தென்காசி மக்களவை தொகுதியில் 2019-ல் தனது விசுவாசியான தனுஷ் எம்.குமாரை நிறுத்தி எம்பி-யாக்கினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி. தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அண்ணாச்சி, அங்கே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உண்டாக்குவதற்காக தனுஷ் எம்.குமாரை அடுத்த கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தினார். ஆனால், உட்கட்சிக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி பலிக்காமல் போனது. இதையடுத்து தனுஷ் எம்.குமாருக்கு 2024-ல் மீண்டும் எம்பி சீட்டும் கிடைக்காமல் போனது. இருப்பினும் மனம் தளராத மனிதர், அடுத்ததாக அண்ணாச்சியின் அரவணைப்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட இப்போது சத்தமில்லாமல் காய்நகர்த்தி வருகிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட திமுக-வினர் சிலர், “தனுஷ் எம்.குமாரின் தந்தையான தனுஷ்கோடி எம்ஜிஆர் காலத்தில் ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தவர். அப்போதிருந்தே கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சிக்கு நெருக்கமாக இருந்த தனுஷ்கோடி, அண்ணாச்சி திமுக-வுக்கு புலம்பெயர்ந்த பிறகு தானும் திமுக-வுக்கு வந்தவர். விருதுநகர் மாவட்ட…
Author: admin
காலையில் காபி குடிப்பது உங்களுக்கு காலை ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், நீண்ட ஆயுளை அதிகரிக்கும். காபி நுகர்வு இறப்புக்கான குறைந்த அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதில் நன்மைகள் உள்ளன. கிரீம் போன்ற அதிகப்படியான சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்பைச் சேர்ப்பது அதன் நேர்மறையான விளைவுகளை ஈடுசெய்யக்கூடும், மேலும் அதன் சாத்தியமான நன்மைகளை அறுவடை செய்ய கவனமுள்ள காபி நுகர்வு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஒரு நாளைக்கு 3 கப் காபி குடிப்பது கூடுதல் நன்மைகளைத் தராது, மேலும் இதயம் தொடர்பான இறப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு விளைவு பீடபூமிக்கு தெரிகிறது.ஆய்வின் நோக்கம் காபி உட்கொள்ளலுக்கும், சேர்க்கைகளின் அளவு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அமெரிக்க பெரியவர்களிடையே இறப்பு உள்ளிட்ட உறவை ஆராய்வது.கருப்பு காபியில் சேர்க்கைகளின் தாக்கத்தை ஆய்வு எடுத்துக்காட்டுகிறதுஎர்த்.காம் படி, ஜெரால்ட் ஜே. மற்றும் டோரதி ஆர். காபி கருப்பு அல்லது குறைந்த சர்க்கரை…
திருப்பதி: ஆந்திராவில் மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு கிலோ மாங்காய் குறைந்தபட்சம் ரூ.12க்கு விவசாயிடமிருந்து பெற வேண்டுமெனவும், இதில் ரூ. 4 அரசு மானியம் வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். இதனை மாம்பழ விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், நேற்று திருப்பதியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருப்பதி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு மொத்தம் 14,582 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5.5 லட்சம் மெட்ரிக் டன் அளவு மாம்பழம் விளைச்சலாகி உள்ளது. திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 8 மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. கிலோவுக்கு ரூ.12.. குறைந்த பட்சமாக கிலோவுக்கு ரூ.12 வரை விவசாயிகளிடம் இருந்து மாங்காய் வாங்கப்படுகிறது. இதில் ரூ.4 அரசு மானியமாக வழங்கப்படுகிறது” என்றார். அப்போது, தமிழக விவசாயிகள் கொண்டு வந்த மாங்காய்கள் ஆந்திர எல்லைக்குள் அனுமதிக்கப்பட வில்லை.…
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி 45 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. அனாமுல் ஹக் 0, ஷத்மான் இஸ்லாம் 14, மொமினுல் ஹக் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முஸ்பிகுர் ரகிமுடன் இணைந்து கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். அபாரமாக விளையடிய நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 202 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 6-வது தனது சதத்தை விளாசினார். முஸ்பிகுர் ரகிம் 176 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இது அவரது 12-வது சதமாக அமைந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹொசைன் ஷான்டோ…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து, 2012-ம் ஆண்டு வெளியான படம், ‘தடையறத் தாக்க’. இதில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத்சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிய இளைஞன், ஒரு உதவி செய்வதன் மூலம் ரவுடி கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அவர்களிடம் இருந்து தப்பித்தானா? என்பதுதான் இதன் கதை. வரவேற்பைப் பெற்ற இந்த த்ரில்லர் படம், இப்போது நவீன தொழில்நுட்பத்தில், டிஜிட்டல் பதிப்பாக ரீ ரிலீஸ் ஆகிறது. அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஜூன் 27-ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.
