பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதனை ஏற்றதாக அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு ஒக்கலிகா, லிங்காயத்து போன்ற சாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்ட பிரிவு 11 (1)ன்படி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பு இப்போது காலாவதியாகிவிட்டது. அந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சில சாதியினர் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த…
Author: admin
சென்னை: சென்னை, ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் ஃபவுண்டேஷன், டிசிஎஸ் அயன் நிறுவனத்துடன் இணைந்து, மெஷின் லேர்னிங் ஆபரேஷன்ஸ் என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை (எம்எல் ஆப்ஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மெஷின் லேர்னிங் (எம்எல்) துறையில் உருவாகும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான நபர்களை உருவாக்கும் நோக்கில் இந்த படிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் படிப்பானது மொத்தம் 110 மணி நேரம் கொண்டது. இப்படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் பட்டதாரிகளுக்கு ஏஐ, எம்எல், டேட்டா சயின்ஸ் எல்எல்எம் (லார்ஜ் லேங்குவேஜ் மாடல்) துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவர்கள் டேட்டா இன்ஜினீயர், மெஷின் லேர்னிங் ஆபரேஷன்ஸ் இன்ஜினீயர், எம்எல் ஆப்ஸ் பிளாட்பார்ம் இன்ஜினீயர், எம்எல் ஆட்டோமேஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் சேரலாம். இந்த ஆன்லைன் படிப்பில் சேர ஆர்வமுடையவர்கள் என்ற இணையதளம் மூலம், ஜூலை 5-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு…
டெல் அவிவ்: ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார். ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில், ‘நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் உடனடியாக தெஹ்ரானில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தெஹ்ரானின் மையப்பகுதியிலிருந்து 3 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலும் எச்சரித்துள்ளது. நேற்று இரவு முதலே ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதும் கவனிக்கத்தக்கது. இதனிடையே, கனடா ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்பிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ட்ரம்ப்…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில், ரூ.5.25 கோடியில் செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணிக்கு, மேயர் ஆர்.பிரியா நேற்று அடிக்கல் நாட்டினார். சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை மண்டலம், 43-வது வார்டு, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.5.25 கோடியில், மருத்துவ இணையியல் படிப்பு பயிலும் உதவி செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மேயர் ஆர்.பிரியா பங்கேற்று திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கட்டிடம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 1,560 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில், தரைத் தளத்தில் முதல்வர் அறை, காப்பாளர் அலுவலகம், காப்பாளர் அறை, பெற்றோர் காத்திருப்பு அறை, சமையலறை, உணவுக் கூடம், கழிப்பறை உள்ளிட்ட 14 அறைகளும் கட்டப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர், வடக்கு…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹைபியின் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட பெண் குழு காட்ஸேயின் உறுப்பினருமான லாரா ராஜகோபாலன் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) க்கு பொய்யாக அறிவிக்கப்பட்டார். கே-பாப் ரசிகர் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் இந்த அறிக்கை, சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கும் ரசிகர் போர்களில் இருந்து பதட்டங்கள் அதிகரித்ததன் விளைவாகும்.எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு நெட்டிசன் லாராவை ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர் என்று பொய்யாகப் புகாரளித்த பின்னர் தீக்குளித்துள்ளார். அமெரிக்காவில் குடியேற்ற அமலாக்கத்தின் ஒரு காலகட்டத்தில் இந்த கூற்று வெளிவந்தது, ரசிகர்களிடையே கோபத்தை பெருக்கி, சமூக ஊடக தளங்களில் கூர்மையான விமர்சனங்களை ஈட்டியது. ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர் என்று லாராவை நெட்டிசன் தெரிவிக்கிறார்டொனால்ட் டிரம்பின் நாடுகடத்தப்பட்ட உந்துதலின் கீழ் பனி சோதனைகள் தீவிரமடைகின்றனஇந்த சம்பவத்தின் நேரம் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் குடியேற்ற ஒடுக்குமுறையுடன் ஒத்துப்போகிறது, இது அமெரிக்க வரலாற்றில் மிகவும் விரிவானது என்று விவரிக்கப்படுகிறது. இந்த…
