சென்னை: நூறாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் காந்திய போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவரும், காந்திய போராளியுமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நேற்று 100-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதை யொட்டி அவருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கமல் ஹாசன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: காந்தியம் என்னும் கருத்தாக்கத்துக்கு உருவமாய் இன்று நம் கண்முன் நிற்கும் பெருந்தகையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். சட்டரீதியான போராட்டங்களால், செயல்பாடுகளால் லட்சக்கணக்கான எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பெற்றுத் தந்த காந்தியர். வாழ்வு, சேவை என்பவை இருவேறு விஷயங்கள் என்றில்லாமல், வாழ்வே சேவை என்று வாழும் அம்மையார் கிருஷ்ணம்மாளின் வயதில் ஜூன் 16 (நேற்று) நூறாவது ஆண்டு தொடங்குகிறது. அவரை வணங்கி வாழ்த்துவது என் கடமை. ‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ என்னும்…
Author: admin
தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர். அதன்படி நடப்பு கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் வரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ம்தேதி திறக்கப்பட்டன. தொடர்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில்…
திருத்தணி: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரம் தொடர்பாக கடந்த 6-ம் தேதி 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நேரில் ஆஜரான பூவை ஜெகன் மூர்த்தியை, கூட்டத்தை கூட்டாமல் தனியாக சென்று போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 10 மணியளவில் தன் வழக்கறிஞர்களுடன் பூவை ஜெகன் மூர்த்தி…
ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க நமது உடலின் மிக முக்கியமான இரண்டு உறுப்புகள் ஒன்றாக நன்றாக வேலை செய்ய வேண்டும். சிறுநீரகம் மற்றும் இதயம். நம்மில் பெரும்பாலோர் இதயத்தையும் சிறுநீரகங்களையும் தனித்தனி நிறுவனங்களாக கருதுகிறோம்; இருப்பினும், சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி இந்த இரண்டு முக்கிய உறுப்புகளும் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் அவற்றின் பராமரிப்பு ஒருவருக்கொருவர் சார்ந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. (ஆதாரம்: தேசிய சிறுநீரக அறக்கட்டளை)ஒரு உறுப்பு தோல்வியடையத் தொடங்கினால், மற்றொன்று பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், தற்போதைய அனைத்து உடல்நலக் கவலைகளிலும், குறிப்பாக இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களின் திடீர் எழுச்சி உலகளவில் உயர்ந்து வரும் அனைத்து சுகாதார கவலைகளிலும் இதய-குழந்தை இணைப்பு முன்னணியில் உள்ளது. சில படிகள் பின்வாங்கி, நமது சிறுநீரகத்தையும் இதய ஆரோக்கியத்தையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது கட்டாயமாகும்.இரு வழி உறவுஇதயமும் சிறுநீரகங்களும் இரத்த சர்க்கரை அளவு, திரவ சமநிலை மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு…
டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ராணுவத் தளபதி முகமது பகேரி, ஐஆர்ஜிசி படை தளபதி உசைன் சலாமி, ஈரான் போர் கட்டளை தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஈரானின் புதிய தளபதியாக அலி ஷத்மானி நியமிக்கப்பட்டார். இவர் ஐஆர்ஜிசி படை, போர் கட்டளை தலைமையக தளபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் நள்ளிர வில் டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்தை குறிவைத்து தாக்கின. இதில் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். இஸ்ரேல்-ஈரான் போர் நேற்று 5-வது நாளாக நீடித்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ…
சென்னை: சிறுவன் கடத்தல் விவகாரத்தில் கைதான ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டார். அவரை திருவாலங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5.45 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. பின்னர் ஜெயராம் வீட்டுக்குத் திரும்பினார். இதேபோல, உயர் நீதிமன்றஉத்தரவின் பேரில் நேற்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரானா பூவை ஜெகன்மூர்த்தியிடமும் போலீஸார் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொழிலதிபர் வனராஜா (55), முன்னாள் காவலர் மகேஸ்வரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் எஸ்.பி.யாக ஜெயராம் பணியாற்றிய போது, திருச் செங்கோடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த மகேஸ்வரியுடன் ஏற்பட்ட நட்பு தொடர்ந்துள்ளது. தேனி…
துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ‘‘கமல்ஹாசன் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை திரையிட முடியாது”என்று கூறி, மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். இதற்கு எதிராக சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் உஜ்ஜால் புயன், மன்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தடை, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள பேச்சு, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல். கன்னடஅமைப்பினரின் மிரட்டலுக்கு கர்நாடக…
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தபு, துனியா விஜய் குமார் ஏற்கெனவே ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது இதன் நாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் சேதுபதி – சம்யுக்தா மேனன் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஜூலையில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பூரி ஜெகந்நாத் மற்றும் சார்மி கவூர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘லைகர்’ மற்றும் ‘டவுள் ஐஸ்மார்ட்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் இப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறார் பூரி ஜெகந்நாத்.
திருநெல்வேலி: கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில், 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குழி கிராமத்தில் 2007 நவம்பர் மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, அப்பகுதியை சேர்ந்த ஜேசு அருளப்பன் மகன் ரீகன்(22), கணேசன் ஆகிய இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. ஒன்றரை மாதத்துக்குப்பின் விஜயாபதியில் உள்ள ஓட்டலில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2008 ஜனவரி 22-ம் தேதி விஜயாபதி அருகே ரீகனை வழிமறித்த ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இச்சம்பவம் நெல்லையில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. 19 பேர் கைது: இது தொடர்பாக கூத்தங்குழி சிலுவை அந்தோனி…
அவர்களின் அரச வாழ்க்கையை விட்டு வெளியேறிய பிறகு, ஹாரியும் மேகனும் 2021 ஆம் ஆண்டில் ஓப்ரா வின்ஃப்ரேயுக்கு ஒரு குண்டுவெடிப்பு நேர்காணலை வழங்கினர், இது அரச குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேர்காணலில், மேகனும் ஹாரியும் ராயல் குடும்பத்தினர் இனவெறி உட்பட பல விஷயங்களை குற்றம் சாட்டினர், இருப்பினும் அவர்கள் பெயர்களை எடுக்கவில்லை. பிரிட்டிஷ் முடியாட்சிக்கு எதிராக ஹாரி மற்றும் மேகன் பகிரங்கமாக பேசியது இதுவே முதல் முறையாகும் என்பதால், நேர்காணல் உலகிற்கும் அதிர்ச்சியாக இருந்தது. நேர்காணலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனை இரண்டாம் எலிசபெத் மகாராணி சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. ராணி மேலும் கூறியிருந்தார், “சில நினைவுகள் மாறுபடலாம்”, இது அவர்களின் யதார்த்தத்தின் பதிப்பில் அவர் கருத்து வேறுபாடு காட்டுவதில் ஒரு நுட்பமான குறிப்பாகும்.
