Author: admin

சென்னை: சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவர் விளாங்குடி உள்ளிட்ட 2 இடங்களில் அதிமுக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களால் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், சில இடங்களில் உயிரிழப்புகள் நேரிடுவதாகவும் கூறி, ஏப். 28-ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றுமாறும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் அந்த…

Read More

நாங்கள் இதன் மூலம் வந்திருக்கிறோம், புதிய ஆராய்ச்சியைப் படித்தோம், புதிய காரணங்களை வெளிப்படுத்தினோம். நீங்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டால் கொலஸ்ட்ரால் உண்மையில் ஒரே குற்றவாளியா என்று எங்களுக்குத் தெரியுமா? எங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மட்டுமே இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டதா, கொழுப்பு ஒரு பிரச்சினையாக இருக்காது, எனவே, மாரடைப்பு இல்லையா என்று நாம் எப்போதாவது நிறுத்திவிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறோமா? மோசமான தூக்கம், செயலற்ற தன்மை மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் போன்ற அன்றாட பழக்கவழக்கங்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை அமைதியாக சேதப்படுத்தும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பாதிப்பில்லாத தேர்வுகளுக்கு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.5 நிமிட வாழ்க்கை முறை மாற்றங்கள்மருத்துவர்கள் பெரும்பாலும் மாத்திரைகள் மற்றும் ஏராளமான சோதனைகளை பரிந்துரைக்கின்றனர், ஆனால் அவை மருந்துகளை விட சக்திவாய்ந்ததாக இருக்கும் அன்றாட நடைமுறைகளை கவனிக்கவில்லை. சிறிய பழக்கவழக்கங்கள், வெறும் 5 நிமிட மாற்றங்கள், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும்.…

Read More

நாகப்பட்டினம்: ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பாகோவில், குறிச்சி, பிரதாபராமபுரம், திருக்குவளை உள்ளிட்ட 7 ஊராட்சிகளில், மக்களுடன் முதல்வர் திட்ட 3-ம் கட்ட முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் கலந்து கொண்டனர். குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர்கோவி. செழியன் பேசும்போது,‘‘ காலையில் வெங்கடேஸ்வரி என்கிற மாற்றுத் திறனாளி மனு அளித்தார். அவருக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் வலது கையில் மனு வாங்கி, இடது கையில் பரிசீலித்து, மீண்டும் வலது…

Read More

முதல் பார்வையில், நீங்கள் ஒரு விருந்தில் செய்யத் துணிந்திருப்பது போல் தெரிகிறது the தரையில் குறுக்கு காலில் அமர்ந்து, பின்னர் உங்கள் கைகள், முழங்கால்கள் அல்லது ஆதரவுக்காக எதையும் பயன்படுத்தாமல் எழுந்து நிற்கவும். ஆனால் விஞ்ஞானிகள் இந்த எளிய நடவடிக்கை உண்மையில் நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பது குறித்த தடயங்களை வைத்திருக்கக்கூடும் – அல்லது மாரடைப்பால் நீங்கள் எவ்வளவு இறப்பது? இது உட்கார்ந்திருக்கும் சோதனை அல்லது எஸ்ஆர்டி என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது இருதய மற்றும் அனைத்து காரணங்களுக்கும் ஏற்படும் இறப்பின் எளிதான மற்றும் மிகவும் துல்லியமான குறிகாட்டிகளில் ஒன்றாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆம், அந்த பாதிப்பில்லாத சிறிய நடவடிக்கை உங்கள் இதயத்தின் எதிர்காலத்தின் பதுங்கிய முன்னோட்டமாக இருக்கலாம்.உட்கார்ந்திருக்கும் சோதனை ஒரு புதிய கட்சி தந்திரம் அல்லது டிக்டோக் சவால் அல்ல-இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மருத்துவ உலகில் உள்ளது. ஆனால் இது புதிய கவனத்தை ஈர்த்து வருகிறது,…

Read More

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,825 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 6,040 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவானது நேற்று விநாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 114.13 அடியாகவும், நீர் இருப்பு 84.41 டிஎம்சியாகவும் இருந்தது. இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 14-ம் தேதி காலை நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக பதிவானது. அன்று முதல் 16-ம் தேதி வரை அளவில் மாற்றமின்றி நீர்வரத்து நீடித்தது. 17-ம் தேதி காலை விநாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.…

Read More

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகத்தில் ராக்கெட்டில் பொருத்தக்கூடிய விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ககன்யான் விண்கலத்தில் 4 விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி 400 கி.மீ உயரத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தி ஆய்வு செய்யும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட்டில் பொருத்தக்கூடிய இன்ஜின்கள் சோதனையும் இஸ்ரோ மையங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ராக்கெட்டில் பொருத்தக்கூடிய கிரையோஜனிக் இன்ஜின், செமி கிரையோஜனிக் இன்ஜின், விகாஸ் இன்ஜின் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகத்தில் திரவ எரிபொருளைக் கொண்டு இயக்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட விகாஸ் இன்ஜின் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை 17 விநாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், இந்த இன்ஜினை பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளில் பயன்படுத்தலாம் எனவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