திருப்பதி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருச்சானூர் பத்மாவதி தாயாரை பியூஷ் கோயல் தரிசனம் செய்துவிட்டு கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்திற்கு செல்வதற்கு தயாரானார். அப்போது அவர் செல்லவிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தனது குடும்பத்தாருடன் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியுற்று, அந்த ஹெலிகாப்டர் இனி தேவையா என்பதை அறிய வேண்டும் என டிஜிபி ஹரீஷ்குமார் குப்தாவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை கண்காணிப்பு பிரிவு அதிகாரிக்கு டிஜிபி எழுதியுள்ள கடிதத்தில், “முதல்வர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது குறித்தும் ஆரய வேண்டும். இனி இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தலாமா எனபது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்று, 11-வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 11-வது சர்வதேச யோகா தினத்தை யொட்டி உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் யோகாவை அனைவரும் பயிற்சி செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா” என்பதாகும். தனிநபர் நல்வாழ்வுக்கும், நமது ஆரோக்கியத்துக்கும் இடையிலான முக்கிய தொடர்பை இது எடுத்துக் காட்டுகிறது. அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில்யோகா செய்து தனிப்பட்ட ஆரோக்கியத்தை வளர்க்கவும், இணக்கமான சமூகத்தை உருவாக்கவும் ஆளுநர் வேண்டு கோள் விடுத்துள்ளார். இணையவழி சான்றிதழ்: ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தையொட்டி நிறுவனங்கள், மையங்கள்,…
குழந்தையின் போஸ், பாலாசனா என்றும் அழைக்கப்படுகிறது, இது மனதை அமைதிப்படுத்தும் மற்றும் உடலில் பதற்றத்தை நீக்குகிறது. ஆழமான, மெதுவான சுவாசத்தை ஊக்குவிக்கும் போது இது மெதுவாக பின்புறம் மற்றும் இடுப்பை நீட்டுகிறது, இது தளர்வுக்கு காரணமான பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்த உதவுகிறது.அதை எப்படி செய்வது:தரையில் மண்டியிட்டு உங்கள் குதிகால் மீது உட்கார்ந்து கொள்ளுங்கள்.முன்னோக்கி மடியுங்கள், உங்கள் கைகளை முன்னால் நீட்டவும் அல்லது உங்கள் உடலுடன் ஓய்வெடுக்கவும்.உங்கள் நெற்றியில் பாயில் ஓய்வெடுக்கவும் ஆழமாக சுவாசிக்கவும்.மெதுவான, அமைதியான சுவாசத்தில் கவனம் செலுத்தி, 1-3 நிமிடங்கள் பிடித்துக் கொள்ளுங்கள்.இது போஸ் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது, மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மேலும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.உடல்நலம்+யோகாவுடன் பொருத்தமாக இருங்கள்
புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினைக்காக இரைப்பை குடல் நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக சோனியா காந்தி கடந்த 9-ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக இம்மருத்துவமனைக்கு சென்று வந்தார். இதற்கு முன் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 2 நாட்கள்…
புதிதாகக் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் இன்னும் சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. தற்போதைய கட்டுமான நிலவரம் பற்றிய வீடியோவை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தளமும் எந்த நிலையில் உ்ள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மாண்ட ஆடிட்டோரியம், கூட்ட அரங்கம், மினி கன்வென்ஷன் ஹால், உணவுக் கூடம், சங்க அலுவலகம், வாடகைக்கு விடப்பட உள்ள தளம், பார்க்கிங் என முடிவடையும் நிலையில் உள்ள கட்டிடப் பகுதிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. “பெரிய ஒரு கனவு, நாங்கள் எடுத்துக் கொண்ட கடமை, இன்று நடப்பில். விரைவில் நிறைவுறும், கனவு நனவாய். வானுயர ஓங்கி நிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெருமை’ என அந்த வீடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியுள்ளார்,நடிகர் சங்கக் கட்டிடத்தில்தான் தனது திருமணம் நடைபெறும் என அதன் செயலாளர் விஷால் அறிவித்திருந்தார். சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவைக் காதலிப்பது பற்றிஅறிவித்திருந்தார்.…
