சென்னை: “முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது. அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Author: admin
வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு இரவும் குறைந்தது 8-10 மணிநேர தரமான தூக்கம் தேவை, நாட்டின் பெரும்பாலான பள்ளிகள் அதிகாலையில் (காலை 7-8) தொடங்குவதால், உங்கள் பிள்ளை அதிகாலையில் படுக்கைக்கு வருவது கட்டாயமாகும். இருப்பினும், அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில், வீட்டுப்பாடம், விளையாட்டு நேரம் மற்றும் உணவு சாப்பிடுவது எல்லாவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கிறது. இதன் விளைவாக, ஒரு டாஸுக்கு செல்லும் முதல் விஷயம் உங்கள் குழந்தையின் படுக்கை நேர வழக்கமாகும், இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காலையில் காலத்திற்கு வழிவகுக்கிறது. இந்த தீய சுழற்சியை உடைக்க வேண்டும், இதைப் பற்றி எப்படிச் செல்வது என்பது இங்கே … (போனஸ்: நீங்கள் சில கூடுதல் உறக்கநிலை நேரங்களையும் இந்த வழியில் பிடிக்கலாம்!)ஒரு நிலையான அட்டவணையை உருவாக்குவதும் நடைமுறைக்குரியதுபெரியவர்களைப் போலவே, குழந்தைகளும் வழக்கமாக செழித்து வளர்கிறார்கள், ஏனெனில் இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது மற்றும் அவர்களின் உடல் கடிகாரத்தை சரிசெய்ய உதவுகிறது.…
அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. பிஜி மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தவால் கமேட்டி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்திக்கையில், “இன்றைய நிலவரப்படி விமான விபத்துப் பகுதியிலிருந்து 270 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார். மேலும், விமான விபத்து நடந்த இடத்தில் தடயங்களைத் தேடும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 12) ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.…
சென்னை: சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்காமல் மேற்கொள்ளப்பட்ட 5 உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காலியாக இருந்த 64 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, 5 உதவி பேராசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழக கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் மகேஸ்வரி, மேனகா உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று…
ஃப்ரேனியர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள், ஆனால் அவை பெரும்பாலும் சரியானதாக உணராத பாராட்டுக்களுடன் அதை மறைக்கின்றன. உதாரணமாக, “அனுபவமில்லாத ஒருவருக்காக நீங்கள் நன்றாகச் செய்தீர்கள்” அல்லது “உங்கள் அமைதியான இயல்பு இருந்தபோதிலும் நீங்கள் கவனிக்கப்படுவது அதிர்ஷ்டம்” என்று அவர்கள் கூறலாம். இந்த பாராட்டுக்கள் உங்களை ஆதரிப்பதாக நடித்து உங்கள் திறன்களை நுட்பமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. இத்தகைய கருத்துக்கள் பாராட்டுக்களாக மாறுவேடமிட்டுள்ளன, ஆனால் அவை உங்களை நுட்பமாக கீழே இழுக்கின்றன, இது நீங்கள் புறக்கணிக்கக் கூடாத ஒரு பெரிய சிவப்புக் கொடி.எவ்வாறு கையாள்வது: உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டாம். அதற்கு பதிலாக, பாராட்டுக்களை பணிவுடன் ஒப்புக் கொண்டு முன்னேறவும். அத்தகைய நபர்களுடன் அதிகம் பேசுவதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்கவும், அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை அவர்கள் உணருவார்கள்.
திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு மே 24 அன்று தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் கடுமையான மழை பெய்தது. அதையடுத்து சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த மழை இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று காலை (ஜூன் 14, 2025) வெளியிட்ட வானிலை அறிவிப்பின்படி, கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவற்றுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 14 மற்றும் ஜூன் 15) மிக கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 14) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு…
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (NTA) இன்று வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நீட் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ வலைத்தளமான neet.nta.nic.in மூலம் தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதன் முடிவுகளை neet.nta.nic.in, exams.nta.ac.in ஆகிய தளங்களில் அறிந்துகொள்ளலாம். அதேபோல அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் தகவல்களை தங்களின் மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டதன் அடிப்படையில் நீட் யுஜி 2025-க்கான இறுதி விடைக்குறிப்பையும் தேர்வெழுதியவர்கள் சரிபார்க்கலாம். இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஸ் மற்றும் பிற இளங்கலை மருத்துவப்…
சென்னை: “திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மழைநீரை தேக்கப், பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் என எக்காலத்தில் மழை பெய்தாலும் மழைநீரை சேமிக்க, பாதுகாக்க தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. குறிப்பாக மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் காலங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை என அனைத்து நீர் நிலைகளையும் முறையாக தூர் வாரி பாதுகாப்பாக வைத்திருந்தால் மழை நீரை சேமிக்க முடியும். தற்போது வெயில் காலம் என்பதால் மழை வருவதற்கு முன்பாக நீர்நிலைகளை முறையாக கண்காணித்து, தூர்வாரி, பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின்…
பின் கொழுப்பு பிடிவாதமாக இருக்கலாம் மற்றும் இது புகைப்படங்களில் தோன்றும் வரை அல்லது இறுக்கமான டாப்ஸின் கீழ் காண்பிக்கப்படும் வரை கவனிக்கப்படாமல் போகும். நீங்கள் ஒரு இடத்திலிருந்து மட்டும் கொழுப்பைக் குறைக்க முடியாது என்றாலும், இலக்கு பயிற்சிகள் உங்கள் மேல் மற்றும் கீழ் முதுகில் உள்ள தசைகளை தொனிக்கவும் வடிவமைக்கவும் உதவும், இதனால் உங்கள் முழு உடற்பகுதியும் மேலும் வரையறுக்கப்படுகிறது.ஹெல்த்லைன் பகிரப்பட்ட இந்த நான்கு பயிற்சிகள் ஆரம்பநிலைக்கு எளிதானவை மற்றும் அதிக உபகரணங்கள் தேவையில்லை. அவை உங்கள் மையத்தை செயல்படுத்தவும், தோரணையை மேம்படுத்தவும், கார்டியோ பெரும்பாலும் தவறவிட்ட பகுதிகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. எப்படி தொடங்குவது என்பது இங்கே.பக்க கால் லிப்ட்உங்கள் கால்கள் அடுக்கப்பட்டு உங்கள் கால்விரல்கள் நெகிழ்ந்து உங்கள் வலது பக்கத்தில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வலது கையை உங்கள் தலையின் கீழ் மற்றும் இடது கையை சமநிலைக்கு முன்னால் வைக்கவும். இப்போது இரு கால்களையும் உங்கள் கால்களை நேராகவும் ஒன்றாகவும்…
புதுடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது. இதற்கு எதிராக கமல்ஹாசன் கடந்த 3-ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ”கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு அந்த திரைப்படத்தை திரையிட முடியாது” எனக்கூறி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். இதனால் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. இந்த தடையை…
