Author: admin

சென்னை: சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று (மே 14) நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக அங்கு வருகை தந்த அவருக்கு அணிவகுப்புடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் மேடையில் அட்லீ பேசியதாவது: “இன்று நான் ஒரு பெரிய இயக்குநராக இருக்கலாம். ஆனால் சினிமாத் துறையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் நெருப்பில் நிற்பதை போன்றது. ஆனால் நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த அருண் குமார் நெருப்பு போன்று இருப்பான். நான் இப்போது ஐந்து மணி நேரம் தூங்குகிறேன். அவன் இரண்டு மணி நேரம் தான் தூங்குவான். இளம் வயதில் நாம் என்னவாகப் போகிறோம் என்று எல்லோர் மனதிலும் ஒரு விதை இருக்கும். அது மிகவும் வலுவாக இருக்க வேண்டும்.…

Read More

சென்னை: ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்கிறார். இதுதொடர்பாக நேற்று பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும், பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,‘‘அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்று விமர்சிக்கப்பட்ட கொடுங்கோன்மையில் இருந்தும் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் திமுக ஆட்சியின் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் தான். அவர்களைக் காப்பாற்றுவது தான் பொறுப்புள்ள அரசியல் கட்சியின் கடமை என பாமக கருதுகிறது. தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தான்…

Read More

பண்டைய மற்றும் இடைக்கால காலங்களில், மன்னர்களும் பேரரசர்களும் தங்கள் வயிற்றை நிரப்ப உணவருந்தவில்லை, அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட விருந்து வைத்தனர். ராயல் அட்டவணையில் உள்ள ஒவ்வொரு பொருளும், தட்டுகள் உட்பட, குறியீட்டு மற்றும் மூலோபாய மதிப்பைக் கொண்டிருந்தன. வெள்ளி மற்றும் தங்கம் ராயல் டேபிள்வேருக்கு மிகவும் விருப்பமான பொருட்களாக இருந்தன, அவை பொதுவான பீங்கான் அல்லது களிமண் உணவுகளை வெளிப்படுத்துகின்றன. அவர்களின் முறையீடு களியாட்டத்தைப் பற்றியது அல்ல, ஏனெனில் இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் சுகாதார நன்மைகளை வழங்குவதாகவும், விஷத்திலிருந்து பாதுகாக்கவும், தெய்வீக ஆதரவைப் பிரதிபலிக்கவும் நம்பப்பட்டன. கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்கள் முழுவதும், வெள்ளி மற்றும் தங்கத்திலிருந்து சாப்பிடுவது சக்தி, க ti ரவம் மற்றும் பாதுகாப்பின் வெளிப்பாடாக இருந்தது. உணவுகள் கவனமாக குணப்படுத்தப்பட்டன, பெரும்பாலும் பிரபுக்கள், தூதர்கள் மற்றும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பளபளப்பான தகடுகள் ஆதிக்கத்தை நிறுவ உதவியது மற்றும் மன்னர் மற்றும் அவரது பேரரசின் வாழ்க்கையை விட…

Read More

‘தக் லைஃப்’ படத்தில் பதிவு செய்யப்பட்ட ‘முத்த மழை’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. தீ குரலில் த்ரிஷா இடம்பெற்றுள்ள இந்தப் பாடலும் புது விவாதம் ஒன்றை கிளப்பியுள்ளது. சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் இணையத்தில் வைரலானது. பலரும் அவருடைய குரலைக் கேட்டு மெய் மறந்தார்கள். படத்துக்காக, பாடகி தீ குரலில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது. ஒரு தரப்பினர் சின்மயி வெர்ஷனையும், இன்னொரு தரப்பினர் தீ வெர்ஷனையும் கொண்டாடிய வண்ணம் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், திரையரங்குகளில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ‘முத்த மழை’ பாடலே படத்தில் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், ‘தக் லைஃப்’ படத்துக்காக படமாக்கப்பட்ட ‘முத்த மழை’ பாடல் வீடியோ இப்போது யூடியூபில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், மேடையில் நடனக்…

Read More

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக எந்த அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதுதொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களி்ல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவி்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,…

