பெரும்பாலும், திடீரென்று நீங்கள் உங்கள் உடலில் ஒரு கூர்மையான உணர்வை உணர்கிறீர்கள், ஆனால் அது வலி அல்ல. உணர்வை உடலின் மீது கிள்ளுதல் “ஊசிகள் மற்றும் ஊசிகள்” என்று விவரிக்க முடியும், மேலும் வேதனையில்லாமல் இல்லாவிட்டால் சங்கடமாக இருக்கும். இருப்பினும், உங்கள் உடல் முழுவதும் ஊசிகளையும் ஊசிகளையும் அனுபவிக்கும் போது உண்மையில் என்ன அர்த்தம்? ஆழமாக நனைப்போம்.என்ன ஊசிகளும் ஊசிகளும் உணர்வுஊசிகளுக்கும் ஊசிகளுக்கும் மருத்துவ சொல் பரேஸ்டீசியா. கூச்சம், முட்கள், உணர்வின்மை அல்லது உங்கள் தோலில் ஒரு தெளிவற்ற உணர்வு போன்ற நீங்கள் பயன்படுத்தாத அசாதாரண உணர்வுகளை இது விவரிக்கிறது. எங்கள் கை அல்லது கால் “தூங்கச் செல்லும்போது” (மற்றும் நீங்கள் அதை நகர்த்த முடியவில்லை) உட்கார்ந்திருக்கும் அல்லது ஒரு நிலையில் நீண்ட நேரம் படுத்துக் கொண்டபின் கிட்டத்தட்ட நாம் அனைவரும் இந்த உணர்வை அனுபவித்திருக்கிறோம். நரம்புகள் அல்லது இரத்த நாளங்கள் மீதான அழுத்தம் உங்கள் மூளைக்கும் உடலுக்கும் இடையிலான சமிக்ஞைகளை…
Author: admin
‘ரெட்ரோ’ படம் வெளியாகி 50 நாட்கள் கடந்ததை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. மே 1-ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. தற்போது இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதை முன்னிட்டு கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த பதிவில், “‘ரெட்ரோ’ வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சிறப்பான பயணமாகவும், படமாகவும் இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஒரு யுத்தத்தை சந்தித்தது. அதன் மீது வைக்கப்பட்ட வெறுப்புகளை கடந்து, அனைவருடைய அன்பினால் அந்த யுத்தத்தை வெல்ல முடிந்தது. அதற்கு நீங்கள் எங்கள் மீது வைத்த அன்பு மிகுதியாக இருந்தது. அதேபோல் படத்தின் மீது வைக்கப்பட்ட உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு நன்றி. நிச்சயமாக அனைத்தையும் எடுத்துக் கொண்டு எனது எதிர்கால படைப்புகளில் சரி செய்துகொள்வேன். ‘ரெட்ரோ’…
சென்னை: இஸ்ரேல் – ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் இஸ்ரேல் – ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்தச் சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை…
காய்ச்சல், உடல் வலிகள், குமட்டல், வாந்தி அல்லது சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் கடித்த பகுதியைத் தாண்டும்போது, பிரச்சினை மிகவும் தீவிரமானது. இந்த அறிகுறிகள் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, ஜிகா அல்லது மேற்கு நைல் வைரஸ் போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைக் குறிக்கலாம். உதாரணமாக, டெங்கு வழக்கமாக திடீரென அதிக காய்ச்சலைக் கொண்டிருக்கிறது, கடித்த நான்கு முதல் பத்து நாட்களுக்கு இடையில் மூட்டு மற்றும் தசை வலிகள் மற்றும் தோலில் தடிப்புகள் உள்ளன. மலேரியா பொதுவாக காய்ச்சல் மற்றும் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் மேற்கு நைல் வைரஸ், அசாதாரணமானது என்றாலும், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை உள்ளடக்கியது. இந்த அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவ கவனிப்பைப் பெறுவது முக்கியம், குறிப்பாக இத்தகைய நோய்கள் பரவக்கூடிய பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு.
மதுரை: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள், தமிழகம்…
சென்னை: “ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது அவர்கள் ஆங்கிலத்தை மக்களுக்கு எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல, அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது,” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆங்கிலம் இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல – அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ தொந்தரவாக அல்ல, மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிப்பதற்காக கற்பிக்கின்றன. வலுவான தேசிய பெருமையுடன் கூடிய சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுகிறது. ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை உயர்குடியினருடையதாக சித்தரிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் அது நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல, மாறாக அது ஏழைகள்,…
தெஹ்ரான்: இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “9வது நாளாக தொடரும் தாக்குதல்களில் 54 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். 3,056 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் ஆவர். இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில், 2,220 பேர் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 232 பேர் தாக்குதல் நடந்த இடத்திலேயே வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் உள்ள எங்கள் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு 457 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளன.” என்று தெரிவித்தார். மீண்டும் இணைய சேவை: ஈரானில் இணைய…
கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பேரூர் ஆதீனம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 23-ம் தேதி பாரம்பரிய சிவவேள்வி பூஜை நடக்கிறது. இவ்விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார். கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கோவையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரூரில் பேரூர் ஆதீனத்தைத் கி.பி.11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப்பெருமான் தோற்றுவித்தார். அதன் பின்னர், அவரின் அருள்வழியில் 24-ஆம் குருமகாசந்நிதானமாக சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றினார். அவரின் வழியில் கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது. பேரூர் ஆதீனத்தின் 24–ம் குருமகாசந்நிதானங்கள் உலகெங்கும் விரிந்து மிகச் சிறப்பாக செயலாற்றி வரும் தமிழ் நெறி வழிபாட்டின் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய இடங்களுக்குச் சென்று அவர்களின்…
சென்னை: “பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்” என என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பாஜக ஆட்சியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பாஜக செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோடியின் மிக நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் குவித்த சொத்துக்கள் பலமடங்கு பெருகியதை சர்வதேச புகழ் பெற்ற ‘எக்னாமிஸ்ட்” இதழ் மற்றும் ‘ஆக்ஸ்பார்ம்” பலமுறை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவை வளம் கொழிக்கும் நாடாக பிரதமர் மோடி மாற்றினாரோ இல்லையோ, அதானியை உலக கோடீஸ்வரர்கள் வரிசையில்…
புதுடெல்லி: “வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட செயல்பாடுகள் ‘ஜனநாயகத்துக்கு விஷம்’ போன்றது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் உத்தரவிட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் செயல். இதன்மூலம் வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்திருப்பது தெளிவாகிறது. இது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” என கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல்கள், வாக்கெடுப்புத் தரவுகள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரி வருகிறார். தேர்தல் முடிவு தொடர்பான தீர்ப்பை எதிர்த்து…
