டெல் அவிவ்: இஸ்ரேல் – ஈரான் போர் நேற்று 8-வது நாளாக நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டுகளை வீசி அதிபயங்கர தாக்குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் நேற்று 8-வது நாளாக நீடித்தது. இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் ராணுவ உயர் அதிகாரிகள், மூத்த அணு விஞ்ஞானிகள் உட்பட 224 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் 25 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து ஈரான் கடந்த 19-ம் தேதி கொத்து (கிளஸ்டர்) குண்டுகளை வீசியதாக, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது.…
Author: admin
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தம், கை ரேகை அப்டேட் செய்வது, புதிய ஆதார் அட்டை எடுப்பது என பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 பேருக்கு மட்டும் டோக்கன் விநியோகித்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்குள்ளேயே ஆதார் மையம் இயங்கி வருகிறது. இந்த ஆதார் மையத்துக்கு காலை 9 மணிக்கே பொதுமக்கள் வந்துவிடுகின்றனர். கைக் குழந்தைகளுடன் வருவோர், முதியோர், கர்ப்பிணிகள் என பலர் சுமார் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பின்னர் 9.45 மணி அளவில் (ஒவ்வொரு நாளும் இந்த நேர அளவு மாறும்) அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. சுமார் 40 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கும் ஊழியர்கள் மற்றவர்களை வட்டாட்சியர் அலுவலகம்…
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் சார்கோட் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியபின், போர் நிறுத்தத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முதலில் முன்வந்ததால், அதற்கு இந்தியா சம்மதித்தது. ஆனால் இதை வெளிப்படையாக ஏற்காமல், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், சார்கோட் விமானப்படை தளம் ஆகியவற்றின மீது இந்திய விமானப்படை கடந்த மே 6-ம் தேதி நள்ளிரவு துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடத்த 45 நிமிடத்துக்குள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், என் சார்பில் பேசி போரை நிறுத்த சவுதி இளவரசர் ஃபைசல் முன்வந்தார். இவ்வாறு இஷாக் தர்…
காஞ்சிபுரம் நகரத்தின் நடுவே அமைந்துள்ள மஞ்சள் நீர் கால் வாய் நகரப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாயாக விளங்கி வருகிறது. ஒக்கப்பிறந்தான் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர், நகரத்தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத்தேவையை பூர்த்தி செய்து, நத்தப்பேட்டை ஏரியை சென்றடையும் வகையில் மன்னர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், ஒக்கப்பிறந்தான் குளத்தின் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து இன்றியும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயப்பட்டறை கழிவுநீரும் இந்த கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் உள்ள குடியிப்புகளின் கழிவுநீர் மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீர் வெளியேறி நத்தப்பேட்டை ஏரியை சென்றடைகிறது. இதனால், ஏரியின் நீர் மாசடைந்துள்ளது. இதனால், மஞ்சள் நீர் கால்வாயில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுத்து, கால்வாயை சீரமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மஞ்சள்நீர் கால்வாயை சீரமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் ரூ.40 கோடி நிதி ஒதுக்கியது. இதன்மூலம், 6 கி.மீ.…
பட வரவு: கெட்டி படங்கள் பல ஆண்டுகளாக அறிவுறுத்தப்பட்டபடி, காலை உணவு என்பது அன்றைய மிக முக்கியமான உணவாகும். உங்களிடம் எந்த நேரம் இருந்தாலும், அது முழு நாளின் ஆற்றலுக்கும் தொனியை அமைக்கிறது, இதனால் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். இருப்பினும், பல முறை நாம் தனித்துவமான உணவு சேர்க்கைகளை சமைக்கிறோம், அவை சுவையாகத் தோன்றலாம், ஆனால் வயிற்றுடன் நன்றாக உட்கார்ந்து, எங்களை வீங்கியதாக உணர முடிகிறது.வாழைப்பழங்கள் இதுபோன்ற ஒரு பழமாகும், இது பலர் காலை உணவைத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் அவை நுகர்வு குறித்து முழு உணர்வைத் தருகின்றன. இருப்பினும், பலர் அவற்றை சாப்பிட்ட பிறகு வீக்கமாக புகார் கூறுகின்றனர். ஏன்? வீக்கத்தைத் தடுக்க ஒருவர் தவிர்க்க வேண்டிய சில உணவு காம்போக்கள் யாவை? கண்டுபிடிப்போம்.நீங்கள் சாப்பிட வேண்டும் காலை உணவுக்கு வாழைப்பழங்கள்?பட வரவு: கெட்டி படங்கள்வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலைத் தணிக்க உதவுவதால், உடலுக்கு எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அறிமுகப்படுத்த…
ரூ.7.42 கோடி மோசடி வழக்கில் மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரியின் கணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர ஐபிஎஸ் அதிகாரி ராஷ்மி கரந்திகரின் கணவர் புருஷோத்தம் சவான். இவர் மும்பை, தானே மற்றும் புனே நகரில் அரசு ஒதுக்கீட்டு குடியிருப்புகளை சலுகை விலையில் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.24.78 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சூரத் நகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் உள்ளிட்ட சிலரிடம் புருஷோத்தம் சவான் ரூ.7.42 கோடி மோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு ஒதுக்கீட்டு மனைகளை தள்ளுபடி விலையில் பெற்றுத் தருவதாக கூறி சூரத் தொழிலதிபரிடம் புருஷோத்தம் பணம் வாங்கியுள்ளார். மேலும் மகாராஷ்டிர போலீஸ் அகாடமிக்கு டி-ஷர்ட் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்” என்றார்.
