Author: admin

ஈரான் குண்டுவெடிப்பு குறித்த லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப்பின் துறையின் சர்ச்சைக்குரிய செய்தி. (எக்ஸ்/ லா கவுண்டி ஷெரிப்ஸ்) லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை (எல்ஏஎஸ்டி) தீக்குளித்துள்ளது, இது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு செய்தியை வெளியிட்ட பின்னர் “ஈரானில் சமீபத்திய அமெரிக்க குண்டுவெடிப்புகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு” இரங்கல் தெரிவிக்கிறது. இந்த இடுகை விரைவாக வைரலாகி, பொதுமக்களிடமிருந்து விரைவான பின்னடைவைத் தூண்டியது மற்றும் வர்ணனையாளர்களைத் தூண்டியது, அவர்கள் திணைக்களத்தை முக்கியமான புவிசார் அரசியல் நீரில் மூழ்கடித்ததாக விமர்சித்தனர்.இப்போது நீக்கப்பட்ட இடுகை படித்தது:”ஈரானில் அண்மையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் வெளியேறுகின்றன. இந்த சோகமான நிகழ்வு வெளிநாடுகளில் நிகழ்ந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை எங்கள் உள்ளூர், மாநில மற்றும் கூட்டாட்சி கூட்டாளர்களுடன் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.””லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டிக்கு அறியப்பட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை” என்று LA இல் வசிப்பவர்களுக்கு இது மேலும்…

Read More

போர் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து போப் லியோ கூறியதாக வாடிகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மத்திய கிழக்கில் இருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று, முன் எப்போதையும் விட, மனிதகுலம் அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பொறுப்புணர்வும் பகுத்தறிவும் தேவைப்படும் ஒரு கூக்குரல். மேலும் இது ஆயுதங்களின் இரைச்சல் அல்லது மோதலைத் தூண்டும் சொற்பொழிவுகளால் மூழ்கடிக்கப்படக் கூடாது. போதுமான மனிதாபிமான உதவிக்கான தேவை இன்னும் அவசரமாகி வரும் நிலையில், குறிப்பாக காசா மற்றும் பிற பிரதேசங்களில் மக்களின் அன்றாட துன்பங்கள் மறக்கப்படும் அபாயம் உள்ளது. சர்வதேச சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் போரின் துயரத்தை தடுக்கும் தார்மிகப் பொறுப்பைக் கொண்டுள்ளனர். மனித கண்ணியம் ஆபத்தில் இருக்கும்போது அதைவிட பெரிய பிரச்சினை எதுவும் இருக்க முடியாது. போர் மூலம் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது.…

Read More

திருத்தணி: ஆனி கிருத்திகையை ஒட்டி நேற்று திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, முருகனை வணங்கி செல்கின்றனர். இதில், கிருத்திகை நாட்கள், வார விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், கிருத்திகை மற்றும் வார விடுமுறை நாளான நேற்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே அதிகளவிலான பக்தர்கள் கோயிலில் குவிய தொடங்கினர். ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள், பொதுதரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வழிகளில், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயிலுக்கு செல்லும் மலை பாதையில்,…

Read More

பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’. அரவிந்தன் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள் ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் , இப்படத்தை ஜூன் 27 -ம் தேதி வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பிருத்விராஜ் ராமலிங்கம் பேசும்போது, “ஒரு படம் செய்வதாக இருந்து திடீரென அது ரத்து ஆனபோது, கையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் அரவிந்த், ‘படம் பண்ணலாமா?’ என்றார். அந்த நம்பிக்கையில் ஆரம்பமானது ‘குட் டே’. அன்று நாங்கள் பேசிய ஓர் உரையாடல் தான் இந்த படத்துக்கு விதையாக அமைந்தது. பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையால், உருவானது தான் இந்தப்படம். சிலர் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார்கள், சிலர் சம்பளம் வேண்டாமென…

Read More

ஈரோடு: துரை வைகோவுக்கு மத்​திய இணை அமைச்​சர் பதவி தரு​வது தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடக்​க​வில்லை என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கடவுளின் பெய​ரால் ஒரு கட்சி மாநாடு நடத்​து​வது தவறானது. தமிழகத்​தில் அரசி​யல் கட்​சிகள், கடவுள் பெய​ரால் மாநாடு நடத்​தி​யது இல்​லை. முரு​கன் மாநாட்​டுக்​குப் பின்​னால், பாஜக, ஆர்​எஸ்​எஸ், இந்​துத்​துவா சக்​தி​கள் உள்​ளன. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்​கியை உரு​வாக்க முடி​யாது. மதி​முக​வுக்கு 8 எம்​எல்​ஏக்​கள் கிடைத்​தால் தேர்​தல் ஆணைய அங்​கீ​காரம் கிடைக்​கும். எனவே, திமுக​விடம் அதற்​கேற்ப கூடு​தல் தொகு​தி​களை கேட்​டுப் பெறு​வோம். தமிழகத்​தில் கள் விற்​பனை கடைகள் கூடாது. தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை. திமுக எடுக்​கும் முடிவை ஆதரிப்​போம். திமுக கூட்​டணி தொடர்​பாக நயி​னார் நாகேந்​திரன் பொறுப்​பற்ற முறை​யில் பேசிக்​கொண்டு இருக்​கிறார். துரை வைகோவுக்கு மத்​திய இணை அமைச்​சர் பதவி…