Read More

முதல் பார்வையில், இந்த படம் முழு பச்சை இலைகள் மற்றும் புதிய பசுமையாக இருக்கும் சாதாரண, அடர்த்தியான வன நிலப்பரப்பாகத் தெரிகிறது. அனைத்தும் அமைதியாகவும் இயல்பாகவும் தோன்றுகின்றன. ஆனால் ஒரு திருப்பம் உள்ளது: நீங்கள் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுத்தால், கீரைகளில் கூடு கட்டப்பட்ட ஆச்சரியமான ஒன்றைக் காண்பீர்கள்: ஒரு சிறிய ஹம்மிங் பறவை! சிறிய ஹம்மிங்பேர்டைக் கண்டுபிடிக்க முடியுமா?இந்த மூளை டீஸர் முதல் பார்வையில் எளிதானது, ஆனால் எங்களை நம்புங்கள், இது உண்மையில் சவாலானது. உண்மையான சவால் பிடிப்பு: உயர் ஐ.க்யூ மற்றும் சரியான 20/20 பார்வை உள்ளவர்கள் மட்டுமே இதை வெறும் 12 வினாடிகளில் முடிக்க முடிகிறது. உங்களுக்கு என்ன தேவை என்று நினைக்கிறீர்களா? இதை முயற்சி செய்து, நேரம் நீங்குவதற்கு முன்பு மறைக்கப்பட்ட ஹம்மிங் பறவையை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்!புகைப்படம் ஒரு மரத்தில் பச்சை பசுமையாக ஒரு தடிமனான குழுவை சித்தரிக்கிறது, சூரிய ஒளி…

Read More

‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால், படத்தின் வெளியீடும் தள்ளிப்போகும் என தெரிகிறது. ‘ஹிட் 3’ படத்துக்குப் பிறகு நானி நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. இதனை ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் அறிவிப்பு டீசர் மற்றும் அதற்கான அனிருத் இசை என அனைத்துமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. உடனடியாக ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டன. ‘தி பாரடைஸ்’ படம் அறிவிக்கப்பட்ட போதே அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால், இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டு வரும் அரங்குகளின் பணிகள் முழுமையாக முடியவடையாமல் இருக்கிறது. ஆகையால், இதன் படப்பிடிப்பு ஜூலையில் தான் தொடங்கும் என தெரிகிறது. மேலும், நானி உடன் நடிக்கவுள்ள நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அவர்களும் படப்பிடிப்பு தேதிகள் தெரியாமல் ஒப்பந்தம்…

Read More

சென்னை: மெட்ரோ ரயில் மேம்பால தூண் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த விபத்துக்கு, இரும்பு உபகரணம் பொருத்த வைக்கப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், போரூர் அருகே மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட 2 தூண்கள், அதன் இணைப்புப் பாலம் நேற்று முன்தினம் இரவு சரிந்து விழுந்ததால் இடிந்தன. இந்த விபத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். கான்கிரீட் தூண்கள் சாலையில் சரிந்து விழுந்ததையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து சென்ற போக்குவரத்து போலீஸார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read More

ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் (எளிதான வழி) உலகெங்கிலும் உள்ள பலருக்கு, ஆங்கிலம் கற்றுக்கொள்வதும் பேசுவதும் ஒரு தொந்தரவாகும். சிக்கலான இலக்கணம், வெவ்வேறு உச்சரிப்புகள், நீண்ட வாக்கியங்கள் மற்றும் பலவற்றை பலருக்கு கடினமாக்குகிறது. ஆங்கில திறன்களை மேம்படுத்த இங்கே 8 அடிப்படை, ஆனால் மந்திர உதவிக்குறிப்புகளைக் குறிப்பிடுகிறோம்.

Read More

திருமணம் குறித்த வதந்தி பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். கடந்த சில நாட்களாக இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார் காவ்யா மாறன். இதனால் இந்த வதந்தி வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் அனிருத், “கல்யாணமா… தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தென்னிந்திய திரையுலகில் தயாராகி வரும் ’கூலி’, ‘ஜெயிலர் 2’, ‘ஜனநாயகன்’, ‘மதராஸி’, ‘கிங்டம்’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘தி பாரடைஸ்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோருக்கு மட்டுமன்றி இசையமைப்பாளர் அனிருத்துக்கும்…

Read More