உலகின் சில பகுதிகளில் வழக்குகளின் சமீபத்திய உயர்வைத் தூண்டக்கூடிய கோவிட் -19 மாறுபாடு ஒரு புதிய புனைப்பெயரைப் பெற்றுள்ளது: “ரேஸர் பிளேட் தொண்டை” கோவிட். ஏனென்றால், மாறுபாடு – nb.1.8.1. அல்லது “நிம்பஸ்” – வலிமிகுந்த புண் தொண்டையை ஏற்படுத்தக்கூடும். இந்த அறிகுறியை ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் பிற இடங்களில் உள்ள மருத்துவர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மற்றொன்று கோவிட்-19 அறிகுறிகள் எந்தவொரு மாறுபாட்டிலும் காய்ச்சல், குளிர், இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை அடங்கும். நிம்பஸ் மாறுபாட்டுடன் அக்கறைக்கு முக்கிய காரணம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஆனால் இங்கே நீங்கள் அதைப் பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த மாதத்தின் பிற்பகுதியில் வழக்குகளின் உயர்வைப் பரப்பும் ‘ரேஸர் பிளேட் தொண்டை’ ஏற்படுத்தும் மாறுபாடு முதன்மையாக கிழக்கு மத்தியதரைக் கடல், தென்கிழக்கு ஆசியா மற்றும்…
Author: admin
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பின் குடும்பத்தின் வணிக குழுமமான ட்ரம்ப் குழுமம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் நுழைந்துள்ளது. ட்ரம்ப் மொபைல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டராக இந்த பிராண்ட் இயங்க உள்ளது. ட்ரம்ப் மொபைல் சார்பில் டி1 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அதிபர் ட்ரம்ப்பின் மகன்கள் டொனல்டு ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் இணைந்து அறிவித்துள்ளனர். கடந்த 2015-ல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் பிரச்சாரத்தை முதல் முறையாக தொடங்கினார். அதில் வெற்றி பெற்று 2016-ல் முதல் முறையாக அதிபர் ஆனார். இப்போது இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் அதிபர் ஆனார். அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. டி1 மொபைல்: சிறப்பு அம்சங்கள் 6.8 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 12ஜிபி ரேம் …
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அற்புதமான மனிதர் என்றும், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறினார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: “இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி என போரை நிறுத்த உதவினர். அவர்கள் இருவரும் செல்வாக்கு மிக்க நபர்கள். இரு நாடுகளும் அணு ஆயுத பலம்…
மதுரை: சுங்கச் சாவடிகளில் கொடி கட்டிய வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. அதே நேரம் கேள்வி கேட்கும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் சாலையில் மரம், செடிகளை நட்டுப் பராமரிப்பதில்லை. மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வரையும், வாகன ஓட்டிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் வரையும் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து சுங்கக்…
மேட்டூர்: எடப்பாடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை மாணவிகள் கழுவியதாக வீடியோ வைரலான நிலையில், அந்த தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள், மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை கழுவுவது போன்ற வீடியோ இன்று (ஜூன் 18) சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த வீடியோவைப் பார்தது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரை ஆலச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து தாரமங்கலம் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி கல்வி…
