Author: admin

தெஹ்ரான்: “ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, “இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த நேரத்திலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தால், நாங்கள் அமெரிக்காவுக்கு பதிலளிக்கத் தொடங்குவோம். ட்ரம்ப்பின் முற்றிலும் தேவையற்ற மற்றும் விரோதமான கருத்துகள் குறித்து ஈரான் விழிப்புடன் இருக்கிறது. ஒரு கோடு உள்ளது, அதை தாண்டினால், எங்கள் தரப்பில் பதிலளிப்போம். அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டியவுடன், எங்களின் பதில் வரும்” என்று கூறினார். மேலும், “இஸ்ரேல் அல்லது அமெரிக்கா என யாராக இருந்தாலும் நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம். எந்தப் பக்கத்திலிருந்தும்…

Read More

‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமை பெரும் போட்டிக்கு இடையே அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் உரிமைகள் விற்பனை தொடங்கியிருக்கிறது. முதலாவதாக கடும் போட்டிகளுக்கு இடையே வெளிநாட்டு உரிமம் விற்பனையாகி இருக்கிறது. ‘கூலி’ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் சுமார் 75 கோடி ரூபாய் ‘எமி.ஜி’அடிப்படையில் கைப்பற்றி இருக்கிறது. இந்த விலைக்கு எந்தவொரு தமிழ் படத்தின் வெளிநாட்டு உரிமமும் விற்பனையானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த உரிமத்தையும் சிலர் ரூ.81 கோடிக்கு விநியோக அடிப்படையில் கேட்டார்கள். அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்து, ஐங்கரன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. இந்த வியாபாரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விரைவில் இப்படத்தில் இருந்து பாடலொன்றை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

Read More

புதுச்சேரியில் விரைவில் 6,000 விவசாயிகளின் பம்புசெட்டுகளில் இலவச சோலார் பேனல் அமைக்கவுள்ள தாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை மூலம் ‘என் வீடு என் நலம்’ திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள விதை, பூச்சி மருந்து, உரம் உட்பட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மாடித் தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் 3 ஆயிரம் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியது: “புதுச்சேரியில் நகரமயமாக்கதால் செடி, மரங்களை காணமுடியவில்லை. மரம் நட இடம் இல்லை. ஆனால் வீட்டில் கார், மோட்டார் சைக்கிள் நிற்கிறது. இருக்கின்ற இடத்தில் செடிகளை நட, தோட்டம் வைக்க இத்திட்டத்தை தொடங்குகிறோம். மாடித்தோட்டம் வைப்பது ஒரு கலை. தற்போது காய்கறி விளைவிக்க இத்திட்டத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி சாகுபடி செய்யும் சாதனங்களை தருகிறோம். இதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு…

Read More

சசெக்ஸின் டச்சஸ், மேகன் மார்க்லே 2020 ஆம் ஆண்டில் தனது கரை வாழ்க்கையை பின்னால் விட்டு வெளியேறியதிலிருந்து சர்ச்சைகளின் விருப்பமான குழந்தையாகத் தெரிகிறது. இப்போது, ​​ஒரு சுருக்கமான இடைவெளிக்குப் பிறகு, மேகன் இன்ஸ்டாகிராமில் சேர்ந்தது மட்டுமல்லாமல், ஒரு தொழில்முனைவோராக தனது இருப்பை உணர வைக்கிறது. மிக சமீபத்தில், அவரும் இளவரசர் ஹாரியின் மகள் லிலிபெட்டின் பிறந்தநாளும் சந்தர்ப்பத்தில், மேகன் மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் இருந்தபோது தனது நடனமாடும் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். ‘பேபி மம்மா’ நடன வீடியோவில், இளவரசர் ஹாரியும், கர்ப்பிணி மேகனும் ஒரு லேசான தருணத்தைப் பகிர்ந்துகொள்வதையும் முறியடிப்பதையும் காணலாம்.இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள், வீடியோ சமூக ஊடகங்களை புயலால் அழைத்துச் சென்றது. ரசிகர்கள் கருத்துப் பிரிவுகளை வெள்ளத்தில் மூழ்கடித்தனர், மேகனின் கவலையற்ற ஆற்றலைக் கொண்டாடினர் மற்றும் கிளிப்பை அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய, உண்மையான பார்வை என்று புகழ்ந்து பேசினர். பலர் அதை புத்துணர்ச்சியுடன்…

