ஹைதராபாத்: நீதிமன்றத்துக்கு வெளியே வந்து, குற்றம் சாட்டப்பட்ட வயதான தம்பதியினரிடம் நீதிபதியே நேரில் விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளார். நீதிபதியின் இந்த மனிதாபிமான செயல் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், ராமகூர் கிராமத்தை சேர்ந்தவர் கங்காராம் (75). இவரது மனைவி சோமம்மாள் (69). இந்த வயதான தம்பதியினர் மீது மருமகள் வரதட்சணை கொடுமை வழக்கு போட்டிருந்தார். இவ்வழக்கு நிஜாமாபாத் மாவட்டம், போதன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சரிவர நடக்க கூட முடியாத இந்த வயதான தம்பதியினர், ஒவ்வொரு வாய்தாவிற்கும் கஷ்டப்பட்டு நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராயினர். இவ்வழக்கை நீதிபதி சாய் சிவா விசாரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் கூட நடக்க முடியாமல் அந்த மூத்த தம்பதியினர் ஒரு ஆட்டோவில் நீதிமன்றத்துக்கு வந்தனர். ஆனால், கங்காராமால் ஆட்டோவில் இருந்து இறங்கி நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து…
Author: admin
சென்னை: “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் , பிரதமர் மீன்வளத் திட்டம் , உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். படையப்பா படக் ‘காமெடி’ போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான்…
ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில், குறிப்பாக சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை உளவியல் அடிப்படையிலான, வித்தியாசமான தோற்றமுடைய படங்கள், அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளன. எனவே, அத்தகைய படங்களில் ஒரு நபர் முதலில் கவனிப்பதைப் பொறுத்து, அவர்களின் உண்மையான ஆளுமையைப் பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும், இது பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது குறைவாக அறியப்படுகிறது.இந்த குறிப்பிட்ட சோதனை- ஆரம்பத்தில் ஜக்ரான் ஜோஷ் பகிர்ந்து கொண்டார்- ஒரு நபர் வாழ்க்கையில் உண்மையிலேயே முன்னுரிமை அளிப்பதை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது- காதல் அல்லது தொழில். மேலே உள்ள படத்தில் ஒரு பெண், பறவை, மற்றும் பின்னணியில் ஒரு முகம் போன்ற பல கூறுகள் உள்ளன. முதலில் உங்கள் கவனத்தை ஈர்க்கும் அடிப்படையில், உங்கள் உண்மையான இயல்பு பற்றி நிறைய புரிந்து கொள்ள முடியும்.எனவே, இந்த சோதனையை எடுக்க தயாரா? வெறுமனே கண்களை மூடிக்கொண்டு, ஓய்வெடுங்கள்,…
அகமதாபாத்: மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உணவு சமைத்து கொடுத்து வந்த தனது தாய் மற்றும் 2 வயது மகள் ஆகியோர் விமான விபத்தில் காணாமல் போனதையடுத்து அவரது மகன் அவர்களை தேடி வருகிறார். ஷர்லாபென் தாக்குர் என்பவர் அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று உணவு கொடுப்பதற்காக அவரும் அவரது 2 வயது பேத்தியும் மருத்துவ மாணவர் விடுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென விமானம் அந்த கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரது மகன் தனது தாய் மற்றும் 2 வயது மகளை தேடி வருகிறார். இடிபாடுகளுக்கு இடையில் அடியில் புதைந்துள்ள உடல்களை போலீஸார் தேடி வரும் நிலையில் ஷர்லாபென் தாக்குரும், அவரது பேத்தி ஆதியாவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஷர்லாபென் தாக்குரின் மகன் ரவி…
திருநெல்வேலி: தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தேசிய அளவில் 27-வது இடத்தையும் பெற்றுள்ளார். இந்த ஆண்டு நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 14) வெளியானது. இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரியநாராயணன் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27-வது இடத்தையும் பெற்றுள்ளார். மாணவர் சூரியநாராயணன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்களை பெற்றிருந்தார். மேலும், ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மாணவர் சூரிய நாராயணன் மழலையர்…
சென்னை: மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக கார் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ஏழில் தீபாவுடன், கார் ஓட்டுநர் பாபு திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்ததாக, மற்றொரு ஓட்டுநர் கண்ணன், கிருஷ்ணமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதனால் ஆக்கிரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோர் கூலிப்படையினர் விஜயகுமார், ஜான், செந்தில் ஆகிய மூன்று பேர் உதவியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு பாபுவின் ஆணுறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக பாபுவின் தந்தை அளித்த புகாரில் சென்னை அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமர்வு…
சண்டிகரின் சுகாதாரத் துறை 450 கிலோ கலப்படம் செய்யப்பட்ட பன்னீர் மற்றும் பால் பொருட்களை தாக்குதலின் போது பறிமுதல் செய்தது, இது உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டியது. உண்மையான உற்பத்தி செலவுகள் ஒரு கிலோவுக்கு ரூ .300 ஐ விட அதிகமாக இருப்பதால், வழக்கத்திற்கு மாறாக மலிவான பன்னீருக்கு எதிராக நுகர்வோரை அதிகாரிகள் எச்சரித்தனர். பன்னீர் என்பது புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்த சத்தான உணவு பெரும்பாலும் சந்தையில் நடந்துகொண்டிருக்கும் கலப்படம் காரணமாக செய்திகளை உருவாக்குகிறது. சண்டிகரில் ஒரு பெரிய ஒடுக்குமுறையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒரு கடை மற்றும் ஒரு வாகனத்திலிருந்து சுமார் 450 கிலோ பன்னீர் மற்றும் பிற பால் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். விவரங்களைப் படிக்க கீழே உருட்டவும். ஒரு TOI அறிக்கையின்படி, சண்டிகர் சுகாதாரத் துறையின் உணவு பாதுகாப்பு நிர்வாகம் பபுடாம் காலனியில், பிரிவு 26 இல் ஒரு…
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமம் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ பதிவில், “இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உயிரிழந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், இந்த இழப்பால் மிகவும் துயரமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக பிரார்த்திக்கின்றோம். எங்கள் தாய் நிறுவனமான டாடா குழுமம், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் அல்லது தோராயமாக 85,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை வழங்குவதாகவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் குழு இப்போது சம்பவ இடத்தில் உதவி செய்து வருகிறது. விபத்தில் காயமடைந்த மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். இந்த…
சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரிய நாராயணன் தேசியளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது.…
டெல் அவிவ்: ஈரானின் பதிலடி தாக்குததலின் எதிரொலியாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் மீது இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் ஈரான் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினருக்கு இந்திய அரசு அவசர ஆலோசனைகளை வழங்கியது. அதே நேரத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்கவும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படையினரின் அறிவுறுத்தல்களின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். நாட்டுக்குள் தேவையற்ற பயணங்களைத்…