லீட்ஸ்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம் பெற்றார். இதேபோன்று 8 வருடங்களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்பினார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்குரும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்கினார்கள். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. இன்ஸ்விங், ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்பட்ட பந்துகள், அவுட் ஸ்விங் என…
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், ‘மனுக்கள் கொடுத்தால் குப்பைத் தொட்டிக்குத்தான் போகுது’ என பெண் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அந்த பெண் வசிக்கும் கிராமத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தும்பூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இந்த முகாமில் அமைச்சர் கோவி.செழியன், ‘‘மக்களிடம் வலது கையில் மனு வாங்கி, இடது கையில் பரிசீலித்து, மீண்டும் வலது கையில் திட்டத் தை தீட்டி தருவது தான் ஸ்டாலின் அரசு. ஆமை வேகத்தில் இயங்கிய அரசாங்கத்தை ராக்கெட் வேகத்தில் இயக்குபவர் முதல்வர் ஸ்டாலின்’’ என பேசினார். அப்போது, முகாமில் மனு அளிக்க வந்த கொள்ளைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சமன்ஷா மேரி (67) என்பவர், ‘‘நாங்கள் வசிக்கும்…
சர்வதேச யோகா தினம் 2025 முழுமையான ஆரோக்கியத்தில் யோகாவின் பங்கை எடுத்துக்காட்டுகிறது, கர்ப்பப்பை வாய் ஸ்போண்டிலோசிஸ் போன்ற நவீன வியாதிகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. கோப்ரா போஸ் மற்றும் கேட் போஸ் போன்ற குறிப்பிட்ட ஆசனங்கள் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும், ஆதரவான தசைகளை வலுப்படுத்துவதன் மூலமும் கழுத்து வலி மற்றும் விறைப்பை நீக்குகின்றன. சீரான நடைமுறை, கவனமுள்ள பழக்கவழக்கங்களுடன் இணைந்து, நீண்டகால நல்வாழ்வை ஊக்குவிக்கிறது மற்றும் மருத்துவ சிகிச்சைகளை நிறைவு செய்கிறது. சர்வதேச யோகா நாள் 2025: யோகா உங்களைத் தழுவுவதில் ஒரு முக்கிய பாதையாக செயல்படுகிறது, சுய மற்றும் சுயத்தின் மூலம். இந்த நடைமுறை உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், நீங்கள் முன்பே இல்லாத நபருக்கு சேவை செய்யலாம். இருப்பினும், யோகா இனி அழகியல் அல்லது வயதானவர்களுடன் தொடர்புடைய ஒரு முக்கிய நடைமுறை அல்ல; இது ஒரு உலகளாவிய ஆரோக்கிய இயக்கமாக மாறியுள்ளது, இது மில்லியன் கணக்கானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது-எல்லா வயதினருக்கும்…
சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் அல்லது கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து படக்குழு ‘தி ஃபர்ஸ்ட் ரோர்’ என்று சூசகமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக ஒரு பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மறைந்து கொண்டிருக்கும் சூரியனுக்கு முன்னால் நடிகர் விஜய் தனது வலது கையை உயர்த்தி நிற்பது போலவும் அவருக்கு கீழே மக்கள் நிற்பது போலவும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேரால் எக்ஸ், பேஸ்புக் , இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டது. விஜய்யின் ரசிகர்களும், அவரது தமிழக…