சீன விஞ்ஞானிகள் விண்வெளி ஆய்வில் ஒரு அற்புதமான சாதனைகளை மேற்கொண்டுள்ளனர், பகலில் பூமி-சந்திரன் இடத்தில் உள்ள செயற்கைக்கோள் ஒளிக்கதிர்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், வலுவான பகல் குறுக்கீட்டை வென்றனர்.யுன்னான் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளரான லி யுகியாங்கின் கூற்றுப்படி, ஆராய்ச்சி குழு வெற்றிகரமாக ஒரு லேசரை ஒளிரச் செய்தது தியாண்டு -1 செயற்கைக்கோள். இந்த சாதனை பூமி-சந்திரன் இடத்தில் வழிசெலுத்தல் மற்றும் நிலைப்படுத்தல் திறன்களை மேம்படுத்துகிறது, இது எதிர்காலத்தை ஆதரிக்கிறது ஆழமான விண்வெளி ஆய்வு திட்டங்கள். தியாண்டு -1 செயற்கைக்கோளுக்கு சீனாவின் நிலத்தடி பகல்நேர லேசர் சமிக்ஞைஏப்ரல் 26-27 தேதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனை, முதல் பகல்நேர பூமிக்கு முதல் நிலவு லேசர்-ரேஞ்சிங் சோதனையை குறித்தது. சின்ஹுவானெட்.காம் படி, சீனாவின் ஆழமான விண்வெளி ஆய்வு ஆய்வகம் பூமியிலிருந்து தியாண்டு -1 செயற்கைக்கோளுக்கு ஒரு துல்லியமான லேசரை வெற்றிகரமாக சுட்டது, ஏறக்குறைய 130,000 கிலோமீட்டர் தொலைவில், சூரிய ஒளி குறுக்கீடு இருந்தபோதிலும் சமிக்ஞை திரும்பியது. யுன்னான்…
இது AI உருவாக்கிய படம் கேரளாவைச் சேர்ந்த இந்திய மலையேறுபவர் ஷேக் ஹசன் கான், வட அமெரிக்காவின் தெனாலி மலையில் தனது குழுவுடன் சிக்கித் தவித்து, செயற்கைக்கோள் தொலைபேசி வழியாக ஒரு SOS செய்தியை அனுப்பியுள்ளார், பயணத்தின் போது சிரமங்களை எதிர்கொண்ட பின்னர் அவசர மீட்பு கோரி.கான், ஒரு SOS செய்தியை அனுப்பினார், அவரும் அவரது குழுவும் வட அமெரிக்காவின் மிக உயர்ந்த உச்சமான தெனாலி மலையின் முகாம் 5 இல் 17,000 அடி உயரத்தில் கடுமையான புயலில் சிக்கியுள்ளனர்.”ஹாய் இது ஷேக். நான் வட அமெரிக்காவின் மிக உயர்ந்த உச்சமான தெனாலி மலைக்கு ஒரு பயணத்தில் இருக்கிறேன். முகாம் 5 இல் 17,000 அடி உயரத்தில் நாங்கள் கடுமையான புயலில் சிக்கியுள்ளோம்,” என்று அவரது செய்தி படித்தது.”உயிர்வாழ்வதற்கு குறைவான உணவு மற்றும் நீர். ஆபரேஷன் சிண்டூருக்கு எங்கள் ஆயுதப் படைகளை வாழ்த்துவதற்காக ஒரு பேனரை வைத்திருக்கும் பணியில் நான் இங்கு…
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை 3 வாரங்களுக்குள் 3 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையை பதித்துள்ளது. இதில் இரண்டு மூளைச்சாவு அடைந்தவர்கள் தானம் அளித்த சிறுநீரகங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மற்றொன்று உறவினர் தானம் மூலம் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். இதனை சிறுநீரியல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர், மருத்துவர் சுதாகர் மற்றும் சிறுநீரக தலைமை மருத்துவர் குமார் ஆகியோரின் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு செயல்படுத்தியுள்ளனர். இது குறித்து மருத்துவர் சுதாகர் கூறியது: “நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடிய 36 வயது பெண்ணுக்கும், 46 வயது ஆணுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கையையும், உயிர் சக்தியையும் அளித்துள்ளது. மூன்றாவது மாற்று அறுவை சிகிச்சை கணவர், தனது மனைவிக்கு சிறுநீரகத்தை…
மதுரை: “திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 18) ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: “முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்டுக்குப் பின்னர் ஜூலை 14-ம் தேதி காலை 6 மணியிலிருந்து 7.15 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. அதற்கான திருப்பணிகளை ஆய்வு செய்தோம். இரண்டரை கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. திமுக ஆட்சி ஏற்பட்டபிறகுதான் 3117 கேயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெருந்திட்ட வரைவும் ஏற்படுத்தப்பட்டது.…
சென்னை: ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் விஷ்ணுபுரம் சரவணன் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்” சிறுகதைத்…
