Author: admin

காலை அலாரங்கள் ஆயுட்காலம் எனக் காணப்படுகின்றன, எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளி, வேலை அல்லது பயண அட்டவணைகள் தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால் நரம்பியல் நிபுணர்கள் இப்போது பாதிப்பில்லாத இந்த வழக்கம் மூளையையும் இதயத்தையும் கூட வலியுறுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், அலாரம் கடிகாரத்துடன் எழுந்திருப்பது மன அழுத்த ஹார்மோன்கள், இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றில் திடீர் கூர்முனைகளுடன் இணைக்கப்படலாம் என்று சமீபத்தில் விளக்கினார்.உடலின் இயற்கையான விழித்தெழு கடிகாரம்மனித உடல்கள் ஒரு உள் கடிகாரத்துடன் கம்பி செய்யப்படுகின்றன, இது சர்க்காடியன் ரிதம் என அழைக்கப்படுகிறது, இது தூக்கம் மற்றும் விழித்தெழு சுழற்சிகளை வழிநடத்துகிறது. தூக்கம் முடிந்ததும், மூளை இயற்கையாகவே உடலை எழுப்ப சமிக்ஞை செய்கிறது, பொதுவாக தூக்கத்தின் இலகுவான கட்டங்களில். இந்த மென்மையான உயர்வுதான் இதயத்தை சீராகவும், மனம் எச்சரிக்கையாகவும் வைத்திருக்கிறது. ஆனால் ஒரு அலாரம் கடிகாரம் இந்த…

Read More

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை – வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசிஐ-யின் தலைமை அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளதை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார். ‘மிதுன் எனது முன்னிலையில் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்’ என்றார். தற்போது பிசிசிஐ-யின் இடைக்கால தலைவர்க ராஜீவ் ஷுக்லா செயல்பட்டு வருகிறார். பிசிசிஐ தலை​வ​ராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்​டியதை தொடர்ந்து அண்மையில் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி 70 வயதை கடந்​தவர்​கள் பதவி​யில் தொடர முடி​யாது என்​ப​தால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்​கொண்​டிருந்​தார். வரும் 28-ம் தேதி மும்​பை​யில் பிசிசிஐ ஆண்டு பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. இதில் புதிய தலை​வர் தேர்வு…

Read More

புதுடெல்லி: அமெரிக்க நாட்டின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது அதிபர் டொனல்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம். இந்நிலையில், இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் யாருக்கு பொருந்தும், இதில் யாருக்கு விலக்கு என்பது குறித்து பார்ப்போம். எச்1பி விசாவுக்கான புதிய கட்டண விவரம் குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது எச்1பி விசா கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்கள் ஒரு முறை மட்டுமே உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும், இந்த புதிய கட்டண முறை ஏற்கெனவே தங்கள் வசம் எச்1பி விசா உள்ளவர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த விளக்கம் தற்போது எச்1பி விசா வைத்துள்ளவர்களின் தவிப்பை தணிய செய்துள்ளது. அரசு கொடுத்துள்ள விளக்கம் என்ன? – எச்1பி விசா கட்டணம் சார்ந்த அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பு புதிதாக அந்த விசா வேண்டி வினைப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.…

Read More

ராமேசுவரம்: மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மகாளயம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இந்த அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைப்பர். முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளை நிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மகாளய அமாவாசைக்காக சனிக்கிழமை இரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் ராமேசுவரம் வரத் தொடங்கினர். அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அக்னி தீர்த்தக்…

Read More

‘வேட்டுவம்’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முதன்முறையாக இப்படம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் பா.ரஞ்சித். அதில் ‘வேட்டுவம்’ படம் குறித்து பா.இரஞ்சித், “வேட்டுவம் கதையினை ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்க வேண்டும் என்று தான் எழுதினேன். இதில் என்ன சொல்லப் போகிறோம் என்று யோசித்தேன். நாம் ஏன் இக்கதையினை பண்ண வேண்டும் என்று சில கேள்விகள் எழுந்தது. அக்கதையில் அதிகார பகிர்வு தான் முக்கியமாக இருந்தது. ஆகையால் அந்தக் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வேறொரு உலகத்தில் அதனை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். அந்த உலகம் பார்கையாளர்களுக்கு புதிதாக இருக்கும். ஒரு சயின்ஸ் பிக்சன் கலந்த எதிர்காலம் சார்ந்த கதையாக இருக்கும். பார்வையாளர்கள் கொண்டாடக்கூடிய…