Read More

உயர் இரத்த அழுத்தம் உங்கள் இரத்த நாளங்களின் சுவர்களில் கூடுதல் சக்தியை வைக்கிறது. காலப்போக்கில், இந்த அழுத்தம் உங்கள் சிறுநீரகங்களுக்கு வழிவகுக்கும் தமனிகள் குறுகவோ, கடினப்படுத்தவோ அல்லது கடினமாகவோ இருக்கும். இந்த நிலை சிறுநீரக தமனி ஸ்டெனோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரத்த நாளங்கள் குறுகும்போது, ​​குறைவான இரத்தம் சிறுநீரகங்களுக்குள் பாய்கிறது. போதுமான இரத்தமும் ஆக்ஸிஜனும் இல்லாமல், சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய முடியாது.சிறுநீரக தமனிகளுக்கு இந்த சேதம் இரத்தத்திலிருந்து கழிவுகளை வடிகட்டும் திறனைக் குறைக்கிறது. இது சிறுநீரகங்களை திரவ சமநிலை மற்றும் இரத்த அழுத்தம் போன்ற முக்கியமான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் குறைவாக ஆக்குகிறது. இது ஒரு தீங்கு விளைவிக்கும் சுழற்சியை உருவாக்குகிறது, அங்கு சேதமடைந்த சிறுநீரகங்கள் அதிக இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.

Read More

கொல்கத்தா: 2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டி: 2027-ம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டி நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும். ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது. அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியா, இன்னும் 27 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அதன்படி பார்த்தால் இருவரும் அடுத்த 2 ஆண்டுகளில் தலா 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே…

Read More

வாஷிங்டன்: ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார். ஈரான் மீது அமெரிக்க நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஷெக்சேத் பென்டகனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் அணு சக்தி திட்டம் நாசமானது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என பெயரிடப்பட்டது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபர்தோ ஆகிய இடங்களை குறிவைத்து தாக்கினோம். இந்த ஒருங்கிணைந்த தாக்குதலில் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் உட்பட 125-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பாறையில் ஊடுருவி தாக்கும் 14 ஜிபிஐ-57 குண்டுகள் மற்றும் பெர்சியன் வளைகுடா மற்றும் அரபிக் கடலில்…

Read More

மதுரை: கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: குன்று இருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பார். ‘முருகா முருகா’ என்று சொன்னால் உருகாதார் யாரும் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகன் என்று ஏன் சொல்கிறோம். முருகா என்பதில் வல்லினம், மெல்லினம், இடையினம் இருக்கிறது. சொக்கநாதர் பூமியான மதுரையில் கூடியிருக்கிறோம். தூங்கா நகரமான மதுரையில் நீதி கிடைத்திருக்கிறது. தமிழக அரசிடமிருந்து நீதி கிடைத்ததோ இல்லையோ நீதிமன்றம் மூலம் நமக்கு நீதி கிடைத்துள்ளது. இந்த மாநாட்டைப் பார்த்து பலர் மலைத்துப் போயிருக்கின்றனர். பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். அந்த தடைகளை கடந்து மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் நம்மிடையே ஒரே கலாச்சாரம், பண்பாடு இருக்கிறது. அத்தகைய கலாச்சாரத்தைப் பாதுகாக்கத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த அளவுக்குப்…

Read More

டாக்டர் ஜெர்மி லண்டன் ஆரோக்கியமான இதயத்திற்கான ஏரோபிக் பயிற்சிகளை பரிந்துரைக்கிறது. வழக்கமான உடல் செயல்பாடு இதய தசையை பலப்படுத்துகிறது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் ஆகியவை நன்மை பயக்கும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வாரத்திற்கு 150 நிமிட மிதமான-தீவிரம் செயல்பாட்டை பரிந்துரைக்கிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான உங்கள் பலவீனமான சுகாதார பழக்கத்தை அடையாளம் கண்டு குறிவைக்கவும். உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் முக்கியமானது. ஆம், உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும்! நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் இதய ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஒருவர் இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்? சில வாழ்க்கை முறை மாற்றங்கள் இதயத்தை நல்ல நிலையில் பராமரிக்க உதவும், அவற்றில் ஒன்று உடற்பயிற்சி. இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சி எது?அமெரிக்காவை தளமாகக் கொண்ட 25 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவத்துடன் போர்டு…

Read More