஐ தனது இணை​யதளத்​தில் வீடியோ​வாக வெளி​யிட்​டுள்​ளது. அதில் கவுதம் கம்​பீர் கூறும்​போது, “இந்த சுற்​றுப்​பயணத்தை இரண்டு வித​மாகப் பார்க்​கலாம். ஒன்​று, மிக​வும் அனுபவம் வாய்ந்த எங்​களது 3 வீரர்​கள் (ரோஹித் சர்​மா, விராட் கோலி, ரவிச்​சந்​திரன் அஸ்​வின்) ஆகியோர் இல்​லாமல் இருக்​கிறோம் அல்​லது நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய இந்த அற்​புத​மான வாய்ப்​பைப் பெற்​றுள்​ளோம். தற்​போதைய டெஸ்ட் அணி​யில், ஏதாவது சிறப்​பாக செய்ய வேண்​டும்…

Read More

விழுப்புரம்: உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, உருவப் படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார் அன்புமணி. அவருக்கு தலைமைப் பண்பே கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக பிரச்சினைகள் ஊடகங்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்த 2 ஆளுமைகள் தைலாபுரம் வந்தார்கள், நானும் சென்னைக்குச் சென்றேன். ஆனால், பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. எந்த முடிவும் ஏற்படவில்லை. நான் வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும், அவர் (அன்புமணி) மக்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் எனக்கே பஞ்சாயத்து செய்வது என்பது எனது தலைவிதியாகும். தலைவர் பதவியை விட்டுத்தர நான் தயாராக இருந்தேன். ஆனால், பேச்சுவார்த்தைக்கு செல்ல முயன்ற ஜி.கே.மணி உள்ளிட்ட இருவரையும் சந்திக்க அன்புமணி மறுத்துவிட்டார். அதன் பிறகு எனக்கு கோபம் வந்து ‘நீயா – நானா?’ என…

Read More