லிமாசோல்: உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியா-சைப்ரஸ் சிஇஓ அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவில் ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி மற்றும் பல ஆயிரம் சட்டங்களை குற்றமற்றதாக்குதல் மூலம் வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு தெளிவான மற்றும் நிலையான கொள்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதைத்தவிர, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு தேவையான முதன்மையான முக்கியத்துவத்தையும் அரசு அளித்துள்ளது. இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது. இது விரைவில் நிறைவேறும். உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலமாக நடைபெறுகிறது. இது இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல்…
Author: admin
டெல் அவிவ்: தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று ஐடிஎஃப் ட்வீட் செய்தது. ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை)…
Last Updated : 17 Jun, 2025 01:56 PM Published : 17 Jun 2025 01:56 PM Last Updated : 17 Jun 2025 01:56 PM தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அணைத்தனர் கோவில்பட்டி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் – கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி…
புகைப்படம்: @mia_yilin/ tiktok ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் தனித்துவமான, வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய சோதனைகள், அவை ஒரு நபரின் உண்மையான தன்மையை சில நொடிகளில் வெளிப்படுத்தும். எப்படி? சரி, இந்த சோதனைகள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, அவை பொதுவாக ஒன்று அல்லது இரண்டு கூறுகளைக் கொண்ட விசித்திரமான படங்களைக் கொண்டுள்ளன. இந்த படங்களில் ஒரு நபர் முதலில் கவனிப்பதைப் பொறுத்து, அவற்றின் குறைவாக அறியப்பட்ட ஆளுமை மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடியும். சிறந்த பகுதி, அத்தகைய சோதனைகளில் சரியான அல்லது தவறான பதில்கள் இல்லை.எடுத்துக்காட்டாக, இந்த குறிப்பிட்ட படம்- ஆரம்பத்தில் டிக்டோக்கில் மியா யிலின் பகிர்ந்து கொண்டார்- ஒரு நபரின் வாழ்க்கையைப் பற்றி நிறைய வெளிப்படுத்த முடியும். ஒரு நபர் நம்பிக்கையுடன், அவநம்பிக்கையான, கவலையற்றவரா அல்லது வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்கிறாரா என்பதை வெளிப்படுத்த சோதனை கூறுகிறது.…
திங்களன்று ஸ்பேஸ்எக்ஸ் 26 ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் கலிபோர்னியாவிலிருந்து. தி பால்கான் 9 ராக்கெட் சாயங்காலத்திற்குப் பிறகு சிறிது தூக்கி எறியப்பட்டது வாண்டன்பெர்க் விண்வெளி படை அடிப்படை.வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்தில் விண்வெளி வெளியீட்டு வளாகத்திலிருந்து பி.டி.டி (11:36 PM EDT / 0336 GMT ஜூன் 17) இலிருந்து இந்த பணி நீக்கப்பட்டது. இந்த ஏவுதல் அதன் மூன்றாவது விமானத்தை உருவாக்கும் ஒப்பீட்டளவில் புதிய பால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தியது.ஸ்பேஸ்எக்ஸின் இணையதளத்தில் குழு 15-9 என நியமிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், லிஃப்டாஃப் எட்டரை நிமிடங்களுக்குப் பிறகு குறைந்த பூமி சுற்றுப்பாதையை அடைந்தன. மிஷனுக்கு ஒரு மணிநேரம், மேல் கட்டத்தின் இரண்டாவது எரித்ததைத் தொடர்ந்து, ஸ்பேஸ்எக்ஸ் அதிகாலை 1:35 மணிக்கு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது, அனைத்து செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.இதற்கிடையில், ராக்கெட்டின் முதல் கட்டம் – சீரியல் எண் B1093 – பசிபிக் பெருங்கடலில் “நிச்சயமாக நான் இன்னும் நேசிக்கிறேன்”…
புதுடெல்லி: இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ளள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு இது 180 ஆக அதிகரிக்கும். மேலும் மேம்பட்ட அணுசக்தி விநியோக அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் புது வகையான அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடர்ந்து இந்தியா உருவாக்கி உள்ளது. இதன்மூலம் அணு ஆயுத திறனில் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவிடம் 600 ஆயுதங்கள் உள்ளன. சீனா 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 100 அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அணு ஆயுத திறன் கொண்ட இந்தியா,…
நேபாளம், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிளாஸ்கோவில் நேற்று நடைபெற்ற தொடரின் 2வது ஆட்டம் வரலாறு காணாத 3 சூப்பர் ஓவர் வரை சென்று கடைசியில் நெதர்லாந்து அணி போராடி வெற்றியை ஈட்டியது. சமீப காலங்களாக நேபாள அணி பிரமாதமாக ஆடி வருகிறது. ஸ்காட்லாந்து அணிக்கு கடும் கடினப்பாடுகளைக் கொடுத்து சமீபத்தில் வென்றதும் நினைவிருக்கலாம். நேற்றைய போட்டியும் டி20 அரங்கில் நேபாளத்தின் எழுச்சிக்கு ஓர் உதாரணம். முழு நேர ஆட்டத்தில் நெதர்லாந்து முதலில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இலக்கை விரட்டிய நேபாள அணி 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுக்க போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்குச் சென்றது. இதுவே 3 சூப்பர் ஓவர்களாகி பிறகு நெதர்லாந்து போராடி வென்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் சரி லிஸ்ட் ஏ போட்டியிலும் சரி இதுவரை எந்தப் போட்டியும்…
சென்னை: காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்துக் காவலர்களும் பயனடையும் வகையில், பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அதற்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக காவல்துறையின் இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேருபவர்களுக்கு பத்தாண்டுகளில் முதல் நிலைக் காவலராகவும், அடுத்த ஐந்தாண்டுகளில் தலைமைக் காவலராகவும், அடுத்த பத்தாண்டுகளில் சிறப்பு சார் ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. காவலர்களாக பணியில் சேர்பவர்கள் சார் ஆய்வாளர்களாகக் கூட பதவி உயர்வு…
AMLA இன் ஆக்ஸிஜனேற்றங்களுடன் இணைந்து இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கலவையானது இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது, இது அவர்களின் இரத்த சர்க்கரையை கண்காணிப்பவர்களுக்கு நன்மை பயக்கும். ஆய்வின் படி, AMLA கூடுதல் உண்ணாவிரத இரத்த குளுக்கோஸில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் காட்டுகிறது மற்றும் ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப் 2 நீரிழிவு உள்ளிட்ட ஹைபர்கொலெஸ்டிரோலெமிக் நபர்களில் மேம்பட்ட இன்சுலின் உணர்திறன், வளர்சிதை மாற்ற நோய்க்குறியைத் தடுப்பதிலும் நிர்வகிப்பதிலும் அதன் பங்கைக் குறிக்கிறது.எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்மறுப்பு: இந்த கட்டுரை பொது களத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் சுகாதார பயிற்சியாளர் அல்லது சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.
போபால்: ராஜா ரகுவன்சியை கொலை செய்ய குவாஹாட்டியில் இருந்து ஆயுதம் வாங்கியது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ரகுவன்சியும் அவரது மனைவி சோனமும் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து ரகுவன்சியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் சோனம் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக விஷால் சவுகான் என்பவர் அரிவாளால் ரகுவன்சியை வெட்டிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அந்த அரிவாள் அசாம் மாநிலம் குவாஹாட்டி ரயில் நிலையம் அருகே வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
