சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை (மே 6) பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே 5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி,அரியலூர்,…
Author: admin
பட வரவு: கெட்டி படங்கள் Iபல தேசிய உணவு வகைகள் மற்றும் காபி கலாச்சாரங்களைப் பற்றிக் கொள்வது போக்குகளுக்கு இணையாக இருப்பதற்கான ஒரு சகாப்தம், மக்கள் தங்கள் உடலுக்குள் எதை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அக்கறை கொள்வதை நிறுத்திவிட்டனர்.சந்தையில் எந்தவொரு புதிய சிற்றுண்டியும் முயற்சி அல்லது ஒரு டஜன் மதிப்புக்குரியது, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதில் என்ன பொருட்கள் உள்ளன.பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட 36 நாடுகளின் ஆய்வின்படி, அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது குப்பை உணவு ஆல்கஹால், புகையிலை அல்லது சூதாட்டத்தைப் போலவே போதைப்பொருளாக இருக்கலாம். “அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவு அடிமையாதல்” 14% பெரியவர்களுக்கும் 12% குழந்தைகளிலும் நிகழும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான், “உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான” போதை பொருட்களின் பண்புகள் இருப்பதாக பெயரிடப்பட வேண்டும் என்று இப்போது அவர்கள் கோருகின்றனர்.இந்த உணவுகளுக்கு அடிமையாதல் மிகவும் மோசமான பசி, திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் மற்றும் தொடர்ச்சியான நுகர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.…
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியாவுக்கு வருகை தரும் முன்பாக பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் தர் உடன் பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நடத்தினார். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இரு தலைவர்களும் வலுவான பாகிஸ்தான் – ஈரான் உறவுகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். தெற்காசியாவின் தற்போதைய நிலைமை குறித்தும், அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, சிக்கலான பிரச்சினைகளை ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவர்களின் இணைந்த உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஆக்கபூர்வமான ராஜதந்திர…
நெல்லை: திருநெல்வேலியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாநில பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பாளையங்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் நவீன நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தையும், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியில் பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது: “தென்மாவட்டங்களிலுள்ள அனைத்து தரப்பு மக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த நூலகம் அமையும். இந்த நூலகத்தில் மினி திரையரங்கம், ஆடிட்டோரியம், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அறை போன்ற எண்ணற்ற வசதிகள் அமையவுள்ளது. நூலகத்துக்கான மாதிரி வரைப்படம் தயார் செய்யப்பட்டு தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறிய செய்யும்…
ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிக்கும் திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கலாம். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது.இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.மனிதனின் முகத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?இது ஒரு மயிலின் படம், இது முதல் தோற்றத்தில் மிகவும் வழக்கமானதாகத் தெரிகிறது. இருப்பினும், மயிலின் இறகுகளுக்குள் ஒரு மனிதனின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. மனிதன் “என் புளூபியர்ட்” என்று அழைக்கப்படுகிறான், ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது…
ஹைதராபாத்: இந்தியா – இலங்கை மீனவர்கள் நல்லிணக்கத்தின் மூலமும், இரு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில், 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள தூதரக நல்லுறவுகளை அடிப்படையாகக் கொண்டு, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள்…
மறைமலைநகர்: “திமுக எப்போதும் வணிகர்களுக்கு எதிரான கட்சி. திமுகவினருக்கு சாதகமாக உள்ள ஒரு சில வணிகர்களை பயன்படுத்தி வணிகர்களிடையே பிளவு ஏற்படுத்துவது திமுகவுக்கு கைவந்த கலை. வணிகர்களின் நலனை பாதுகாப்பதில் அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-வது வணிகர் தினம் மற்றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணிகர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று வந்தபோது மக்களவையில் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. அதிமுக வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியாபாரம் நடத்த சிறப்பு உத்தரவை பிறப்பித்தது. மக்களவையில் சில்லரை வணிகத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால்…
சென்னை: பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூிரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) பிஇ, பிடெக் சேர்க்கைக்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கும் என்றும், ஆன்லைன் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார் என்றும் உயர் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…
சென்னை: “அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெறுவதற்கு தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்” என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நீட் வந்த நாள் முதலே குளறுபடிகள் தான் நடக்கிறது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் என்பது சட்டரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த 7.5 சதவீதத்தினால் பலனும் இருக்கின்றது என்கின்ற வகையில், தமிழக முதல்வர், மருத்துவ கல்வி போல் சட்டம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீதத்தை கொண்டு வந்தார். இதனை உயர்த்தி வேறு யாராவது நீதி மன்றங்களுக்கு சென்று சட்டரீதியான சிக்கல் வந்து விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கின்றது. 10 சதவீதம் வரை உயர்த்த சட்டரீதியான நுணுக்கங்களை ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. முதல்வர் நிச்சயம் சட்ட விதிகளை பின்பற்றி எந்த நடவடிக்கையானாலும் எடுப்பார். அவசரக்கோலத்தில்…
முகலாயர்களின் பேத்தி மற்றும் செட்போர்ட் உரிமையாளர் என்று கூறும் சுல்தானா பேகூமைச் சந்திக்கவும்-இங்கே எஸ்சி கூறுகிறது ஒரு வரலாற்று சோப் ஓபராவிலிருந்து நேராக ஒரு ராயல் நாடகம் போல, ஒரு பெண் சமீபத்தில் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை (எஸ்சி) அணுகினார், அவர் முகலாயர்களின் பேரப்பிள்ளை என்றும், எனவே செங்கலைக் கோட்டையின் சரியான ‘வாரிசு’ என்றும் கூறினார்.ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்! முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் பேரரசர் தான் என்று கூறும் மீட்ஸுல்தானா பேகம், எஸ்சி தனது கூற்றுக்களுக்கு எவ்வாறு பதிலளித்தார் என்பது இங்கே.திங்களன்று, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் தலைமையிலான ஒரு பெஞ்ச், செட்போர்ட்டின் உரிமை தொடர்பான தனது மனுவை நிராகரித்து, அதை “தவறாக கருதப்பட்டது” மற்றும் “தகுதி இல்லாதது” என்று கூறியது. சுல்தானாவின் வழக்கறிஞர், அவர் இந்தியாவின் “முதல் சுதந்திர போராளி” உடன் தொடர்புடையவர் என்று உணர்ச்சியுடன் வாதிட்டார், அது நீதிமன்றத்தைத்…