ராமேசுவரம்: ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து நேற்று ஆலயப் பிரவேசப் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசன வழியில் கட்டணமின்றி சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பொறுப்பேற்ற இணை ஆணையர், உள்ளூர் மக்கள் ரூ.200 கட்டண சிறப்பு தரிசன வழியில் வருவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார். இதனால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரியும், ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலப் பேரவை சார்பில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் தீர்வுகாணப்படவில்லை. இந்நிலையில், ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து ராமேசுவரத்தில் நேற்று ஆலயப் பிரவேசப் போராட்டம் நடைபெற்றது. மக்கள்…
எங்கள் மூளை தொடர்ந்து தன்னைத் தானே அவிழ்த்து விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா, அது முக்கியமற்றதாகக் கருதும் விஷயங்களை மறக்க முயற்சிக்கிறது? இருப்பினும், அது கடந்த பல வருடங்கள் கூட நினைவில் வைக்க விரும்பும் விஷயங்கள் நிறைய உள்ளன. அது மட்டுமல்லாமல், சில சமயங்களில் வேலைக்கு ஒரு ஜம்பரை எடுத்துச் செல்வது, கார் விசை எங்கே என்பதை மறந்துவிடுவது அல்லது உங்கள் தொலைபேசியை வீட்டிலேயே விட்டுவிடுவது போன்ற அடிப்படை விஷயங்களுடன் கூட நாங்கள் போராடுகிறோம்! இருப்பினும், உண்மையில், உங்கள் மூளை எதிர்பார்த்ததை விட சிறப்பாக நினைவில் வைக்க உதவும் ஒரு தந்திரம் உள்ளது. வணிக காந்தம் எலோன் மஸ்க்கின் கூற்றுப்படி, எதையாவது நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள, நீங்கள் அதற்கு அர்த்தம் கொடுக்க வேண்டும் அல்லது அசாதாரண அல்லது அபத்தமான நினைவகத்துடன் இணைக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம் …நம் மூளை ஏன் மறந்து விடுகிறதுஎல்லாவற்றையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள…
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நெதர்லாந்து – நேபாளம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நெதர்லாந்து 7 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. தேஜா நிடமன்னாரு 35, விக்ரம்ஜித் சிங் 30, சகிப் ஜூல்ஃபிகர் 25 ரன்கள் சேர்த்தனர். 153 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் சேர்க்க ஆட்டம் ’டை‘ ஆனது. கடைசி ஓவரில் நேபாளம் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 5 பந்துகளில் 11 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் டெய்லண்டரான நந்தன் யாதவ் பவுண்டரி அடிக்க ஸ்கோர் சமநிலையை அடைந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் நெதர்லாந்து 19 ரன்கள் விளாசியது. 20 ரன் இலக்குடன் விளையாடிய நேபாளம்…
அல்பாட்டா: கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்றார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். கனடாவின் அல்பாட்டா நகரிலுள்ள கால்கரி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கனடா நாட்டின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். கனடாவிலுள்ள பத்திரிகையாளர் ஹலீமா சாடியா கூறும்போது, “கனடாவில் 15 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். கடந்த 2 வருடங்களாக இந்தியா, கனடா உறவு மோசமாக இருப்பது இந்திய வம்சாவளியினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது” என்றார். கனடாவிலுள்ள இந்து…
இயக்குநரும் படத்தொகுப்பாளருமான பி.ஆர்.விஜய், விதா ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர். விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரேம் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாஜகான் இசை அமைக்கிறார். படத்தை ஜே.எஸ்.ஜுபேர் எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதை. இரவு 7மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும். பிக்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதையையும் அமைத்துள்ளேன். பிக்பாக்கெட் திருடர்களுக்குப் பின் பெரிய மாஃபியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை வித்தியாசமாக சொல்கிறோம்” என்றார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் பூஜையுடன் தொடங்கியது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
