Author: admin

‘சக்திமான்’ திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே உருவாகும் என்று நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப் உறுதிப்பட தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு பசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பசில் ஜோசப் இயக்கத்தில் என்றால், ‘சக்திமான்’ படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கவுள்ளார் என யூகிக்கப்பட்டது. இந்தச் செய்தி இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக சமீபத்திய நேர்காணலில் பசில் ஜோசப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார். “ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே ‘சக்திமான்’ உருவாகும். இது தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்கள் நிச்சயமாக அவர்களின் சுயலாபத்துக்காக செய்கிறார்கள்” என்றார். இதன் மூலம் ‘சக்திமான்’ படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ‘சக்திமான்’ படத்தில் ரன்வீர் சிங் – பசில் ஜோசப் கூட்டணி இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,…

Read More

மதுரை: “முருக பக்தராக மதுரைக்கு வருகை தரும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை திமுக ஆதரிக்க வேண்டும்,” என நடிகை கஸ்தூரி கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 22) வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “மதுரையில் நடக்கும் மாநாடு அரசியல் விழா அல்ல. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் மாநாடு. கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவதெல்லாம் அரசியல் இல்லை. மக்கள் ஒன்று கூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமில்லை. மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா? திமுக நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. மக்களின் எழுச்சியுடன் இம்மாநாடு அமைந்திருக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வருவது பெருமை. இதை திமுக அரசு ஆதரிக்க…

Read More

அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகள் கலோரிகளில் குறைவாகவும், ஃபைபர் மற்றும் வைட்டமின் சி மற்றும் அவற்றின் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களுக்கு பெயர் பெற்றவை. தினசரி உட்கொள்ளல் வீக்கத்தைக் குறைத்து, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும். அவற்றின் இயற்கையான இனிப்பு, அவற்றின் பிரகாசமான நிறத்துடன் சேர்ந்து, ஓட்மீல், தயிர் அல்லது மிருதுவாக்கிகளுக்கு ஏற்ற கூடுதலாக அமைகிறது, இது உங்கள் காலை பாதுகாப்பு ஊட்டச்சத்துக்களுடன் சக்தியை அதிகரிக்க விரைவான மற்றும் சுவையான வழியாகும்.

Read More

மதுரை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்தார். காலை முதலே மாநாடு நடைபெறும் திடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி எடுத்தும் வருகை தந்தனர். மாநாட்டு திடலில் திரண்ட பக்தர்கள்: மதுரை ரிங்ரோடு அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் பங்கேற்க, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே மாநாட்டு திடல் பகுதியில் திரண்டனர். அவர்கள் மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை தரிசித்தனர். தீவிர பரிசோதனை: மாநாட்டு பகுதிக்கு வரிசையில் செல்வதற்கு தடுப்புகளை ஏற்படுத்தி வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்வழியே செல்வோர் அனைவரையும் போலீஸார், தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். முக்கிய நிர்வாகிகள், விஐபிக்கள் மெயின் ரோட்டில் இருந்து மேடைக்கு செல்வதற்கென தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

Read More

இந்த நாட்களில், நாங்கள் தொடர்ந்து அழைப்புகள், செய்திகளில், கூட்டங்களின் போது மற்றும் வீட்டிலேயே தொடர்புகொள்கிறோம். ஆனால் நாம் அதிகம் பேசுவதால், நாங்கள் கேட்டதாகவோ அல்லது புரிந்து கொள்ளவோ ​​அர்த்தமல்ல. மிகவும் தீங்கு விளைவிக்கும் சில உரையாடல்களில் கூச்சல் அல்லது பெரிய வாதங்கள் இல்லை. அவை அமைதியாக நடக்கும், சிறிய பழக்கவழக்கங்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. காலப்போக்கில், இந்த வடிவங்கள் நம்மை புறக்கணிக்கவோ, தவறாகப் புரிந்து கொள்ளவோ ​​அல்லது அவமரியாதை செய்யவோ முடியும். டாக்ஸிக் தொடர்பு எப்போதும் வெளிப்படையாகத் தெரியவில்லை. யாரோ ஒருவர் உங்கள் உணர்வுகளைத் துலக்குவது அல்லது தங்களைப் பற்றிய ஒவ்வொரு உரையாடலையும் உருவாக்கலாம். இவை சிறிய விஷயங்களாகத் தோன்றினாலும், அவை மெதுவாக ஒரு நட்பு, உறவு அல்லது ஒரு வேலை இணைப்பிற்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமற்ற தகவல்தொடர்புகளின் ஐந்து ஆரம்ப அறிகுறிகள்- மற்றும் அதிக பதற்றத்தை உருவாக்காமல் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான எளிய வழிகள்.

