Author: admin

வேலூர்: மாணவர்​கள் நடத்​திய இந்தி எதிர்ப்பு போராட்​டத்​துக்கு திமுக ஸ்டிக்​கர் ஒட்​டிக்​கொண்​டது என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். வேலூரில் நேற்று நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் பங்​கேற்ற கட்​சித் தலை​வர் அன்​புமணி பேசி​ய​தாவது: பல்​வேறு துறை​களி​லும் தமிழகம் பின்​னோக்கி சென்று கொண்​டிருக்​கிறது. மக்​கள் விரோத திமுகவை அகற்ற வேண்​டும். அடித்​தட்​டு, பின்​தங்​கிய மக்​களை மேம்​படுத்த எந்த திட்​ட​மும் செயல்​படுத்​தப்​பட​வில்​லை. மேலும், சமூக நீதியை நடை​முறைபடுத்​த​வும் திமுக தவறி​விட்​டது. கிராமங்​களில் பாமக உறுப்​பினர் சேர்க்​கையை தீவிரப்​படுத்த வேண்​டும். ஜூலை 25-ல் ராம​தாஸ் பிறந்த நாளில் தமிழக மக்​களின் உரிமை​களை மீட்​டெடுக்க நடைபயணம் மேற்​கொள்ள உள்​ளேன். தமிழகத்​தில் ரூ.10 லட்​சம் கோடிக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக கூறுகிறார்கள். ஆனால், எவ்​வளவு முதலீடு வந்​துள்​ளது என்று கேட்​டால், அதற்கு பதில் அளிப்​ப​தில்​லை. தமிழகத்​தில் மாணவர்​கள் நடத்​திய இந்தி எதிர்ப்​புப் போராட்​டத்​துக்​கு, திமுக ஸ்டிக்​கர் ஒட்​டிக் கொண்​டது. சித்​திரை முழு நிலவு மாநாட்​டைப் பார்த்து திமுக…

Read More

சென்னை: இந்​தி​யா​வில் தயாரிப்​பு​களை மேற்​கொள்​ளக்​கூ​டாது என அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. ஆப்​பிள் நிறு​வனத்​தின் ஒப்​பந்த தயாரிப்​பாளர்​கள் இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்து ஏற்​றுமதி செய்த ஐபோன்​களின் எண்​ணிக்கை 2.04 கோடியை கடந்​துள்​ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையி​லான 5 மாத நில​வரம் மட்​டுமே. கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்​துடன் ஒப்​பிடும்​போது இந்த ஐந்து மாதத்​தில் ஐபோன் ஏற்​றுமதி என்​பது 57% அதி​கம் என சர்​வ​தேச ஆராய்ச்சி நிறு​வன​மான கேனலிஸ் (ஓம்​டி​யா) புள்​ளி​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 2025 ஜனவரி-மே வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்த ஐபோன் ஏற்​றும​தி​யில் 77% அமெரிக்கா​வுக்கு மட்​டுமே சென்​றுள்​ளது. கடந்த 2024 முதல் ஐந்து மாதங்​களில் 54% ஐபோன்​கள் ஏற்​றுமதி செய்​யப்​பட்ட நிலை​யில் தற்​போது அதை​விட கூடு​தலாக 23% ஐபோன்​கள் அமெரிக்கா​வுக்கு ஏற்​றும​தி​யாகி​யுள்​ளன. குறிப்​பாக, கடந்த மே மாதத்​தில் ஒட்​டுமொத்த ஏற்​றும​தி​யில்…

Read More

சென்னை: பகுதிநேர பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமா படித்து விட்டு பணியில் இருப்பவர்கள் அதில் இருந்து கொண்டே பகுதி நேரமாக பிஇ படிப்பை படிக்கலாம். படிப்புக் காலம் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) பகுதி நேர பிஇ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று ( 16-ம் தேதி) தொடங்கியது. பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள் என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி ஜூலை 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி நடத்தப்படும். கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்தவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 31-ம் தேதி வழங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Read More

லீட்ஸ்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்​காக முன்​னாள் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான தினேஷ் கார்த்​திக்​குடன் கலந்​துரை​யாடி​னார். அப்​போது ஜஸ்​பிரீத் பும்ரா கூறிய​தாவது: டெஸ்ட் கேப்​ட​னாக நான் தேர்வு செய்​யப்​ப​டாத​தில் எந்த ஆடம்​பர​மான கதைகளும் இல்​லை. நான் நீக்​கப்​பட்​ட​தாக எந்த சர்ச்​சையோ அல்​லது தலைப்​புச் செய்​தியோ இல்​லை. ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறு​வதற்கு முன்​னர் ஐபிஎல் தொடரின் போது, இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எனது பணிச்​சுமை குறித்து பிசிசிஐ​யிடம் பேசினேன். அறுவை சிகிச்சை நிபுணர், பணிச்சுமை​களை நிர்வகிப்பதில் எந்த அளவுக்கு புத்​தி​சாலித்​தன​மாக இருக்க வேண்​டும் என்​ப​தைப் பற்றி…

