காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்குப் குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தையைக் கையில் வாங்கும் திவ்யா, அதை தனது குழந்தை இல்லை என்கிறார். அந்த குழந்தைக்கு என்ன ஆனது, திவ்யாவிடம் இருக்கும் குழந்தை யாருடையது என்பதை சொல்கிறது இந்த ‘டிஎன்ஏ’. சமூகத்தில் இப்போது நடக்கிற குழந்தை கடத்தலின் பின்னணியில் அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் படத்தைத் தந்திருக்கிறார், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். அடுத்தது என்ன என்கிற பதற்றத்தையும் குற்றப் பின்னணியின் வலையையும் ஒன்றைத் தொட்டு ஒன்று எனச் செல்லும் திரைக்கதையும் கதையோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. காதல் தோல்வி நாயகன், அவரை வெறுக்கும் குடும்பம், உதவும் நண்பர்கள் என்கிற பழகிய காட்சிகளில், படம் தொடங்கினாலும் மனநோய் பிரச்சினை கொண்ட…
Author: admin
சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.488 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்க உள்ளார் என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு மற்றும் கட்டுமான பணிகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.450 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இங்கு 2,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான முதியோர் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனர். இந்த வளாகத்தில் சுமார்…
கள்நீங்கள் ஒரு விமானத்திற்குச் சென்று, என்ன அணிய வேண்டும் என்று யோசிக்கிறீர்கள் – கம்ஃபி ஹூடி? அழகான ரோம்பர்? ஃபிளிப்-ஃப்ளாப்ஸ்? ஆறு ஆண்டுகள் வானத்தில் கழித்த ஒரு விமான உதவியாளரின் கூற்றுப்படி, தயவுசெய்து வேண்டாம். செர் (tiktok இல் @cherdallas) சமீபத்தில் ஐந்து விஷயங்களில் தேநீர் கொட்டியதற்காக வைரலாகியது, நீங்கள் சங்கடமான, சுகாதாரமற்ற, அல்லது உறைபனி நடுப்பகுதியில் உறைபனி செய்ய முயற்சிக்காவிட்டால் நீங்கள் ஒருபோதும் விமானத்தில் அணியக்கூடாது.அதை உடைப்போம்.ராம்பர்ஸ் & ஜம்ப்சூட்டுகள் குளியலறை கனவுகள்அழகாக இருக்கிறது, இல்லையா? ஒவ்வொரு முறையும் நீங்கள் சிறுநீர் கழிக்க வேண்டிய ஒவ்வொரு முறையும் நீங்கள் முற்றிலும் அவிழ்த்து விடுவீர்கள் என்பதை நீங்கள் உணரும்போது அல்ல. செர் அவர்களை “இரட்டை இல்லை-இல்லை” என்று அழைக்கிறார். அவர் தி மிரர் யுகேவிடம் கூறினார்: “நான் ஒருபோதும் ஒரு ரோம்பரை அணிய மாட்டேன், நீங்கள் குளியலறையில் செல்கிறீர்கள் என்றால், அந்த விஷயம் தரையில் முடிவடையும், இது சிறுநீர் கழிப்பதன் மூலம்…
பியாங்யாங்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், “மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செயல்களால் தற்போது மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள். நாங்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன்களை வன்முறையால் நசுக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரை உருவாக்கும் செயல்களுக்கு எதிராக நீதியான சர்வதேச சமூகம் ஒருமனதாக கண்டனம் மற்றும் நிராகரிப்பு குரலை எழுப்ப வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானும் வட கொரியாவும் தங்களுக்குள் பல வகைகளில் நட்புறவை பேணி…
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது. இதே கதையை 1961-ம் ஆண்டு ‘சாசுரல்’ என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இதில், ராஜேந்திர குமாரும் சரோஜா தேவியும் நடித்தனர். சரோஜாதேவிக்கு இது 2-வது இந்திப் படம். பின்னர், இயக்குநர் எஸ்.கே.ஏ.சாரி, ‘மனே அளியா’ என்ற பெயரில் 1964-ம் ஆண்டு கன்னடத்தில் ரீமேக் செய்தார். கல்யாண் குமார், ஜெயலலிதா நடித்தனர். அங்கும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, 1966-ம் ஆண்டு மலையாளத்தில் ‘களிதோழன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. எம்.கிருஷ்ணன் நாயர் இயக்க, பிரேம் நஸிர், ஷீலா நடித்தனர். ஹிட். இதையடுத்து தமிழில் ‘மாடி வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். ரவிச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஜோடியாக நடித்தனர். கன்னட படத்தை இயக்கிய எஸ்.கே.ஏ.சாரி…
சென்னை: ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார். அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் திருநர் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இதையடுத்து லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘வாழ்த்துகள் டாக்டர் ஜென்சி. உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்…
முதல் தேதி ஒரு சிறிய மேடை செயல்திறன் போன்றது. இருவரும் தங்களது சிறந்த பாதத்தை முன்னோக்கி வைக்க முயற்சிக்கிறார்கள் -நன்றாக ஆடை அணிந்து, தங்கள் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுப்பது, அழகைத் திருப்புவது. நகைச்சுவைகள், உணவு மற்றும் தனிப்பட்ட கதைகளுக்கு இடையில், நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்: இது உண்மையானதாக இருக்க முடியுமா?ஆனால் அந்த புதிய தன்மையின் சுழற்சியில், நுட்பமான சிவப்புக் கொடிகளை இழப்பது எளிது -பாதிப்பில்லாததாகத் தோன்றும் சிறிய விஷயங்கள் ஆனால் ஆழமான ஒன்றைக் குறிக்கின்றன. குறிப்பாக வேதியியல் வலுவாக உணரும்போது, நம் குடல் சுட்டிக்காட்ட முயற்சிக்கும் அறிகுறிகளை புறக்கணிக்க நம் இதயங்கள் பெரும்பாலும் நம்மை நம்ப வைக்கின்றன.நீங்கள் வேறு வழியைப் பார்க்க ஆசைப்பட்டாலும், நீங்கள் புறக்கணிக்கக் கூடாத சில சிவப்புக் கொடிகள் இங்கே.அவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்முதல் தேதியில் உங்களைப் பற்றி பேசுவது இயற்கையானது. உங்கள் தேதி முழு உரையாடலையும் ஆதிக்கம் செலுத்தினால், உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கவில்லை, அல்லது நீங்கள்…
மதுரை: சரியான புரிதல், தெளிவான திட்டமிடுதல், தொடர்ச்சியான உழைப்பு இருந்தால் எந்தத் தேர்வாக இருந்தாலும் வெற்றி வசப்படும் என மதுரையில் நேற்று நடந்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ் நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கான அடிப் படைத் தேவையான கல்வித் தகுதி என்ன?, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்?, அதிகம் செலவாகுமா? என்ற ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். இவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கத்தில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை – உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி, மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன்…
டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட கிளர்ச்சிப் படையினர் கடந்த டிசம்பரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதன் பின்னர் இப்போதுதான் டமாஸ்கஸ் நகரில் முதல்முறையாக இந்த வகையிலான தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு அங்கு கிளர்ச்சிப் படையினரின் புரட்சி தொடங்கியது. தற்போது சிரியாவில் ஆட்சியாளர்களின் வசம் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் அது பாதுகாப்பு விவகாரம்தான். அங்குள்ள சிறுபான்மையின மக்களை அரசு பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. டமாஸ்கஸ் நகரில்…
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘பீனிக்ஸ்’. வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப்படம் ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது பாடல், ‘இந்தா வாங்கிக்கோ’ நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் ஜூலை 4 ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
