Author: admin

சென்னை: புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஐடிஎன்டி மையம் மூலம் தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை உலகின் முதல் 10 புத்தாக்க மையங்களில் ஒன்றாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி ஹப்) கடந்த 2023-ல் உருவாக்கப்பட்டது. இந்த மையம், வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை முன்தொழில் வளர்காப்பகம் (4 வாரகால திட்டம்), தொழில் வளர்காப்பகம் (12 முதல் 18 மாதகால திட்டம்), தொழில் மேம்பாட்டு திட்டங்கள் (16 வாரகால திட்டம்) மூலம் ஊக்குவித்து வருகிறது. பயிற்சி பட்​டறை​கள்: அந்தவகையில், தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வணிக ஆய்வுகளுக்காக முகாம், வணிக கோட்பாடுகள் மற்றும் புத்தாக்க எண்ணங்களை செம்மைப்படுத்துவதற்காக பயிற்சி பட்டறைகள் முன்தொழில் வளர்காப்பகம் (பேகான்) மூலம் நடத்தப்பட்டு, 57 குழுக்கள் பயிற்சியை முடித்துள்ளன. அதேபோல, புத்தொழில்…

Read More

சீரான இரத்த சர்க்கரையை பராமரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது, ஆற்றல், மனநிலை மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இந்த கட்டுரை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற 20 தின்பண்டங்களை ஆராய்கிறது, இதில் வறுத்த கொண்டைக்கடலை, பன்னீர் மற்றும் கொட்டைகள் உட்பட. நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த இந்த விருப்பங்கள், பசி நிர்வகிக்க, குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்தவும், சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு, சரியான சிற்றுண்டி பெரும்பாலும் கவலைக்குரிய விஷயமாக மாறும். எளிதில் கிடைக்கக்கூடிய தின்பண்டங்கள் திடீர் சர்க்கரை ஸ்பைக்கிற்கு வழிவகுக்கும்; எனவே, சரியான சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது, அது உங்களை திருப்திப்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். இந்த தகவல் இதுபோன்ற 20 தின்பண்டங்களை ஆராய்கிறது, மேலும் அவை இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு நிர்வகிக்க உதவுகின்றன என்பதையும் விளக்குகிறது. இரத்த சர்க்கரையை பராமரிப்பதன் முக்கியத்துவம்நிபுணர்களைப் பொறுத்தவரை, உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு சீரான இரத்த சர்க்கரையை…

Read More

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பானாவர்கள் புற்றுநோய், சிறுநீரகம், இதய நோய் உள்ளிட இணை நோயால் பாதிக்கப்பட்டர்கள் ஆவர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 7 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 7 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்து 6,836 ஆக இருந்தது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,920, குஜராத்தில் 1,433, டெல்லியில்…

Read More

சென்னை: பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக பெறுவதற்காக, பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தொலைத்தூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை எளிதாக பெறுவதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் இணை செயலாளரும், தலைமை பாஸ்போர்ட் அதிகாரியுமான கே.ஜெ. ஸ்ரீனிவாசா தொடங்கி வைத்தார். விழாவுக்கு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். இதுகுறித்து, பாஸ்போர்ட் அதிகாரிகள் கூறியதாவது: தற்போதுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் தவிர, கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்களின் வீட்டு வாசலில் பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதே இந்த வேன் சேவையின் நோக்கமாகும். பாஸ்போர்ட் சேவைகளைப் பெற மக்கள் இனி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை. ஆன்​லைனில் பதிவு: இந்த வேன் முதலில்…

Read More

நீங்கள் ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு பங்களாவில் வசிக்கிறீர்களோ, வீட்டிலுள்ள எலிகள் சமாளிப்பது கடினமான சூழ்நிலை. அவர்கள் கம்பிகள் மற்றும் உணவை உண்ணலாம், இது ஒரு அச்சுறுத்தலாக மாறும். இருப்பினும், எலிகள் ஒரு எரிச்சல் மட்டுமல்ல, உடல்நலக் அபாயமும் கூட, ஏனெனில் அவை லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் ஹன்டவைரஸ் போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும், மேலும் உணவை மாசுபடுத்தும். அதனால்தான் குணப்படுத்துவதை விட தடுப்பு எப்போதும் சிறந்தது. எலிகளை வீட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கு எப்போதும் கடுமையான இரசாயனங்கள் அல்லது விலையுயர்ந்த பூச்சி கட்டுப்பாடு சேவைகள் தேவையில்லை. அதற்கு பதிலாக, அவை சில எளிய மற்றும் ஸ்மார்ட் உத்திகள் மற்றும் நிலையான பழக்கவழக்கங்களைக் கையாளலாம். நுழைவு புள்ளிகளை சீல் செய்வதிலிருந்து இயற்கையான விரட்டிகளைப் பயன்படுத்துவது வரை, இந்த எளிய ஆனால் பயனுள்ள உதவிக்குறிப்புகள் உங்கள் வீட்டை எலி-ஆதரிக்க உதவும். இதுபோன்ற சில எளிதான மற்றும் பயனுள்ள உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:1. கொறித்துண்ணிகளுக்கு அனைத்து நுழைவு…