மழைக்காலம் கோடை காலத்திலிருந்து புத்துணர்ச்சியூட்டும் இடைவெளியை வழங்குகிறது, ஆனால் இது ஈரமான நிலைமைகள், தேங்கி நிற்கும் நீர் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக நோய்களின் உயர்வைக் கொண்டுவருகிறது. இந்த காரணிகள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் கொசுக்களுக்கான சிறந்த இனப்பெருக்கம் மைதானங்களை உருவாக்குகின்றன. நீர்வீழ்ச்சி நோய்த்தொற்றுகள் முதல் கொசுக்களால் பரவும் நோய்கள் வரை, இந்த நேரத்தில் உடல்நல அபாயங்கள் பெருகும். அதிகரித்த ஈரப்பதம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும், இதனால் மக்களை மேலும் பாதிக்கக்கூடியதாக மாற்றும். மிகவும் பொதுவான பருவகால நோய்களைப் பற்றி அறிந்திருப்பது ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்புக்கு உதவும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக மழைக்காலத்தில் கவனிக்க வேண்டிய பத்து பொதுவான நோய்கள் கீழே உள்ளன.மழைக்காலத்தில் அதிகரிக்கும் நோய்கள்: அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள்நோய்காரணம்அறிகுறிகள்உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வதுடெங்கு காய்ச்சல்தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்யும் எட்ஸ் கொசுக்கள்அதிக காய்ச்சல், கடுமையான உடல் வலி,…

Read More

இஸ்​ரேல் தாக்​குதலில் முக்​கிய அணுசக்தி விஞ்​ஞானிகள் கொல்​லப்​பட்ட நிலை​யில், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் விஞ்​ஞானி மொசென் பக்​ரிஜாதே கொல்​லப்​பட்ட விதத்தை ஈரான் மக்​கள் இன்​னும் மறக்​காமல் உள்​ளனர். ஈரான் அணுஆ​யுத தயாரிப்​பில் ஈடு​படு​வதை அமெரிக்​கா, இஸ்​ரேல் போன்ற நாடு​கள் விரும்​ப​வில்​லை. அதனால் கடந்த 2000-ம் ஆண்​டுக்கு முன்​பிருந்தே ஈரானுக்கு பல்​வேறு நெருக்​கடிகளை அமெரிக்கா கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேலும் தன் பங்​குக்கு அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கிறது. தற்​போது ஈரான் – இஸ்​ரேல் மோதல் உச்ச கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. கடந்த வாரம் இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் முக்​கிய ராணுவ தளப​தி​கள், அணு விஞ்​ஞானிகள் கொல்​லப்​பட்​டனர். அவர்​களில் முக்​கிய​மானவர் பெரீட​வுன் அப்​பாஸி. இவர் ஈரான் அணுசக்தி அமைப்​பின் முன்​னாள் தலை​வ​ராக இருந்​தவர். ஈரானின் அணுசக்தி துறை​யில் முக்​கிய​மானவ​ராக இருந்​த​தால், எந்த நேரத்​தி​லும் கொல்​லப்​படலாம் என்று அவரை எச்​சரித்​தனர். அதை கேட்டு அவர் சிரித்​துள்ளார். அத்​துடன், “அணு ஆ​யுதம் தயாரிக்க என்னை ஈரான் அரசு…

Read More

சென்னை: பொதுமக்கள் அரசுக்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையீடு செய்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பிறப்பித்த உத்தரவு: பொதுவாக அரசுக்கு பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணைப்படி அதிகாரிகள் 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிப்பதும் இல்லை, பதிலளிப்பதும் இல்லை. இதனால் அரசுக்கு அளித்துள்ள மனுக்களை பரிசீலிக்கக்கோரி ஏராளமான பொதுநல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இனி பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அரசுக்கு…

Read More

சென்னை: காவல்துறையில் 23 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறையினருக்கான பதவி உயர்வு காலவரம்பை குறைப்பதாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டிருந்த அரசாணைப்படி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதை மாற்றி 23 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பதவி உயர்வு கால வரம்பானது 2011-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2002 முதல் 2010-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு பணிக்கால வரம்பு குறைப்பு பொருந்தாது. இது அக்காலகட்டத்தில் பணியில் சேர்ந்த காவலர்களுக்கு செய்யும் துரோகமாகும். முதல்வரின் அறிவிப்பில் இதுபோன்ற நிபந்தனைகள் எதுவும் இல்லாதபோது அரசாணையில் 2011-ம்…

Read More