அமெரிக்காவை நம்ப முடியாது. அணு சக்தி தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். இஸ்ரேல், ஈரான் போர் தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் (அரபு லீக்) அவசர ஆலோசனை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியா, எகிப்து, இராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 22 நாடுகள் உள்ளன. அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்அரக்சி பங்கேற்றார். கூட்டத்துக்கு முன்பாக அவர் கூறியதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஏற்கெனவே முடிவு செய்து விட்டது. அமெரிக்காவின் உத்தரவின்படியே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படுகிறது. அமெரிக்கா நம்பிக்கை துரோகம் செய்கிறது. அந்த நாட்டை நம்ப முடியாது. கண்துடைப்புக்காக பேச்சுவார்த்தைக்கு…
Author: admin
தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கட்டிங் கொடுக்க வேண்டுமெனக்கூறி குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கே.ஆர்.குகேஷ் தாக்கல் செய்திருந்த மனு: தமிழகம் முழுவதும் கனிமவளம் மற்றும் புவியியல் துறையிடமிருந்து முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற்று மணல், கல், கிராவல் குவாரிகளை நடத்தி வருகிறோம். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராமச்சந்திரன், குவாரி உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி நடத்துபவர்களிடம் 70 சதவீதமும் பட்டா நிலத்தில் கிராவல், மணல் குவாரிகளை நடத்துபவர்களிடம் 40 முதல் 55 சதவீதமும் பணம் வசூலித்து வருகிறார். இதுதொடர்பாக கனிமவளம், புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், இவ்வாறு ராமச்சந்திரன் மூலமாக வசூலிக்கப்படும் பெரும் தொகையில் தமிழக…
சென்னை: ராமராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை – அன்பாசிரியர்’ விருதுகளை வழங்க ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் பெருமையுடன் காத்திருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும்ஆசிரியர்கள் வரும் 22-ம்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறுதெரிவிக்கப்பட்டது. தற்போது பெருவாரியான ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 30-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வின் பங்குதாரராக பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனம் இணைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள், தொடர்ச்சியாக கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஏற்கெனவே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்,…
வடக்கு ஈரானில் உள்ள செம்னான் பகுதியில், நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியதால், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான பாதிப்பு ஏற்பட்டது எனவும், உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்தது. செம்னான் பகுதி, ஈரானின் ஏவுகணை உற்பத்தி மையம் அருகே அமைந்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்கியதால், இரு நாடுகள் இடையே போர் மூண்டது. இந்நேரத்தில் ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதா என்ற…
கேலி சித்திரம் மூலம் அவதூறு பரப்பும் திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கீழடி அகழாய்வு குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எனது தலைமையிலான அதிமுக அரசு, கீழடி அகழாய்வுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை முழுமையாக தெரிவித்துவிட்டோம். விரும்பும் தெய்வங்களை வழிபடுவது நமது உரிமை. அந்த அடிப்படையில், இந்து முன்னணிசார்பில் மதுரையில் முருக பக்த மாநாடு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் பேசுவோர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரின் கருத்தை தெரிவித்துள்ளார். தாய்மொழி முக்கியம் என்று கூறியுள்ளார். தாய்மொழிக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தைவிட ஆங்கிலத்துக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அவர் கூறி இருக்கிறார். தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதை மடைமாற்றம் செய்வதற்காக…
அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று…
மேட்டூர் / தருமபுரி: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 8,218 கனஅடியாகவும், மாலை 16,341 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று காலை 18,220 கனஅடியாகவும், மாலை 22,469 கனஅடியாகவும் அதிகரித்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 113.81 அடியாகவும், நீர் இருப்பு 83.94 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்படி நேற்று ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. இதில் அந்த அணு சக்தி தளம் மிகக் கடுமையாக சேதமடைந்தது. 3 தளபதிகள் உயிரிழப்பு: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில்…
கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று காலமானார். அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த இவருக்கு மனைவி கலைச்செல்வி, மகள் சுபநிதி உள்ளனர். 1980-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த அமுல் கந்தசாமிக்கு கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவானார். தொடர்ந்து, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல்…
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான போட்டித் தேர்வில் தமிழ் தகுதித்தாள், பொது அறிவு மற்றும் பாடங்கள் வாரியான நடத்தப்படும் தேர்வுகளிந் தேதிகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத்தேர்வு உள்ள பதவிகள்) துணை இயக்குநர் (சட்டம்) புள்ளியியல் மற்றும் பகுப்பாய்வு உதவி இயக்குநர், மேலாளர் (சுரங்கம்) துணை மேலாளர் (சுற்றுச்சூழல்), வனத்துறை விஞ்ஞானி (கிரேடு-3) தலைமைச் செயலக நிருபர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்), உளவியலாளர், முதுநிலை பூச்சியியலாளர், சமூகவியாளர், கால்நடை உதவி மருத்துவர் உள்பட 30 வகையான பதவிகளில் 330 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மே 7-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 13-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி முடிவடைந்தது. வெவ்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பில் பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் மொழி தகுதித்தாள், பொது அறிவுத்தாள் மற்றும்…