Read More

ஒரு பெரிய கூட்டு முயற்சியில், நாசா மற்றும் இஸ்ரோவைத் தொடங்க உள்ளனர் நிசார் செயற்கைக்கோள்ஒரு billion 1.5 பில்லியன் பூமி-கவனிக்கும் பணி அது நமது கிரகத்தை நாம் கண்காணிக்கும் முறையை மாற்றக்கூடும். இந்த வெளியீடு ஜூன் 18, 2025 அன்று இந்தியாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து திட்டமிடப்பட்டுள்ளது. நிசார், நாசா-இஸ்ரோவுக்கு குறுகியது செயற்கை துளை ரேடார்பூமியின் மேற்பரப்பில் சென்டிமீட்டர்-நிலை துல்லியத்துடன் மாற்றங்களைக் கண்காணிக்கும் the பகல் அல்லது இரவு, சன்னி அல்லது புயல்.செயற்கைக்கோள் ஒரு பெரிய 12 மீட்டர் ரேடார் ஆண்டெனாவைக் கொண்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட மூன்று டன் எடையைக் கொண்டுள்ளது. விவசாய முறைகள், காலநிலை மாற்றங்கள், பூகம்பங்கள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து நிகழ்நேர தரவை வழங்குவதற்காக இது கட்டப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் அவசர குழுக்கள் இந்த பணியின் நுண்ணறிவுகளிலிருந்து பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நிசாரை சமீபத்திய ஆண்டுகளில்…

Read More

பாட்னா: பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜினை பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்தியன் ரயில்வேஸ் தனது வருவாயை அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவுக்கு ரயில் இன்ஜின்களை ஏற்றுமதி செய்ய உள்ளது. பிஹாரின் சரண் மாவட்டம், மர்ஹோராவில் உள்ள டீசல் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரயில் இன்ஜினை பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி அப்போது, பிஹாரின் பாடலிபுத்ரா, உ.பி.யின் கோரக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைப்பார். பொதுத்துறை – தனியார் கூட்டாண்மை நிறுவனமான மர்ஹோரா தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாப்டெக் நிறுவனத்தின் ஓர் அங்கமான ஜி.இ. டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியால் இது நடத்தப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கினியா…

Read More

சென்னை: தமிழகத்தில், வேளாண் மற்றும் உணவு சூழல் அமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுடன், சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதொடர்பாக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசுடன், சென்னை ஐஐடி கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் நிலையான கிராமப்புற மேம்பாடு, வேளாண் வணிக கண்டுபிடிப்பு உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உயர் அமைப்பாக செயல்படும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்துடன், சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலர் அதுல் ஆனந்த் முன்னிலையில் அண்மையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது பேசிய அதுல்…

Read More

தெஹ்ரான்: ஈரான் – இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்த பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை” என்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டல்களைத் தொடர்ந்து கமேனி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதே மிரட்டலை ஆங்கிலம், ஃபார்ஸியில் வெளியிட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தற்போது அதனை ஹீப்ரூ மொழியில் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே மூன்று மொழிகளில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது. மேலும், ஃபார்ஸி மொழியில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கையில் வாளேந்திய நபர் கோட்டை வாயிலில் இருப்பதுபோன்ற சித்தரிப்புப் படத்தை இணைத்து, ‘போர் தொடங்கியது’ என்று குறிப்பிட்டுள்ளார். கோட்டையின் மேலே குண்டு மழை பொழிவதுபோலவும் காட்சி உள்ளது. வரலாற்று…

Read More

புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கையை ஏற்காத அனைத்து மாநிலங்களும், மறுபரிசீலனை செய்து, அதை ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா எழுச்சி பெறும் நேரம் உருவாகியுள்ளது. தேசிய நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் செவிசாய்க்காவிட்டால், நமது சவால்கள் சிக்கலாகிவிடும். அந்நிய படையெடுப்பு காரணமாக, நாட்டின் பாரம்பரியம் பாதிக்கப்பட்டது. சனாதனப் பெருமை மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. மொழிகளால் நாம் எவ்வாறு பிரிக்கப்பட முடியும்? இந்தியா போல வேறு எந்த நாடும் மொழிகளுக்குள் செழுமையாக இல்லை. நமது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் 22 மொழிகளில் பேசலாம். ஒற்றுமையாக இருப்பதைத் தவிர, வேறு எதையும் சனாதனம் நமக்கு கற்பிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது, நாட்டின் கல்விப் பயணத்தில் திருப்புமுனையாக கருதப்படுகிறது. இது உலகின் சிறந்த கல்விக் கொள்கைகளில் ஒன்றாகும். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நமது…

Read More