புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தின. சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 70 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா ஆதரவு அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்,இது குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்றும் பாகிஸ்தான் கூறியது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட…
Author: admin
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், “டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்” என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த தாக்குதல் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அடுத்தபடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த சில தினங்களில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது அரசு எடுக்கும்…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘சிந்தூர்’ தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன் விவரம் வருமாறு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: தீவிரவாதம் ஒரு அவமானம். கடந்த காலங்களை பார்க்கும் போது ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப் போகிறது என்பது மக்களுக்கு தெரியும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன். சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும். இரு நாடுகளிடமும் நாங்கள் பேசி வருகிறோம். இரு நாடுகளுக்கு இடையில் உள்ள பதற்றத்தை தணிக்க சீனா தயாராக உள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை: இரு நாடுகளுக்கு இடையில் தாக்குதல் ஏற்பட்டுள்ளது…
ஐபிஎல் சீசனின் 57வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் குர்பாஸ் 11, சுனில் நரேன் 26 ரன்கள் எடுத்தனர். ரஹேனே 48 ரன்கள் விளாசினார். ரகுவன்ஷி 1, மணீஷ் பாண்டே 36, ஆண்ட்ரே ரஸ்ஸல் 38, ரிங்கு சிங் 9, ராமன்தீப் சிங் 4 என 20 ஓவர் முடிவில் 179 ரன்களை கொல்கத்தா அணி எடுத்திருந்தது. அதிகபட்சமாக நூர் அஹமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர். 5 ஓவர்களில் விக்கெட்களை…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் கடுமையாக எதிரொலித்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பங்குச் சந்தையில் கராச்சி-100 குறியீட்டெண் 6,272 புள்ளிகள் அதாவது 6 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முந்தைய செவ்வாய்க்கிழமை வர்த்தகம் 1,13,568.51 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டு 1,07,296.64 புள்ளிகளாக ஆனது. இதேபோன்று, கேஎஸ்இ-100 குறியீடும் 3.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதேநேரம், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் மந்த நிலையில் காணப்பட்டாலும் இறுதியில் சென்செக்ஸ் 105.71 புள்ளிகள் ஏற்றம் கண்டு 80,746.78 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 24,414.40-ல் நிலைத்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 23 முதல் மே 5 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் பங்குச் சந்தைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேஎஸ்இ-100…
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் பிறகு இந்திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்புடன் உள்ளன. இந்தியாவின் முன்னேற்பாடுகளை கண்டு, பாகிஸ்தானில் அச்சம் அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் ஏற்பட்டால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இதற்கு பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிடம் தற்போது 96 மணி நேரம், அதாவது 4 நாட்கள் மட்டுமே பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளை இயக்குவதற்கான வெடிமருந்துகள் உள்ளன. இதனால் மிகவும் ஆபத்தான சூழலுக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது,இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் பாகிஸ்தான் எல்லைகளில் பணியாற்றும் இந்திய உளவுத்துறை வட்டாரம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ உத்தி இந்தியாவுக்கு எதிராக அதன் நிலங்களை கைப்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு பாகிஸ்தானுக்கு 155 மிமீ குண்டுகள் மற்றும் 122 மிமீ ராக்கெட்டுகள் தேவை.…
ஒற்றுமைக்கான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம். அதேபோல் வலிமையில் எல்லையற்றதாக இருக்கிறோம். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். ஒற்றுமைக்கான செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும்போது இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. நாங்கள் ஒரே அணி. ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் ஹேஷ்டாக்கையும் இணைத்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், ஷிகர் தவான், யூசுப் பதான், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், செஸ் வீரர் விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படை நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. அப்போது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு முஸாபராபாத் பகுதியில் உள்ள மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதுகுறித்து முகமது ஷைர் மிர் (46) கூறும்போது, “வெடி சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அப்போது மீண்டும் குண்டு வெடித்தது. இதனால் அச்சமடைந்த நாங்கள், குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி மலைப்பகுதிக்குச் சென்றோம்” என்றார். பாரதத்தின் பதிலடி: அமைச்சர் அமித் ஷா பதிவு: பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்களை கொன்றதற்கான பாரதத்தின் பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர் என்று அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று வெளியிட்ட…
தொழில்நுட்பத்தின் சகாப்தத்தில், காதல் கூட ஆன்லைனில் காணப்படுகிறது. இருப்பினும், மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் விருப்பங்களைத் தனிப்பயனாக்க மிகவும் பழகிவிட்டனர், டேட்டிங் அம்சத்தில் கூட, நிமிட விவரங்கள் முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.சிறந்த அரசியல் கட்சிகளுடன் இணைந்திருப்பது முதல் டெய்லர் ஸ்விஃப்ட் போன்ற ஒரு குறிப்பிட்ட இசைக் கலைஞரைப் பின்பற்றுவது வரை இவை இருக்கலாம். எவ்வாறாயினும், ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் தற்போதைய பொருளாதாரத்தில் உயிர்வாழ்வது கடினம் என்று சமீபத்திய நிகழ்வுகளில், மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற மிக முக்கியமான கவலைகளை பரிசீலித்து வருகின்றனர்.ஆமாம், டொராண்டோ நட்சத்திரத்தின் கூற்றுப்படி, அன்பிலிருந்து வேறுபட்ட காரணங்களுக்காக கனேடிய காதல் வாய்ப்புகளில் அதிகமான ஒற்றை அமெரிக்கர்கள் சரியாக ஸ்வைப் செய்கிறார்கள். இப்போது, இளம் அமெரிக்க நபர்கள் காதல் விட அரசியல் வேகத்தையும் சிறந்த மருத்துவ நன்மைகளையும் மாற்றுகிறார்கள்.கனேடிய உறவு பயிற்சியாளரான சன்னா ப்ரோம்லியின் கூற்றுப்படி, கனடாவுக்கான இடமாற்றம் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அதன் பின்னால் உள்ள…
பாட்னா: நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக தனது திருமண கொண்டாட்டங்களை பிஹாரைச் சேர்ந்த மணமகன் ஒருவர் ரத்து செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரின் பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷாந்த் குஷ்வாஹா. இவருக்கு புதன்கிழமை (மே 07) திருமணம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அராரியா மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மணப்பெண்ணில் வீட்டுக்கு “பராத்” எனப்படும் திருமண கொண்டாட்டத்துக்காக சுஷாந்த் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தனது பகுதியில் நடைபெற்ற போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்பதாக அவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மணப்பெண்ணை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தார். இது குறித்து கூறிய சுஷாந்த், “இன்று என்னுடைய திருமணம், ஆனால் அது மட்டுமே எனக்குமகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் அல்ல. இன்று, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஒத்திகையில்…
