Author: admin

வாஷிங்டன்: கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஒரு போர் விமானத்தில் 40,000 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கி.மீ. வரை தரையிறங்காமல் பறக்கும். இது மணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும். அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர்…

Read More

மதுரை: தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடக் கூடாது என்று ஒரு கோஷ்டி கருதியது. அறநிலையத் துறை அமைச்சர் விரதம் இருக்கிறார் என்ற தகவலும் வந்தது. இந்த மாநாடுக்கு விளம்பரம் செய்வது பற்றி யோசித்துபோது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வைகோ, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மாநாடு பற்றி பேசியே, அதிக விளம்பரம் தேடிக் கொடுத்தனர். இதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறோம். இந்த மாநாடு எதற்கு, ஆந்திராவில் இருந்து துணை முதல்வர் எதற்காக வரவேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார். அவர் ரூ.400 கோடியில் மாநாடு நடத்தப் போகிறோம் என்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என சொல்ல வேண்டும். கோயில் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறதா என…

Read More

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், எல்.முருகன் கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் முருக பக்தர்கள் மாநாடு. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி பாடல்கள் பாடும்போது, முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் வீட்டில் கந்த சஷ்டி பாட வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரிய ஆன்மிக மாநாடு இது. கட்சி மாநாடு அல்ல. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவது, திருமாவளவன் போன்றோருக்குப் பிடிக்கவில்லை. மற்ற மதங்களில் இதுபோன்ற மாநாடு நடத்தினால், மனித சங்கிலிப் போராட்டம் நடத்தும் துணிவு அவருக்கு வருமா? முருக பக்தர்கள் ஒருங்கிணைவதை தமிழக அரசு ஏன் தடுக்கிறது? காவல் துறையினர் இந்த மாநாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.…

Read More

குழந்தைகளுக்கு அன்பும் கவனமும் மட்டுமே தேவை; பெரியவர்களுக்கு இடையிலான உறவு அவர்களின் கவலை அல்ல.வளர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் நடத்தும் விதம்-கருணை, கிண்டல் அல்லது ம silence னத்துடன்-குழந்தையின் எதிர்கால உறவுகளுக்கு ஒரு அமைதியான வழிகாட்டி புத்தகம். மன்னிப்பு எவ்வாறு செய்யப்படுகிறது, எவ்வாறு கருத்து வேறுபாடுகள் கையாளப்படுகின்றன, பாசம் சுதந்திரமாகக் காட்டப்படுகிறதா என்பதை அவர்கள் கவனிக்கிறார்கள்.இந்த தருணங்கள் குழந்தைகள் தங்கள் நண்பர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் ஒரு நாள், தங்கள் கூட்டாளர்களை எவ்வாறு நடத்துவார்கள் என்பதை வடிவமைக்கிறார்கள். மரியாதை, பச்சாத்தாபம் மற்றும் உணர்ச்சி பாதுகாப்பு ஆகியவை பெரும்பாலும் இந்த அன்றாட அவதானிப்புகளுடன் தொடங்குகின்றன.

Read More

சென்னை: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளில் பங்களிப்பாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் பாராட்டு விழா சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட முப்படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகளை பார்வையிட்டார். தொடர்ந்து தென்னிந்தியப் பகுதிகளின் ராணுவ லெப்டினட் ஜென்ரல் கரண்பீர் சிங் பரார், இந்திய விமான படை ஆவடி மையத்தின் கமான்டர் பிரதீப் சர்மா, இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டலத்தின் கமான்டர் தர்விந்தர் சிங் சைனி உட்பட 10 பேருக்கு ஆளுநர் ரவி விருதுகள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: வரலாற்றிலேயே மிக குறுகிய காலத்தில் இலக்கை துல்லியமாக எட்டி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டு,…

Read More

மூட்டு வலி முதல் இதய பிரச்சினைகள் வரை பல நாட்பட்ட நோய்களுக்குப் பின்னால் உள்ள கண்ணுக்கு தெரியாத நெருப்பு வீக்கம்.நீல தேயிலை ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்தவை, அவை வீக்கத்தைக் குறைக்க உதவும். இது ஒரு உணர்வு-நல்ல காலை சடங்கை விட அதிகமாக ஆக்குகிறது. காலப்போக்கில், அதன் அன்றாட பயன்பாடு நீண்டகால ஆரோக்கியத்தில் ஒரு பாதுகாப்புப் பாத்திரத்தை வகிக்கக்கூடும், குறிப்பாக உட்கார்ந்த வேலைகள் அல்லது ஒழுங்கற்ற உணவு முறைகள் உள்ளவர்களுக்கு.(இந்த கட்டுரையில் பகிரப்பட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்கானது மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை.)​

Read More

சென்னை: பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தேர்வு துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று (ஜூன் 23) மதியம் வெளியிடப்படுகிறது. தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் இந்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரம் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி விழாவை கொண்டாடினர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள், நீலாங்கரையில் உள்ள சக்தி முத்துமாரியம்மன் கோயில், தேவாலயம் மற்றும் மசூதியில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை, துவா செய்து வழிபட்டனர். சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் நேற்று பிறந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பேபி கிட், புத்தாடைகளை வழங்கினர். பிறந்தநாள் கொண்டாடிய விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்:…

Read More

இந்த பின்னடைவுகள் அந்த நபரின் மீது உணர்ச்சிவசப்படக்கூடும் என்று சத்குரு வீடியோவில் எச்சரித்தார், மேலும் கடந்தகால வாழ்க்கையை நினைவுபடுத்துவது உணர்ச்சிபூர்வமான வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். ஒரு வாழ்நாளின் நினைவுகள் பலருக்கு கையாள மிகவும் கடினம் என்று அவர் குறிப்பிட்டார், மேலும் கடந்த கால நினைவுகளுடன் அவர்களை முதலிடம் பெறுவது உணர்ச்சி ரீதியான சிக்கலையும், அதிக சுமை கொண்ட மனதையும், சிக்கலான உணர்ச்சிகளையும், விருப்பங்களையும் மட்டுமே கொண்டு வரும். தற்போதைய வாழ்க்கையில் உங்களுடன் தொடர்புடைய ஒருவர், உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர், கடந்த வாழ்க்கையில் வேறொருவருடன் நெருக்கமாக இருந்தால், அது உங்கள் மனதிலும் இதயத்திலும் நிறைய கலவையான உணர்ச்சிகளைக் கொண்டுவரும் என்றும், உங்களை நோக்கி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் எல்லா நினைவுகளிலும் நீங்கள் சரியாக உணரக்கூடாது என்றும் அவர் அதை வெறுமனே விளக்கினார்.

Read More

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1-ம் தேதி இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளதாவது: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் ஜூலை 1-ம் தேதி ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் இருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. கடல் மற்றும் நிலத்தை குறிவைக்கும் நீண்ட தூர கப்பல் ஏவுகணையான பிரம்மோஸ் உட்பட 26 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு இந்த கப்பலில் உருவாக்கப்பட்டுள்ளது. 125 மீட்டர் நீளம், 3,900 டன் எடையுடன் இந்த போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்களின் கலவையை கொண்ட இந்த போர்க்கப்பல் மேற்கு கடற்படைப் பிரிவில் போர்வாளாக திகழும். ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறன்களின் அடையாளமாக மட்டும் இல்லாமல், இந்தியா-ரஷ்யா கூட்டாண்மையின் வலிமையை எடுத்துக்காட்டும். கடந்த இருபது ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையில்…

Read More