Author: admin

சென்னை: ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 4 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை தரமணியில் இயங்கிவரும் தமிழக அரசின் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகையுடன் 5 ஆண்டுகால எம்.ஏ தமிழ் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, கடைசி நாள் ஜூலை 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இதற்கான விண்ணப்பப்படிவத்தை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல் மற்றும் ஆவணங்களை இணைத்து ஜூலை 4-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.. மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்…

Read More

திடக்கழிவு மேலாண்மையில் திருப்பூர் மாநகராட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், கூட்டணியில் இருப்பதால் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு எதிராக வாய்திறக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயங்குவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. திருப்பூர் மாநகரில் தினமும் சேகரமாகும் 700 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை காலம் காலமாக பாறைக்குழிகளில் நிரப்பி வருகிறது மாநகராட்சி. இந்த நிலையில், திருப்பூர் ஒன்றியம் காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் மாற்று இடம் கிடைக்காமல் விழிபிதுங்கி நிற்கிறது மாநகராட்சி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சியின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போராட்டங்களை நடத்தியது. அப்போதும் திமுக கூட்டணிக் கட்சிகள் மவுனம் சாதித்தன. திருப்பூர் சிபிஐ எம்பி-யான சுப்பராயன் மட்டும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வரி உயர்வைக் கைவிடக் கோரி கோரிக்கை வைத்தார். அதற்கே, திமுக மேயர் தினேஷ்குமாரையும் எம்எல்ஏ-வான செல்வராஜையும் நேரில் அழைத்துப் பேசிய நகராட்சி நிர்வாகக்…

Read More

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 13) பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 13) கிராமுக்கு ரூ.195 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295-க்கும், பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனையாகிறது. சென்னையில் நேற்று (ஜூன் 12) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கும்,…

Read More

டிமென்ஷியா அன்றாட அரட்டைகளில் ஊர்ந்து செல்லும் என்று நம்மில் பெரும்பாலோர் எதிர்பார்க்கவில்லை. இது நினைவக இழப்பு, பழக்கமான இடங்களில் தொலைந்து போவது அல்லது முகங்களை மறந்துவிடுவது. ஆனால் இங்கே விஷயம்: டிமென்ஷியாவின் சில ஆரம்ப அறிகுறிகள் யாரோ பேசும்போது அமைதியாகக் காண்பிக்கப்படுகின்றன. காபி மீது ஒரு சாதாரண அரட்டை, பழைய நண்பருடன் ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது ஒரு குடும்ப இரவு உணவு கூட ஏதோ சரியாக இல்லை என்று சிறிய தடயங்களை வெளிப்படுத்தலாம்.இல்லை, இது எப்போதும் சொற்களை மறந்துவிடுவது பற்றி அல்ல – அது அதை விட மிகவும் நுட்பமானதாக இருக்கும்.ஆகவே, உங்களுக்கு நெருக்கமான ஒருவர் -ஒருவேளை ஒரு பெற்றோர், தாத்தா, அல்லது ஒரு இளைய உறவினர் கூட -உரையாடல்களில் கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுவதை நீங்கள் கவனித்திருந்தால், அது கவனம் செலுத்துவது மதிப்புக்குரியதாக இருக்கலாம். டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகளைக் கடந்து செல்வோம், அவை பெரும்பாலும் மிகவும் சாதாரண பரிமாற்றங்களில் காண்பிக்கப்படுகின்றன…

Read More

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அகமதாபாத் நகரிலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை…

Read More

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணியை 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழக்​கச் செய்து பதிலடி கொடுத்​தது ஆஸ்​திரேலிய அணி. அந்த அணி​யின் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் அபார​மாக செயல்​பட்டு 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். லண்​டன் லார்ட்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 56.4 ஓவர்​களில் 212 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பியூ வெப்​ஸ்​டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்​சன் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இதையடுத்து பேட்​டிங்கை தொடங்​கிய தென் ஆப்​பிரிக்க அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 22 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 43 ரன்​கள் எடுத்​தது. கேப்​டன் தெம்பா பவு​மா, டேவிட் பெடிங்​ஹாம்…

Read More

சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், ரூ.151 கோடி மதிப்பில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய நவீன மந்தைவெளி பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம் ரூ.151 கோடி மதிப்பில் மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன சொத்து மேம்பாட்டு கட்டிடத்துக்கான ஒப்பந்தத்தை கோரியுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகள், தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்துக்குள் திட்டமிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ கட்டமைப்பும் பேருந்து நிலையமும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இந்த கட்டிடத்தின் மொத்த…

Read More

சிம்ஹா முத்ரா என்றும் அழைக்கப்படும் லயன் போஸ், முக தசைகளை தொனிக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் ஒரு வேடிக்கையான மற்றும் பயனுள்ள வழியாகும்.அதை எப்படி செய்வது:உங்கள் முதுகெலும்புடன் நேராக வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாயை அகலமாகத் திறந்து, உங்கள் நாக்கை முடிந்தவரை ஒட்டிக்கொண்டு, உங்கள் கன்னத்தை உங்கள் மார்பை நோக்கி கொண்டு வாருங்கள். உங்கள் கண்களை அகலமாகத் திறந்து சிங்கம் போல கர்ஜிக்கவும் (“ஹா” ஒலி உருவாக்கு). இந்த நிலையை 15 முதல் 20 வினாடிகள் வரை வைத்திருங்கள். நிதானமாக மூன்று முறை மீண்டும் செய்யவும்.இது போஸ் சுருக்கங்களைக் குறைக்கிறது, முக தசைகளை இறுக்குகிறது, மேலும் முகம், கழுத்து மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, உங்கள் முகத்திற்கு ஒரு பிரகாசத்தை அளிக்கிறது. உடல்நலம்+யோகாவுடன் பொருத்தமாக இருங்கள்

Read More

இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் எதிர்கால கனவுகளை தீக்கிரையாக்கியது துரதிருஷ்டவசமான விமான விபத்து. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை சக பயணி ஒருவர் எடுத்ததாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ரூபானி லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மகளைச் சந்தித்துவிட்டு மனைவி அஞ்சலியுடன் மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவர்கள் சாப்பிடும்போது சோகம்: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக திகலூட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. இதில் அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி…

Read More

அகம​தா​பாத்: அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் சீசன் 6-ல் நேற்று அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் யு மும்பா டிடி – தபாங் டெல்லி டிடிசி அணி​கள் மோதின. 5 ஆட்​டங்​கள் கொண்ட இந்த டையில் யு மும்பா அணி 10-5 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது. லீக் ஆட்​டங்​களின் முடி​வில் தபாங் டெல்லி டிடிசி அணி 44 புள்​ளி​களு​டன் முதலிடத்​தை​யும், டெம்போ கோவா சாலஞ்​சர்ஸ் 44 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தை​யும், யு மும்பா 42 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தை​யும், ஜெய்ப்​பூர் பேட்​ரி​யாட்ஸ் 41 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தை​யும் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறின. இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்​டத்​தில் தபாங் டெல்லி டிடிசி – ஜெய்ப்​பூர் பேட்​ரி​யாட்ஸ் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. ஜூன் 14-ம் தேதி நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் டெம்போ கோவா சாலஞ்​சர்​ஸ் – யு மும்​பா…

Read More