‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு படக்குழுவினரை ரஜினி பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இப்படத்தின் கதையை முதலில் ரஜினியை மனதில் வைத்தே எழுதியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். தற்போது ‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியிருக்கிறார். ரஜினி பாராட்டு குறித்து கார்த்திக் சுப்புராஜ், “தலைவர் ரெட்ரோ பார்த்தார். அவருக்கு அப்படம் மிகவும் பிடித்திருந்தது. தலைவரின் வார்த்தைகள் – ‘என்ன ஓர் அற்புதமான முயற்சி. சூர்யா நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் சூப்பர். “LAUGHTER” பக்கங்கள் அற்புதம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’. நன்றி தலைவா” என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் பாராட்டால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும், தமிழகத்தில் முதல் நாள் அதிக வசூல் செய்த சூர்யா படம் என்ற சாதனை படைத்திருக்கிறது ‘ரெட்ரோ’. மேலும் வரும் வார…
Author: admin
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அகவை 93-ஐ எட்டினாலும் இன்னமும் தமிழர் நலனுக்காக சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். நிகழ்ச்சி ஒன்றுக்காக திருப்பூர் வந்திருந்த அவரிடம், இலங்கையை சீனா ஆக்கிரமித்து வரும் பிரச்சினை, எல்லையில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உலகத் தமிழர்களின் இன்றைய நிலை உள்ளிட்டவை குறித்து பேசினோம். இன்றைய சூழலில் எத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்? இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். ஆங்கிலேயர்களுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் தமிழர்கள் தான் அதிகமான நாடுகளில் வாழ்கிறார்கள். இந்நாடுகளை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், ரப்பர், தேயிலை, காபி போன்ற பணப்பயிர்களை விளைவிக்க கிராமப்புற உழைப்பாளிகளையும், பட்டியலின மக்களையும் இங்கிருந்து கப்பல், கப்பலாக ஏற்றி இந்த நாடுகளில் குடியமர்த்தினர். அப்படித்தான் இன்றைக்கு உலகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழர்களின் உழைப்பால் தான் ஆங்கிலேயர்கள் தங்களை செல்வந்தர்கள் ஆக்கிக் கொண்டார்களா? பர்மாவின் ஐராவதி…
ஸ்டீபன் கறி தனது தொடையில் ஒரு சிரமத்தை சந்தித்ததால் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் ஒரு பெரிய பின்னடைவை எதிர்கொண்டது. செவ்வாயன்று மினசோட்டா டிம்பர்வொல்வ்ஸுக்கு எதிரான போட்டியின் இரண்டாவது காலாண்டில் அவர் இந்த காயத்தை சந்தித்தார். ஸ்டீபன் கறி NBA இல் உள்ள கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸின் தொழில்முறை கூடைப்பந்து வீரர், கூடைப்பந்து வரலாற்றில் மிகப் பெரிய துப்பாக்கி சுடும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறது. நான்கு முறை NBA சாம்பியன், இரண்டு முறை எம்விபி மற்றும் எட்டு முறை ஆல்-ஸ்டார் கறி தனது ஆழ்ந்த மூன்று-புள்ளி படப்பிடிப்பு மற்றும் விரைவான வெளியீட்டால் விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது.இது தீவிரமானதா?டாக்டர் இவான் ஜெஃப்ரீஸின் கூற்றுப்படி: “ஸ்டீபன் கறி ஒரு” தொடை திரிபு “இருப்பது கண்டறியப்பட்டது இது ஒரு பிளேஆஃப் தொடரில் மோசமான காட்சி.” “குணப்படுத்துவதற்கான வழக்கமான காலவரிசை தரம் I: 7-10 நாட்கள், தரம் II: 3-6 வாரங்கள்” என்று டிபிடி எக்ஸ். உங்கள் தசை…
விண்வெளியில் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பூமி தொடர்ந்து ஆபத்தில் உள்ளது, மேலும் பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள்-சுற்றுப்புறங்களை அச்சுறுத்துவதில் கிரகத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் சுற்றுப்பாதைகளைக் கொண்ட இடங்கள். பெரும்பாலானவை பாதிப்பில்லாமல் கடந்து செல்லும்போது, பூமியின் வெளிப்பாட்டை ஒரு புத்திசாலித்தனமாக நினைவூட்டுவதாக ஒவ்வொரு ஃபிள்பியும் செயல்படுகிறது. பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள், அதாவது சிறுகோள் 2025 HY2.பூமியைக் கடக்க 2025 HY2 சிறுகோள்: தேதி, நேரம் மற்றும் வேகம்சிறுகோள் 2025 HY2 அதன் பூமியை மூடிய இடத்திற்கு அருகில் இருக்க வேண்டும், மே 7, 2025, மதியம் 12:49 மணிக்கு IST (07:19 UTC). ஃப்ளிபிக்கு அருகில் இருக்கும்போது இது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 48,904 கிலோமீட்டர் (மணிக்கு சுமார் 30,389 மைல்கள்) குறிப்பிடத்தக்க வேகத்தில் பறக்கும்.நெருக்கமாகவும் வேகமாகவும் இருந்தாலும், சிறுகோள் பூமியால் வெறும் 6.8 மில்லியன் கிலோமீட்டர் (4.2 மில்லியன் மைல்கள்) பறக்கும். இது ஒரு பெரிய தூரம் போல் தோன்றினாலும், அண்ட தரங்களால்,…
புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் பதிவிட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. 6 பேர் உயிரிழப்பு: இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக்…
புதுடெல்லி: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படும் வரை இந்திய அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். மேலும் வரவிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இரண்டு மூத்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் தனக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் 38 வயதான ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தொடருவாரா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. மேலும் 36 வயதை கடந்துள்ள விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய…
சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் 11, 12, ம் தேதிகளில் வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் 5,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 11-ம் தேதி 1,156 பேருந்துகளும், 12-ம் தேதி 966 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 11-ம் தேதி 150 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 12-ம் தேதி 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 11-ம் தேதி 1,940 சிறப்பு பேருந்துகளும், 12-ம் தேதி 1,530 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.…
61 வது பேக்சாங் ஆர்ட்ஸ் விருதுகள் திங்களன்று (மே 5) அன்று நெட்ஃபிக்ஸ் உடன் மூடப்பட்டிருக்கும் போது வாழ்க்கை நான்கு பெரிய வெற்றிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் டேன்ஜரைன்களை உங்களுக்கு வழங்குகிறது. இந்த நாடகம் இரவில் மிகவும் வழங்கப்பட்டாலும், நிகழ்ச்சியின் இதயமும் ஆத்மாவும் ஐ.யு ஒரு விருதை வெல்லவில்லை என்று ரசிகர்கள் திகைத்துப் போனார்கள். சிறந்த நடிகை மற்றும் மிகவும் பிரபலமான நடிகை வகைகளில் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், IU வெறுங்கையுடன் நடந்து சென்றது. பலருக்கு, இது பேக்சாங் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்னப்களில் ஒன்றாகும்.லீ ஜி யூன் என்றும் அழைக்கப்படும் IU நீண்ட காலமாக தென் கொரியாவின் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திரங்களில் ஒன்றாகும். எனது மிஸ்டர், ஹோட்டல் டெல் லூனா மற்றும் இப்போது டேன்ஜரின் போன்ற நாடகங்களில் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகளுடன், அவர் ஒரு வெற்றிகரமான தனிப்பாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு ஒரு நடிகையாக சீராக வளர்ந்துள்ளார். ஆயினும்கூட, பல ஆண்டுகளாக பல…
ராஞ்சி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பில் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. உளவுத் துறையின் தகவலை காஷ்மீர் போலீஸார், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்காதது ஏன்? தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? இவ்வாறு கார்கே கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் துகின் சின்ஹா கூறியதாவது: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரதமரின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் கார்கே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்…
சென்னை: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் எதிரொலி காரணமாக குடிநீர் கேன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள முறையான விதிமுறைகளை பின்பற்றுமாறு குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி உணவு பாதுகாப்புத் துறை அந்நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தையொட்டி குடிநீர் கேன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், விதிகளின்படி, சூரிய ஒளி முன்னிலையில் குடிநீரை தேக்கி வைக்க கூடாது. கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியம் அளவை ஒரு லிட்டர்…