Read More

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இறந்த அஜித் குமாரின் தாயார் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசே உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணையை முடித்து ஆக.20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி ஆக.20-ல் ஆன்லைன் வழியாக குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தனிப்படை வேன் ஓட்டுனர் 6-வது குற்றவாளியாக…

Read More

சென்னை: சென்னை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 4,000 மது பாட்டில்கள் உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன. சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, சென்னை மாநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் அவ்வப்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு, கள ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களையும், மதுபாட்டில்களையும் அழிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அதனடிப்படையில், சென்னையில் சேகரிக்கப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில்…

Read More

செப்டம்பர் 21, 2025 அன்று பகுதி சூரிய கிரகணம் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே தெரியும், குறிப்பாக நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவில், ஆனால் இந்தியாவில் இல்லை. சூரிய கிரகணத்தைச் சுற்றியுள்ள ஜோதிடம், கட்டுக்கதைகள் மற்றும் சடங்குகள் உலகளவில் விசுவாசிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைகின்றன. செப்டம்பர் 2025 இல் சந்திர கிரகணத்தின் போது உலகம் ஒரு அதிர்ச்சியூட்டும் இரத்த நிலவைக் கண்ட சில நாட்களுக்குப் பிறகு, உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் சூரிய கிரகணத்தை அனுபவிப்பார்கள்- இந்தியில் சூர்யா கிரஹான் என்றும் அழைக்கப்படுவார்கள்- இன்று (செப்டம்பர் 21, 2025). இந்த சூரிய கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும், மேலும் இது தெற்கு அரைக்கோளத்தில் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் போன்றவற்றில் பல அறிக்கைகளின்படி தெரியும்.பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன?சூரியன், சந்திரன் மற்றும் பூமி எவ்வாறு சீரமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து, கிரகணங்கள் வெவ்வேறு வகைகளாக இருக்கலாம்-…

Read More

ஷுப்மன் கில்லை ஒரு பிராண்ட் ஆக உயர்த்த வேண்டும் என்று ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரோ 2 போட்டிகளிலும் ஒன்றும் தேறவில்லை. இந்நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. ஜெய்ஸ்வாலும் அது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். 23 சர்வதேச டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால் 723 ரன்கள் 164% ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்துள்ளார். ஒரு சதம் 5 அரைசதங்கள் என்று நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ஆனால் தான் ஆசியக் கோப்பை தொடரில் இல்லாதது, தன்னைப் பாதிக்கவில்லை என்று கூறும் ஜெய்ஸ்வால், “முடிவுகள் அணிச்சேர்க்கையைப் பொறுத்து எடுக்கப்படுகின்றன. இவையெல்லாம் தேர்வுக்குழுவினர் கையில் உள்ளது. நான் என்னால் செய்ய முடிவதைச் செய்வேன். என் நேரம் வரும்போது அனைத்தும் சரியான இடத்தில் நிலைபெறும். நான் என் பேட்டிங்கை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். கடினமாக உழைக்க வேண்டியதுதான். மற்றவை தானாக நடக்கும்.” என்கிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.…

Read More

பீஜிங்: சீனாவில் கரோனா தொற்று பரவியுள்ளதை பற்றி முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்துதான் கரோனா தொற்று பரவத் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், 42 வயதான ஜாங் ஜான் என்ற சீன பெண் பத்திரிக்கையாளார் கரோனா ஆரம்பகால பரவல் குறித்து சீனாவின் வூஹான் நகரில் இருந்து நேரடி அறிக்கைகளை வெளியிட்டார். நெரிசலான மருத்துவமனைகள், வெறிச்சோடிய தெருக்கள் அடங்கிய காணொளிகள் உள்ளிட்ட பதிவுகளை வெளியிட்டார். இதையடுத்து, ஜாங் ஜான் மீது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார், மக்களிடையே விவாதத்தைத் தூண்டினார் என்று சீன அரசால் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாங் ஜான் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 2020 -ல் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு சிறையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், 2024 மே மாதம் அவர் சிறையில்…

Read More