சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. 19 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் ஆட்டங்களின் முடிவில் சேலம், திருநெல்வேலி, சென்னை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவாரூர் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் சேலம் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. சேலம் அணி சார்பில் வர்ஷா 2 கோல்களும், காவ்யா ஒரு கோலும் அடித்தனர். 2-வது கால் இறுதி ஆட்டத்தில் நாமக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி அணியை தோற்கடித்தது. நாமக்கல் அணி தரப்பில் துர்கா கோல் அடித்தார். 3-வது கால் இறுதி ஆட்டத்தில் திருவாரூர் 6-1 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் அணியை வீழ்த்தியது. திருவாரூர்…
Author: admin
இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள், தமிழகம்…
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘குபேரா’ திரைப்படம் உலகமெங்கும் முதல் நாளில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குபேரா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்களும், தெலுங்கில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. வாசிக்க > குபேரா: விமர்சனம் – தனுஷின் ‘அசுர’ நடிப்புக்கு பலன் கிட்டியதா? இந்த நிலையில் இப்படம் முதல் நாளில் உலகம் எங்கும் ரூ.30+ கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இப்படம் ரூ.14.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கக் கூடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் ஜூலை மாதம், கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தை ஏற்கெனவே கூட்டி கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிப்பது தொடர்பாக விவாதித்து வருகிறார். இதற்கிடையில் மீண்டும் மாவட்ட செயாலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தை வரும் ஜூன் 24, 25 தேதிகளில் கூட்ட உள்ளார். ஒவ்வொரு கூட்டத்திலும், வாக்குச்சாவடி அளவிலான பாக கிளை நிர்வாகிகளை நியமிக்க அறிவுறுத்தி வருகிறார். இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்கவும் அறிவுறுத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பழனிசாமி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தமிழகம் முழுவதும்…
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோகா தின விழாநடைபெற்றது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த2023-ம் ஆண்டு நடைபெற்ற யோகாசனநிகழ்ச்சியில் 1.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இது உலக சாதனையாக இருந்த நிலையில், இந்த சாதனையை விசாகப்பட்டினம் யோகா தின நிகழ்ச்சி…
Last Updated : 22 Jun, 2025 12:09 AM Published : 22 Jun 2025 12:09 AM Last Updated : 22 Jun 2025 12:09 AM சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ளிம்ப்ஸ் எப்படி? – ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் குரலுடன் க்ளிம்ப்ஸ் தொடங்குகிறது. போர்க்களம் போல் காட்சியளிக்கும் ஒரு பகுதியில் கையில் வாளுடன் போலீஸ் உடையில் நடந்து வருகிறார். முறுக்கு மீசை கெட் அப் ‘மெர்சல்’ படத்தை நினைவுப்படுத்துகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும்…
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்த க.பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. செம்மண் முறைகேடு மூலமாக கிடைத்த பெரும் தொகையைக் கொண்டு ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து…
கர்நாடகாவில் போலிச் செய்திகள், தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் மோதல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் 10-க்கும் மேற்பட்ட உயிர் சேதமும், கோடிக்கணக்கில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் மத ரீதியான அவதூறான தகவல்கள் பரப்புவதை தடுக்கவும், பெண்கள் குறித்த அவதூறான செய்திகளை தடுக்கவும் சமூக வலைதள ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அரசு ஏற்படுத்தியது. இதற்காக 6 பேர் கொண்ட உறுப்பினர்களையும் நியமித்தது. இந்தக் குழு பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசித்து இதற்கான சட்ட வரைவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த குழுவினர் “கர்நாடக தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் தடை மசோதாவை” தயாரித்து, சட்டத்துறை அமைச்சகத்தில்…
சென்னை: கீழடியை வைத்து திமுக அரசு அரசியல் செய்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த இயக்கம் அதிமுக. கீழடியை வைத்து அரசியல் செய்யும் இயக்கம் திமுக. கீழடிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. கீழடி விவகாரம் வந்த பிறகு அகழ்வாய்வு துறை தொடங்கியது போன்று திமுக கட்டமைக்கிறது. தமிழகத்தில் இதுவரை 39 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதில் அதில் 33 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டது அதிமுக அரசு. ஈரோடு அடுத்த கொடுமணலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பதனம் செய்து தமிழன் பயன்படுத்திய சான்று கிடைத்துள்ளது. இதை ஏதோ தானே வந்து கண்டுபிடித்தது போன்று ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். அந்த கொடுமணல் அகழாய்வு திட்டத்துக்கு முதலில் நிதி ஒதுக்கியது பழனிச்சாமி ஆட்சியில் தான். ‘கீழடி என் தாய்மடி’…
சூர்யா பிறந்த நாளன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஜூன் 20-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்பை அறிவித்தது படக்குழு. ஆனால், டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து, ‘கருப்பு’ டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பிறந்த நாளுக்கும், ‘கருப்பு’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த மாதம் வரவுள்ள பெரிய நாளுக்காக பெரிய விருந்து காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ஜூலை 23-ம் தேதி அன்று சூர்யாவின் 50-வது பிறந்த நாளாகும். அன்றைய தினம் தான் டீசர் வெளியாக இருக்கிறது என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இது சூர்யா ரசிகர்களை…
