மதுரை: நீர்மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யக் கூடாது என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பழைய விளாங்குடி அதிமுக பகுதி செயலாளர் சித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “அதிமுக சார்பில் மதுரை-திண்டுக்கல் சாலையில் விளாங்குடியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்துவைத்தார். இந்நிலையில், நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி மறுத்து, கூடல்புதூர் போலீஸார் நோட்டீஸ் ஒட்டினர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: , தற்போது கடுமையான வெயில் காலம். மக்களின் நலன் கருதி ஒரு கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல்…
Author: admin
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் தாக்குதலையடுத்து எல்லை பகுதிகளில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்காக நிவாரண முகாம்கள் ஜம்மு மற்றும் சம்பலில் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று அந்த முகாம்களை பார்வையிட சென்ற ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அங்கிருந்த குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் குண்டுகளை வீசி தாக்கியதையடுத்து சம்பா முகாமில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்ற உமர் அப்துல்லா அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் அவரும் இணைந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் ட்ரோன், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை கடுமையாக கண்டித்துள்ள உமர் அப்துல்லா, நாங்கள் இத்தகைய சூழ்நிலையை உருவாக்க காரணமாக இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற வெற்றி தின பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். நாஜி ஜெர்மனி படைகளை வெற்றி கொண்டதை குறிக்கும் 80 ஆண்டு தினத்தையொட்டி ரஷ்யாவில் மாபெரும் வெற்றி தின பேரணிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உக்ரைனில் போரிடும் ரஷ்ய படைகளுடன், சீன படைகளும் இணைந்து அணிவகுப்பு மேற்கொண்டன. இந்த ஆண்டு ரஷ்ய வெற்றி தின அணிவகுப்பில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சீனா, பிரேசில், ஸ்லோவேக்கியா, செர்பியா உட்பட 27 உலக நாடுகளின் தலைவர்கள் இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்றனர். உக்ரைனில் நான்கு ஆண்டுகள் போர் நீடித்து வந்தாலும் ரஷ்யா உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்கு சான்றாக வெளிநாட்டு தலைவர்களின் வருகை அமைந்திருந்தது. 2022-ம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதல் முழு அளவிலான போராக மாறியதற்குப் பிறகு…
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் நேற்று மாசி வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது ‘‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’’ முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று முன்தினம் மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுவாமியும், அம்மனும் மாசி வீதிகளில் மண்டகப்படிகளில் எழுந்தருளி கீழமாசி வீதி தேரடிக்கு வந்தனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பின்னர் அங்குள்ள தேரடி கருப்பணசாமி கோயிலில் தீபாராதனை நடந்தது. மங்கல வாத்தியங்கள் முழங்க காலை 6.20 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நிலையிலிருந்து புறப்பட்டது.…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஒற்றுமை பேரணியையொட்டி மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்தின் துணிச்சலையும், தியாகங்களையும் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் ஒற்றுமை பேரணி நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாலை 4 முதல் 6 மணி வரை: இன்று மாலை 5 மணிக்கு மெரினா டிஜிபி அலுவலகத்தில் இருந்து தொடங்கும் பேரணி, நேப்பியர் பாலம் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முடிவடையும். எனவே, மாலை 4 மணிமுதல் 6 மணி வரை அப்பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும்…
அமெரிக்கா தற்போது அம்மை நோயின் மிக மோசமான வெடிப்புகளில் ஒன்றைக் கண்டதால், வழக்குகளின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது, அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) உறுதிப்படுத்தியுள்ளது.”மே 8, 2025 நிலவரப்படி, மொத்தம் 1,001 உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை வழக்குகள் 31 அதிகார வரம்புகளால் பதிவாகியுள்ளன: அலாஸ்கா, ஆர்கன்சாஸ், கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, ஜார்ஜியா, ஹவாய், இல்லினாய்ஸ், இந்தியானா, கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மேரிலேண்ட், மிச்சிகன், மிச்சிகன், மிச்சிகன், மிச்சிகன், நியூயார்கானா, நியூயார்கானா, மிச்சிகன், நியூபார்கானா, மிச்சிகன், மிச்சிகன், நியூபார்கானா, மிஸ்னோய்கான், மோன்டோயா, மிஸ்னோய்கான், மிஸ்னோய்கான், நியூபார்கன், மிஸ்யோர்கான், மிஸ்யோர்கான், மிஸ்யோரோய், வடக்கு டகோட்டா, ஓஹியோ, ஓக்லஹோமா, பென்சில்வேனியா, ரோட் தீவு, டென்னசி, டெக்சாஸ், வெர்மான்ட், வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் என்று அமெரிக்க சி.டி.சி ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியது.சுமார் 30% வழக்குகள் 19 வயது வரை குழந்தைகளில் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நபர்களில் 96% தடுப்பூசி போடப்படவில்லை என்று சி.டி.சி உறுதிப்படுத்தியுள்ளது.…
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அடுத்து நேரடியாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லையெனில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கும் முறை 1982-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்பின் பிளஸ் 2 தேர்வுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களின் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மாணவர்கள் விரும்பினால் நகல் எடுத்து கொள்ளவும், தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யவும் 2001-ல் அனுமதி தரப்பட்டது. இந்த அறிவிப்பு 2009-ம் ஆண்டு மற்ற பாடங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இனிவரும் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்யுமாறும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் தேர்வர்கள் முதலில் தங்கள் விடைத்தாள் நகல் கோரி…
திருச்சி: சரிவில் இருந்த தமிழகத்தை மீட்டு நம்பர்-1 மாநிலமாக்கி சாதனை படைத்துள்ளோம். இது வெறும் தொடக்கம்தான், திராவிட மாடல் ஆட்சியின் வெர்சன் 2.0 இனி சிங்கப் பாதையாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.1,032.15 கோடி மதிப்பிலான 7,122 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, ரூ.527.63 கோடி மதிப்பிலான 3,597 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், ரூ.856 கோடியில் 1,17,132 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தற்போது திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், குளிரூட்டப்பட்ட வசதியுடன் விமான நிலையத்துக்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ரூ.408 கோடியில் புதிய பேருந்து முனையம், ரூ.128 கோடியில் அண்ணா சரக்கு வாகன முனையம், ரூ.236 கோடியில் பெரியார் காய்கறி அங்காடி, ரூ.290…
எல்லோரும் வயது – வயதானது ஒரு இயற்கையான செயல்முறையாகும், உலகில் எந்த மருந்தும் அதை முற்றிலுமாக நிறுத்த முடியாது. எவ்வாறாயினும், உயிரியல் ரீதியாக வயதானதை எங்களால் நிறுத்த முடியாவிட்டாலும், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் மற்றும் தோற்றமளிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வயதானதை மெதுவாக்க முடியும். அதில் உடற்பயிற்சி ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது என்றாலும், சரியான உணவும் கூட உங்களை விட இளமையாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், தகவல்களின் சரமாரியாக, உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் இங்கே, எப்போதும் இளமையாக இருக்க (உணர) …
சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாணவர்கள் மே 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வு துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணை தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பம் உள்ள தனி தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மே 14 முதல் 29-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தனி தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில் தத்கால் திட்டம் மூலம் விண்ணப்பிக்கலாம்.…