Read More

வாஷிங்​டன்: அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு, இம்ரான் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனிருக்கு சமீபத்தில் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தோல்வியை மறைப்பதற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 5 நாள் அரசு முறைப் பயணமாக அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க ராணுவத்தின் 250-வது விழா கொண்டாட்டத்துக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை வெள்ளை மாளிகை மறுத்தது. ராணுவ உறவுகள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாக். ராணுவ தளபதி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் வாஷிங்டனில் பாக். ராணுவ தளபதி அசிம் முனிர் தங்கியிருந்த ஓட்டலை, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.…

Read More

Last Updated : 18 Jun, 2025 06:42 AM Published : 18 Jun 2025 06:42 AM Last Updated : 18 Jun 2025 06:42 AM விமல் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இரட்டை இயக்குநர்களான எல்சன் எல்தோஸ், மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர். கிராமப்புற பின்னணியில், காமெடி என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் காரைக்குடியில் தொடங்கியது. மலையாளத்தில் சில படங்களை தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் விநாயகா அஜித் இதை தயாரிக்கிறார். நாயகியாக முல்லை அரசி நடிக்கிறார். மற்றும் சேத்தன், சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இதன் கதையை எழுதியுள்ளனர். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே…

Read More

தென்காசி: சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள கீழபாட்டாகுறிச்சியில் அன்னை முதியோர் இல்லம் என்ற இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்தார். இங்கு 60 பேர் தங்கியிருந்தனர். கடந்த வாரம் இந்த முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட முதியோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டை சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டி முருகம்மாள் (45), மதுரை தனலட்சுமி (70) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து, முதியோர் இல்லத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இல்ல நிர்வாகி ராஜேந்திரனை சாம்பவர்வடகரை போலீஸார் கைது செய்தனர். முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். பாதிப்பு அதிகமுள்ள 12 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நெல்லை…

Read More

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அபராஜித் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். சுனில் கிருஷ்ணான 32, விஜய் சங்கர் 26, ஸ்வப்னில் சிங் 20 ரன்கள் சேர்த்தனர். திண்டுக்கல் அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 181 ரன்கள் இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 43 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67…

Read More

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளி​யான படம், ‘காந்​தா​ரா’. இந்​தப் படம் இந்​திய அளவில் பெரும் வரவேற்​பைப் பெற்​றது. இதையடுத்து இந்​தப் படத்​துக்கு முந்​தைய கதை​யாக ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ என்ற படம் இப்​போது உரு​வாகி வரு​கிறது. இதன் படப்​பிடிப்பு கடந்த சில நாட்​களுக்கு முன் ஷிவ​மோகா மாவட்​டத்​தின் மாணி நீர்த்​தேக்​கத்​தில் நடந்​தது. ரிஷப் ஷெட்​டி​யுடன் 30 பேர் கொண்ட குழு படப்​பிடிப்​புக்​காகச் சென்​ற​போது, படகு கவிழ்ந்​தது என்​றும் ஆழமற்ற பகு​தி​யில் கவிழ்ந்​த​தால் அதிர்​ஷ்ட​வச​மாக அனை​வரும் உயிர் தப்​பிய​தாக​வும் கேமரா உள்​ளிட்ட உபகரணங்​கள் நீரில் மூழ்கி சேதமடைந்​த​தாக​வும் செய்​தி​கள் வெளி​யானது. இதனால் படப்​பிடிப்பு நிறுத்​தப்​பட்​ட​தாக​வும் கூறப்​பட்​டது. ஆனால், படக்​குழு​வினர் இதை மறுத்​துள்​ளனர். இதுபற்றி இந்​தப் படத்​தின் நிர்​வாக தயாரிப்​பாளர் ஆதர்ஷ் ஜா கூறும்​போது, ‘‘ஒரு காட்​சி​யின் பின்​னணி​யில் ஒரு படகு இருக்க வேண்​டும் என்​ப​தற்​காகப் படமாக்​கினோம். பலத்த காற்று மற்​றும் மழை காரண​மாக, படகு கவிழ்ந்​தது. அதில்…

Read More

அரியலூர்: காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் சென்னையில் இன்னும் சில தினங்களில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூர் அண்ணாசிலை அருகே விரிவாக்கப்பட்ட மினி பேருந்து சேவையை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் 2 புதிய வழித்தடத்திலும், 29 நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலும் 31 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், சென்னை மாநகரில் இன்னும் 10 நாட்களில் பேட்டரி பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளது. காலநிலை மாறிவரும் காரணத்தால் பொதுமக்களுக்கான பேருந்து சேவையில் தடை ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில், சென்னையிலும் விரைவில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், வட்டார ப்போக்குவரத்து…

Read More