Author: admin

சென்னை: பணத்தை பறித்ததோடு, அரசுப் பேருந்தில் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழிப்பறி கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளரை, காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கேட்டின் முன்பு கடந்த 2018 அக்டோபர் 14-ம் தேதி சாலையில் 25 வயது இளைஞர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அவரை வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் வழிமறித்து தாக்கி அவரின் பாக்கெட்டிலிருந்த பணத்தை பறித்துவிட்டு அடித்து தள்ளினர். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பந்தப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக எழும்பூர் காவல் ஆய்வாளராக இருந்த கருணாகரன் தலைமையிலான போலீஸார், ஆதாய கொலை உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக இந்த வழக்கு தொடர்பாக கமல் என்ற மதுரை முத்து (28)…

Read More

நீங்கள் ஒரு மீன்வளத்தை வீட்டிலேயே வைத்திருக்க திட்டமிட்டுள்ளீர்களா, ஆனால் எந்த மீன்களை வைத்திருக்க வேண்டும் என்று குழப்பமடைகிறீர்களா? மீன் பராமரிப்புக்கு நீங்கள் புதியவரா? கவனிக்க எளிதான 10 தொடக்க-நட்பு மீன்வளம் மீன்களின் இந்த பட்டியலைப் பாருங்கள்:

Read More

அகமதாபாத்: ஏர் இந்​தியா விமான விபத்​தில் பயணம் செய்த பெரும்​பாலான காப்​பீட்​டு​தா​ரரும், அவர் நியமித்த நாமினி​யும் ஒருசேர உயி​ரிழந்​துள்​ளனர். இதனால், இழப்​பீட்டு தொகையை வழங்குவதில் காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மிகப்​பெரிய குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. ஜூன் 12-ம் தேதி அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. விமானத்​தில் பயணம் செய்த 241 பேர், கட்​டிடத்​துக்​குள் இருந்த 29 பேர் என மொத்​தம் 270 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் குடும்​பத்​துடன் லண்​டன் சென்​றபோது இந்த துயர சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. விபத்து ஏற்​பட்​ட​வுடன் இந்​திய காப்​பீட்டு ஒழுங்​கு​முறை மற்​றும் மேம்​பாட்டு ஆணை​யம் (ஐஆர்​டிஏஐ), காப்​பீட்டு நிறு​வனங்​களை தொடர்பு கொண்டு காப்​பீடு செய்​தவர்​களுக்கு உடனடி​யாக இழப்​பீடு​களை வழங்​கு​மாறு அறி​வுறுத்​தி​யுள்​ளது. இந்த நிலை​யில் காப்​பீடு வழங்​கு​வது தாமதப்​படுத்​தப்​பட்டு வரு​வ​தாக எழுந்த குற்​றச்​சாட்​டுக்கு காப்​பீட்டு நிறு​வனங்​கள் மறுப்பு தெரி​வித்​துள்​ளன. காப்​பீடு எடுத்​துக் கொண்ட பாலிசி​தா​ரர் மற்​றும் அவரது நாமினி என இரு​வருமே இந்த விமான விபத்​தில் உயி​ரிழந்​த​தால்…

Read More

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடிதம் வாயிலாக மாணவி விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள குருங்களூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ரா.ஞானதர்ஷினி, ‘இந்து தமிழ்’ நாளிதழில் மாயாபஜார் பகுதி வாயிலாக தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் நேற்று பிரசுரமானது. அதில், மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதைப் பார்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எம்.அருணாவுக்கு உத்தரவிட்டார். மேலும், இதை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர்…

Read More

சென்னை: பிரபல உணவகத்தின் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து, சென்னையில் உணவகம் தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘சீ ஷெல்’ என்ற உணவகம் கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. தமிழகத்தில், சென்னையில், அண்ணநகர், வேளச்சேரி, பெருங்குடி, ஆயிரம்விளக்கு உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தை கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் குல்ஹி மூசா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், சீ ஷெல் உணவகம், வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கேரள மாநிலம், கொச்சி வருமானவரித் துறை அதிகாரிகள், சீ ஷெல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். இதில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம்…