Read More

லீட்ஸ்: உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. “உலகின் தலைசிறந்த பவுலர் பும்ரா. அவரது பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு கடினமாக உள்ளது. எந்த மாதிரியான சூழலிலும் தனது ஆட்டத்திறன் மூலம் அவர் சிறந்து விளங்குகிறார். இந்தியாவின் தட்டையான ஆடுகளம் (பிளாட் பிட்ச்) மற்றும் இங்கிலாந்து என எங்கும் அவரது பந்து வீச்சு தரமாக உள்ளது. அவர் வீசும் பந்து இரண்டு பக்கமும் இங்கு ஸ்விங் ஆகிறது. இருப்பினும் நாங்கள் சேதாரத்தை குறைத்துள்ளோம். இல்லையென்றால் நிலைமை மோசமாகி இருக்கும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவரைப் போன்ற ஒருவரை நீங்கள் அப்படியே பந்து வீச செய்து கடந்துவிட முடியாது. அவரை அழுத்தத்தில் வைக்க முயற்சிக்கலாம்.…

Read More

விக்ரம் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சேது’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சேது’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்தது. தற்போது இப்படத்தினை புதிய பொலிவுடன் மாற்றி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு. ‘சேது’ படத்தினை தரம் உயர்த்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10-ம் தேதி இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், இதனை விமரிசையாக கொண்டாட விக்ரம் ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். கந்தசாமி தயாரிப்பில் பாலா இயக்குநராக அறிமுகமான படம் ‘சேது’. இதில் விக்ரம், சிவகுமார், அபிதா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்திருந்தார்கள். இப்படம்…

Read More

உடுமலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் எந்த ஒரு மருத்துவ அமைப்பும் கள் அங்கீகரிக்கப்பட்ட உணவு என்று அறிவிக்கவில்லை. ஆனால், கள் உணவுப்பொருள் என்று தொடர்ச்சியாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சட்டத்தை மீறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மரத்தில் ஏறி கள் இறக்கி, மக்களுக்கு பருக கொடுத்தார். பொள்ளாச்சியில் கள் இறக்கிய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், சீமான் மீது மட்டும் ஏன் வழக்கு பதியவில்லை?. கள் பிரச்சாரம் குறித்து தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அப்போது புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி உடனிருந்தார்.

Read More

கடன்: Instagram/@drjamesdinic எடை இழப்பு என்பது மன உறுதி, கலோரிகள் மற்றும் நிரந்தர பசி ஆகியவற்றின் போராக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மருந்தாளுநரும் இருதய ஆராய்ச்சி விஞ்ஞானியுமான டாக்டர் ஜேம்ஸ் டினிகோலண்டோனியோ இந்த பாரம்பரிய முறையை நீக்குவதன் மூலம் புகழ் பெற்றுள்ளார். வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பில் நிபுணர், அவர் “உடல் பருமன் பிழைத்திருத்தத்தின்” ஆசிரியராகவும் உள்ளார், இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, உணவு அடிமையாதல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் எவ்வாறு எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றன மற்றும் அதைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்கிறது. அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் இருதய ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளில் ஊட்டச்சத்தின் பங்கு குறித்து நிபுணர்.ஒரு பிரபலமான சமூக ஊடக இடுகையில், டாக்டர் டினிகோலண்டோனியோ எடை இழப்புக்கான எளிய ஆனால் பயனுள்ள வழிமுறையை விளக்கினார்: உங்களை முழுமையாக வைத்திருக்கும் உணவை உட்கொள்ளுங்கள்.அவரைப் பொறுத்தவரை, நிலையான எடை இழப்புக்கு பட்டினி…

Read More

தேர்தலில் கேட்கும் தொகுதிகள் கிடைக்காவிட்டால் திமுக கூட்டணியை விட்டு செல்ல மாட்டோம். அதே நேரத்தில் குறைந்தபட்ச சுய மரியாதை யை எதிர்பார்ப்போம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி(இன்று) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மண்டல ரீதியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பொதுச் செயலாளர் வைகோ வெளியிடுகிறார். பட்டம், பதவிகளு க்கு அப்பாற்பட்டு செயல்படுபவர்கள் மதிமுகவினர். நான் மத்திய அமைச்சராகும் சூழல் தற்போது இல்லை. எதிர்காலம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. கூட்டணியில் எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் ஒரு பொதுநோக்குடன் நாங்கள் கூட்டணியில் உள்ளோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 12 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால் தான், மதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எனவே, கூடுதல் எண்ணிக்கை யில் சீட் கேட்க வேண்டும் என்கிற…

Read More