புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிக தள்ளுபடி விகித (எம்டிஆர்) கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது: யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் வசூலிக்கப்படும் என்று எழுந்துள்ள ஊகங்கள் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. இது போன்ற ஆதாரமற்ற ஊக செய்திகள் மக்களை தவறாக வழிநடத்தும். தேவையற்ற பயத்தை உருவாக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, யுபிஐ வாயிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எம்டிஆர் என்பது ஒரு வணிகர் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து டிஜிட்டல் வழிகளில் பணம் பெறுவதற்காக வங்கிக்கு செலுத்தும் கட்டணம் ஆகும். வணிக தள்ளுபடி விகிதம் பரிவர்த்தனை தொகையின் சதவீதத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. அதிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதத்தில்…
Author: admin
பஒமெக்ரானேட் ஜூஸ் பல ஆண்டுகளாக காலை உணவு பிரதானமாக இருந்து வருகிறது, ஆனால் வளர்ந்து வரும் ஆராய்ச்சி இப்போது தமனி அடைப்பைக் குறைக்க உதவக்கூடும் என்பதைக் காட்டுகிறது. ஆம், அது உண்மை! இங்கே எப்படி …மருத்துவ ஊட்டச்சத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, ஒரு வருடத்திற்கு மாதுளை சாற்றை உட்கொண்ட பங்கேற்பாளர்கள் தமனி பிளேக்கில் 30% குறைப்பு வரை அனுபவித்ததாக ஆய்வு கண்டறிந்தது. டெக்னியன்-இஸ்ரேல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்களின் தலைமையில், இந்த ஆய்வு சாற்றின் உயர் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்திற்கு இந்த விளைவைக் கூறியது-குறிப்பாக பனிகலஜின் போன்ற பாலிபினால்கள். இந்த சேர்மங்கள் இரத்த ஓட்டத்தை ஆதரிப்பதாகவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதாகவும், சில நபர்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.இது எவ்வாறு உதவுகிறதுமாதுளை (அல்லது எங்கள் நல்ல பழைய அனார்) பாலிபினால்கள், டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், இது உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது, இது தமனி சேதம்…
அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். காரணம் என்ன? – விபத்து குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் கூறும்போது, “விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையைவிட்டு பறக்க தொடங்கிய பிறகு, போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை. அடுத்த 2 நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.லேண்டிங்…
சென்னை: மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்தார். ஜாபர்கான்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் மூலதன நிதியின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநகராட்சி சமூக நலக் கூடம் புனரமைக்கும் பணி, சுந்தரமூர்த்தி தெரு முதல் கண்ணம்மாள் தெரு வரையிலான கால்வாய் மறுசீரமைப்பு பணி, அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுடைய எகோ பிளாக் மூலம் மழைநீர் சேமிக்கும் வசதி ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: முதுநிலை மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் எவ்வித குழப்பமும் இல்லை. இதற்கான கலந்தாய்வு தேதியை மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாணவர்களுக்கு…
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக மைதானத்துக்கு வெளியே லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதுதொடர்பாக கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகம், பாராட்டு விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட டிஎன்ஏ நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்சிபி அணியின் வணிக பிரிவு நிர்வாகி நிக்கோல் சோசலே, டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ, வணிகப்பிரிவின் நிர்வாகி கிரண், ஒருங்கிணைப்பு நிர்வாகி சுமந்த் ஆகியோரை போலீஸார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். கைதான 4 பேரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஜாமீன்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார்…
சேலம்: டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சேலத்தில் நேற்று ரூ.1,649 கோடி மதிப்பில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பிருந்தாதேவி வரவேற்றார். அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து 4-வது ஆண்டாக உரிய காலத்தில் நீர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131, சன்ன ரகத்துக்கு ரூ.156 கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இனி சாதாரண ரகம் ரூ.2,500-க்கும், சன்ன ரகம் ரூ.2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 லட்சத்துக்கும் அதிகமான…
கல்லீரல் ஆரோக்கியம் திடீரென்று ஒரு கணம் கொண்டிருக்கிறது – நேர்மையாக, இது நேரம் பற்றியது. பல ஆண்டுகளாக, மக்கள் அதிகமாக குடித்துக்கொண்டிருந்தபோது அல்லது ஒரு மருத்துவர் ஹெபடைடிஸ் போன்ற பயங்கரமான விஷயங்களைக் கொண்டு வந்தபோது மட்டுமே தங்கள் கல்லீரலைப் பற்றி மட்டுமே நினைத்தார்கள். ஆனால் இப்போது? எல்லோரும் கொழுப்பு கல்லீரல், போதைப்பொருள், நொதி அளவுகள் மற்றும் கல்லீரல் தொடர்பான எல்லாவற்றையும் பற்றி பேசுகிறார்கள்-அதனால்தான் இங்கே.முதலாவதாக, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அமைதியாக உலகளாவிய தொற்றுநோயாக மாறி வருகிறது. இனி கல்லீரல் பிரச்சினைகள் இருக்க நீங்கள் ஒரு குடிகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை -ஜங்க் உணவு, சர்க்கரை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, மற்றும் மன அழுத்தம் கூட அதை குழப்பக்கூடும். அது முன்னேறும் வரை தங்களுக்கு ஒரு சிக்கல் இருப்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை. இரண்டாவதாக, உங்கள் கல்லீரல் உங்கள் உடலின் பிரதான போதைப்பொருள் உறுப்பு. இது நீங்கள் எறியும்…
புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேசினார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில் பிரான்ஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி கூறினார். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார். பஹல்காம் தீவிரவாத தாக்குலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரம் கடந்திருந்த சூழலில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முதல் கட்டமாக பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் சென்றடைந்த அவர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து பிரசல்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐரோப்பிய யூனியனின் தலைவர்களை அவர் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். இதையடுத்து பிரான்ஸ் நாட்டில் நேற்று பயணத்தை தொடங்கிய எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்த சந்திப்பு…
பெக்கன்ஹாம்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக இந்தியா ஏ, இந்தியா அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் பெக்கர்ஹாமில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் வீரர்கள் மத்தியில் உரையாடுவதை பிசிசிஐ தனது இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் கவுதம் கம்பீர் கூறும்போது, “இந்த சுற்றுப்பயணத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று, மிகவும் அனுபவம் வாய்ந்த எங்களது 3 வீரர்கள் (ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்) ஆகியோர் இல்லாமல் இருக்கிறோம் அல்லது நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தற்போதைய டெஸ்ட் அணியில், ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும்…
விழுப்புரம்: உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, உருவப் படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார் அன்புமணி. அவருக்கு தலைமைப் பண்பே கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக பிரச்சினைகள் ஊடகங்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்த 2 ஆளுமைகள் தைலாபுரம் வந்தார்கள், நானும் சென்னைக்குச் சென்றேன். ஆனால், பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. எந்த முடிவும் ஏற்படவில்லை. நான் வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும், அவர் (அன்புமணி) மக்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் எனக்கே பஞ்சாயத்து செய்வது என்பது எனது தலைவிதியாகும். தலைவர் பதவியை விட்டுத்தர நான் தயாராக இருந்தேன். ஆனால், பேச்சுவார்த்தைக்கு செல்ல முயன்ற ஜி.கே.மணி உள்ளிட்ட இருவரையும் சந்திக்க அன்புமணி மறுத்துவிட்டார். அதன் பிறகு எனக்கு கோபம் வந்து ‘நீயா – நானா?’ என…