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன‌ மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி, கன்னிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடகில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 369 கன அடியாக‌ அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 3 ஆயிரத்து 810 கன அடி நீரும், ஹேமாவதி அணைக்கு 5 ஆயிரத்து 445 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 579 கன அடி நீர் வந்து கொண்டிருப்ப‌தாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ…

Read More

‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். நிஜ வாரணாசியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.50 கோடி செலவில் இந்த செட் அமைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு கென்யாவில் நடத்தப்பட இருக்கிறது. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.

Read More

சென்னை: சென்னை ராமாபுரத்​தில் மெட்​ரோ கர்​டர் விழுந்து வாலிபர் உயி​ரிழந்த விபத்​தில் ஒப்​பந்​த​தா​ர​ரான எல் அண்ட் டி நிறு​வனத்​துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 4 பொறி​யாளர்​கள் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், மாதவரம் – சோழிங்​கநல்​லூர் வரையி​லான வழித்​தடத்​தில், கடந்த 12-ம் தேதி இரவு 2 தூண்​களுக்​கு இடையே கர்​டர் அமைக்​கும் பணி நடை​பெற்​ற​போது 40 அடி நீள​முள்ள கர்​டர் திடீரென சரிந்து விழுந்​தது. இதில் சிக்கி ரமேஷ் (40) என்​பவர் உயி​ரிழந்​தார். இந்த விபத்து குறித்​து, நந்​தம்​பாக்​கம் போலீ​ஸார் மற்​றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகம் என இருதரப்​பிலும் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் தரப்​பில்,திட்ட இயக்​குநர் அர்ச்​சுனன் தலை​மை​யில் அதி​காரி​கள் கொண்ட குழு விசா​ரணை மேற்​கொண்டு வந்​தது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை வரை 7 பேரிடம் விசா​ரணை நடை​பெற்று இருந்​தது. 2 நாட்​களில் அனை​வரிட​மும் விசா​ரணை நடத்​தி,…

Read More

நடைபயிற்சி, எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி, ஏராளமான உடல் மற்றும் மன நன்மைகளை வழங்குகிறது. தினமும் 30 நிமிட விறுவிறுப்பான நடைப்பயணத்தை நோக்கமாகக் கொண்டிருப்பது சுகாதார வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது, இதய நோயின் அபாயங்களைக் குறைக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. உங்கள் அன்றாட வழக்கத்தில் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பதற்கான எளிய மற்றும் மிகச் சிறந்த வழிகளில் நடைபயிற்சி ஒன்றாகும். இது ஒலிப்பது போல் எளிதானது – அதை மாஸ்டர் செய்ய ஆடம்பரமான உபகரணங்கள் அல்லது குறிப்பிட்ட நுட்பங்கள் இல்லை. உங்களுக்கு தேவையானது ஒரு ஜோடி வசதியான காலணிகள் மற்றும் சிறிது நேரம். ஏறக்குறைய அனைத்து தரப்பு மக்களும் தங்கள் அன்றாட வழக்கத்தில் நடப்பதை இணைக்க முடியும். இது ஒரு நேரடியான மெட்ரிக், உடற்பயிற்சி சாதனங்களுடன் எளிதில் கண்காணிக்கப்படுகிறது, இது பலருக்கு அணுகக்கூடியதாக இருக்கும். ஆனால் நன்மைகளை அறுவடை செய்ய நீங்கள் நடக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? நீங்கள் 30 நிமிட நடைப்பயணத்தை…

Read More

புதுடெல்லி: மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி இதுகுறித்து கூறும்ம்போது,, “இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதலாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ் பணியிடங்கள் இப்போது ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும், இட ஒதுக்கீட்டைப் பறித்து அரசியலமைப்பை மாற்றுவதற்கான பாஜகவின் ‘சக்கரவியூகம்’ இது” என்று…

Read More