புதுடெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, “இல்லை, அது ஒருபோதும் அமல்படுத்தப்படாது. ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரை, ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வோம். நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பெற்று வந்த பாகிஸ்தான் தண்ணீரின்றி தவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பரஸ்பர நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத்…
Author: admin
ஹெடிங்லேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முந்தைய முடிவுகளை முன்வைத்து இங்கிலாந்து கேப்டன் தவறாக இந்திய அணியை பெட் செய்ய அழைத்ததில் இந்தியா அபாரமாக ஆடி ஜெய்ஸ்வால், கேப்டன் கில் சதங்களுடனும், ரிஷப் பந்தின் அதிரடியுடனும் முதல் நாளில் 359 ரன்களைக் குவித்தது. முதல் நாள் ஆட்டத்தில் சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்ப்போம். ஒரே நாளில் ஹெடிங்லேயில் 359 ரன்களை எடுத்தது இந்திய அனியின் புதிய உச்சமாகும். அதாவது, இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் டெஸ்ட் போட்டியில் எடுத்த அதிக ரன்களாகும் இது. இதற்கு முன்பாக 2022-ல் எட்ஜ்பாஸ்டனில் 338 ரன்களை ஒரே நாளில் எடுத்தது. மேலும், இங்கிலாந்துக்கு பயணம் செய்த அணிகளில் ஒரே நாளில் 359 ரன்கள் என்பது இரண்டாவது பெரிய தொடக்க நாள் ஸ்கோராகும். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா 2003-ல் 362/4 என்று எடுத்ததே அதிகபட்சம். கேப்டன்சியில் அறிமுகப் போட்டியிலேயே சதம்…
திருநெல்வேலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர். தற்போது அங்க போர் நடைபெற்று வரும் நிலையில் அந்த மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட மீனவர் பிரதிநிதிகளுடன் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமாரை நேரில் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர். அப்போது ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர் பிரதிநிதிகள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து பலர் ஈரான் நாட்டின்…
இந்தியாவில் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் சேலை ரவிக்கை வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகித்தன. பிராந்தியத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வெவ்வேறு பாணிகள் மற்றும் வடிவங்களை ஆராய்வதிலிருந்து, கலை மற்றும் கட்டமைப்புகளும் முக்கியம். தென்னிந்தியாவிலிருந்து வரும் ரவிக்கை வடிவமைப்புகள் பெரும்பாலும் சிக்கலான கோயில் மையக்கருத்துகள் மற்றும் பாரம்பரிய எம்பிராய்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளன; இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், பொழுதுபோக்குத் துறையின் தோற்றத்துடன், வடிவமைப்பு விவரங்கள் மிகவும் பொருத்தமான மற்றும் தைரியமான கட்டமைப்பைக் கொண்ட ஒரு சிறிய பரிணாம வளர்ச்சியைக் கண்டன. இரு உலகங்களிலும் சிறந்ததைக் கொண்டுவந்த தென்னிந்திய நடிகைகள் அணிந்த 5 அதிர்ச்சியூட்டும் ரவிக்கை வடிவமைப்புகளைப் பார்ப்போம்.
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. பின்னர், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.…
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஷுப்மன் கில் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறித்தும், களத்தில் தனது செயல்பாடு குறித்தும் இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இங்கிலாந்தில் தனது முதல் இன்னிங்ஸில் சதம் பதிவு செய்துள்ளார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என நான்கு நாடுகளில் தனது முதல் 5 சதங்களை அவர் பதிவு செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. “களத்தில் நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும் மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன் என நான் நினைக்கிறேன். ஆனால், அதில் சில ஸ்பெஷலானது. கிரிக்கெட்டில் எப்போதும் சவால் இருக்கும். அது ஒவ்வொரு நிலையிலும் மாறுபடும். எனது செயல்பாட்டில் நம்பிக்கை வைக்கிறேன். கள சூழல், அணிக்கு என்ன தேவை, பந்து வீச்சாளர்களின் திட்டம் போன்றவற்றை இந்த செயல்முறையின் போது கவனத்தில் கொள்வேன். ஷுப்மன் கில்…
தெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தின. இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையின்படி, ‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் அமின் பௌர் ஜோட்கி. புரட்சிகர காவல்படையின் இரண்டாவது UAV ட்ரோன் படைப்பிரிவின் கமாண்ட் தளபதியாக அவர் பதவி வகித்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கிய ஒன்பது நாட்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 7-வது உயர்மட்ட ஈரானிய தளபதி இவர் ஆவார். ஈரானின் ட்ரோன்கள், இந்த மோதலில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. அவை இஸ்ரேலின் பல பகுதிகளில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளன. ஈரானின் ட்ரோன்களை கண்டறிந்து, கண்காணிக்கவும் மற்றும் வீழ்த்துவதற்கும் நிறைய ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் இஸ்ரேல் பயன்படுத்தி…
மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜூன் 22) நடைபெறுகிறது. அதனையொட்டி மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து தரிசனம் செய்கின்றனர். அதனையொட்டி மாதிரி அறுபடை வீடுகளில் தரிசனம் செய்ய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்ய இன்று காலை 10.40 மணியளவில் மாநாட்டு வளாகத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் தமிழக ஆளுநர்…
ஒவ்வொரு பெற்றோரும் ஒரு பிரகாசமான, நம்பிக்கையான, ஆர்வமுள்ள குழந்தையை வளர்க்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். உளவுத்துறை ஒரு குழந்தை பிறந்த ஒன்று என்று கருதப்பட்டாலும், உண்மை என்னவென்றால், சுற்றுச்சூழல், தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு ஆகியவை குழந்தையின் மூளையை வடிவமைப்பதில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கின்றன. ஒரு குழந்தையை புத்திசாலித்தனமாக்க ஃபிளாஷ் கார்டுகள், ஆரம்ப வாசிப்பு அல்லது திரை அடிப்படையிலான கற்றல் பயன்பாடுகள் போதுமானவை என்ற பிரபலமான நம்பிக்கை உள்ளது. ஆனால் அறிவியல் வேறு கதையைச் சொல்கிறது.ஒரு ஸ்மார்ட் குழந்தையை வளர்ப்பதற்கான உண்மையான பாதை சிறிய, நிலையான செயல்களில் உள்ளது, இது கல்வியாளர்களுக்கு அப்பாற்பட்டது. குழந்தையின் மூளை சக்தியை அதிகரிக்க அமைதியாக ஆனால் சக்திவாய்ந்த முறையில் உதவும் ஐந்து வழிகள் இங்கே.
புதுடெல்லி: நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் உள்ள வெளிநாட்டவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் ஈரானில் இருந்து ஒரு தனி விமானம் மூலம் நேற்று (ஜூன் 20) புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் இருந்து இன்று (ஜூன் 21) அதிகாலை 3 மணிக்கு சிறப்பு விமானம் இந்தியர்கள் புதுடெல்லி அழைத்துவரப்பட்டனர். இதன் மூலம், இதுவரை 517 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்து மூலம் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ஈரானில் உள்ள…