Read More

ரஜினி – ஹெச்.வினோத் இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால் விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது. நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது ரஜினி – ஹெச்.வினோத் இருவரும் இரண்டு முறை சந்தித்து பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருவரும் இணைந்து படம் பண்ண வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்பே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் இந்தக் கூட்டணி இணைய முடியாமல் போனது. தற்போது இணைய வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தினை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள்…

Read More

கிராமப் புறங்களுக்கு அனைத்து நாட்களிலும் மினி பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில் 1997-ம் ஆண்டு மினி பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் தொடங்கிவைத்தார். அதன்படி, 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில், அதிகபட்சமாக வழித்தட தூரத்தை 25 கி.மீ. நீட்டிப்பு செய்து, அதில் பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடங்களில் 65 சதவீத பேருந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3,103 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்துக்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே மினி பேருந்துகள் இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை களைய வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும்…

Read More

மனித கண் மற்றும் மூளையை நீண்ட காலமாக ஏமாற்றிய படங்கள் காட்சி மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன. மிகவும் புலனுணர்வு கண்கள் கூட இந்த மாயைகளால் ஏமாற்றப்படுவதாக அறியப்படுகிறது. இணையத்தில், காட்சி மாயைகள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் காரணமாக பிரபலமடைந்துள்ளன. இந்த புதிர்களைத் தீர்ப்பது வயதானவர்களுக்கு அறிவாற்றல் வீழ்ச்சியைத் தவிர்க்கவும் அவர்களின் அவதானிப்பு திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது.ஒரு நபரின் பார்வைக் கூர்மையை சோதிக்கும் புதிர்கள் காட்சி மாயை புதிர்கள் என அழைக்கப்படுகின்றன. படத்தில் மறைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும், ஏனெனில் அது வெற்றுப் பார்வையில் இருக்கும். இன்றைய காட்சி மாயை பிரச்சினையில் செர்ரிகளிடையே ஒரு தக்காளி திறமையாக மறைக்கப்பட்டுள்ளது. ஒன்பது வினாடிகளில், தக்காளியைக் கண்டுபிடிக்க முடியுமா? இந்த ஆப்டிகல் மாயை சோதனையை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு சிறப்பாகக் கவனிக்க முடியும்!மேலே இடுகையிடப்பட்ட இந்த காட்சி மாயை படத்துடன் உங்கள் உளவுத்துறை மற்றும் அவதானிப்பு…

Read More

மதுரை: “கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்” என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார். மதுரையில் இன்று திமுக மாநில மாணவரணி சார்பில் கீழடி ஆய்வை அங்கீகரிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விரகனூர் சுற்றுச் சாலையில் நடைபெற்றது. இதற்கு மாநில மாணவரணி செயலாளர் ரா.ராஜீவ்காந்தி தலைமை வகித்தார். தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி பங்கேற்று கண்டன உரையாற்றி பேசியது: “பண்பாட்டுத் தலைநகரான மதுரை அருகேயுள்ள கீழடி அகழாய்வில் கிடைத்த 17,914 தொல்பொருட்கள் சங்க காலத் தமிழர்கள் நகர நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளாக கிடைத்துள்ளன. இந்திய நாட்டின் வரலாற்றில் ஹரப்பா சிந்துவெளி நாகரிகம்…

Read More

அனார் அல்லது மாதுளை நீண்ட காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது, ​​நவீன விஞ்ஞானம் ஒரு மாதுளை அல்லது ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஒரு சேவை செய்வது உங்கள் ஆரோக்கியத்தை நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. எப்படி? இந்த ரூபி-சிவப்பு பழங்கள் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் முக்கியமான வைட்டமின்கள் நிறைந்தவை, அவற்றை தவறாமல் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே, உங்கள் அன்றாட உணவுக்கு இந்த ஊட்டச்சத்து நிறைந்த விதைகளில் ஒரு மாதுளை அல்லது ஒரு அரை கப் வைத்திருப்பது பெரிய வெகுமதிகளுடன் எளிதான பழக்கமாகும். தினமும் ஒரு அனார் (மாதுளை) சாப்பிடுவதன் சில நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

மதுரை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற தீர்த்தம் மட்டுமே இப்போது உள்ளது. தீர்த்தங்களின் பெயர்களை குறிப்பிட்டு கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தூண்கள் கோயில் திருப்பணிகளில் மறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவதில்லை. ஹெலிகாப்டரில் மலர் தூவும் சடங்கு மிகப் பழமையானது. இதற்கு கோயில் நிதி செலவிடப்படுவது தவறானது.…

Read More