Author: admin

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க அன்றாட அடிப்படையில் இரத்த அழுத்தத்தை அளவிடுவது மிகவும் முக்கியமானது. இரத்த அழுத்தம் நாள் முழுவதும் மாறுபடும், மற்றும் உணவு, உடற்பயிற்சி, உட்கார்ந்த தோரணை போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகிறது, தினமும் சராசரியாக வாசிப்பை எடுப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும், அதை சரிசெய்ய போதுமான நடவடிக்கைகளை எடுக்கலாம். இருப்பினும், உங்கள் இரத்த அழுத்தத்தை எடுக்கும்போது உங்கள் கையை வைத்திருக்கும் விதம் வாசிப்பை மாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் கையை தவறாக வைத்திருப்பது பொய்யான உயர் அல்லது குறைந்த எண்ணிக்கையை அளிக்கும், இது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இங்கே ஏன் …இது எவ்வாறு முக்கியமானதுஇரத்த அழுத்தம் உங்கள் தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் சக்தியைக் காட்டுகிறது. உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உங்கள்…

Read More

லக்னோ: பள்ளியில் சேர விரும்பிய ஏழைச் சிறுமிக்கு அவர் விரும்பிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவ்வப்போது ஜனதா தர்ஷன் என்ற பெயரில் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில், முதல்வர் யோகியை ஏழைச் சிறுமி வஷி என்பவர் சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டார். அப்போது அவரது கோரிக்கை என்ன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிவுடன் கேட்டார். அதற்கு தான் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் வஷி கேட்டுக்கொண்டார். இதையடுத்து சிறுமி எந்த வகுப்பில் சேர விரும்புகிறாரோ, அந்த வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதுகுறித்து சிறுமி வஷி கூறும்போது, “நான் மொராதாபாத்திலிருந்து லக்னோ வந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தேன். எனக்கு பிஸ்கட்டும், சாக்லேட்டும் கொடுத்து முதல்வர்…

Read More

ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டி 5-ம் நாள் வரை வந்து த்ரில் போட்டியாக அமைந்திருப்பது டெஸ்ட் போட்டிக்கான நல்ல ஊக்குவிப்பாகும். ஆனால், இந்திய அணி இந்தப் போட்டியைத் தோற்கும் என்ற நிலையே இப்போதைக்கு ஹெட்டிங்லி பிட்ச் பற்றிய கணிப்பில் தெரிய வருகிறது. மேலும் 4-வது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய இலக்கானாலும் விரட்டுவோம் என்பதில் இங்கிலாந்தின் புதிய பாஸ்பால் அணுகுமுறை உத்தரவாதமாக உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சும் பும்ராவைத் தாண்டி எந்த ஒரு சாராம்சமும் இல்லாமல் சொத்தையாக உள்ளது. நல்ல துணை ஸ்பின்னர் இல்லை. ஜடேஜா பவுலிங்கை மறந்து விட்டார். கொஞ்சம் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மறந்து வருகிறார். அவரைத் தூக்கி விட்டு வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுப்பது நல்லது. தொடர்ந்து குல்தீப் யாதவும் ஒழிக்கப்பட்டு வருகிறார். பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், கருண் நாயர் மாயை உடைந்து போயுள்ளது. இவர்களுக்குப் பதிலாக ஸ்ரேயஸ் அய்யர், சர்பராஸ் கான் வந்தால் அணி உருப்படும். இல்லையெனில் இதே…

Read More

எனது முதல் தவறான முடிவு ‘கேம் சேஞ்சர்’ படம் தான் என்று தயாரிப்பாளர் தில் ராஜு வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நிதின் நடித்துள்ள ‘தம்முடு’ படத்தினை தயாரித்துள்ளார் தில் ராஜு. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அளித்த பேட்டியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் செய்த தவறு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் தில் ராஜு. ‘கேம் சேஞ்சர்’ தோல்வி குறித்து தில் ராஜு, “எனது திரையுலக வாழ்வில், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களுடன் ஒருபோதும் பணியாற்றியதில்லை. ‘கேம் சேஞ்சர்’ படம் தான் எனது முதல் தவறான முடிவு. அப்படத்தின் ஒப்பந்தத்தில் எனது கருத்துகளை தெளிவாக குறிப்பிட்டு தயாரிப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. அது எனது தவறு. அப்படத்தின் எடிட்டர் கூறியிருப்பது போன்று, படத்தின் காட்சிகள் ஏழரை மணி நேரம் இருந்தது உண்மை தான். ஒரு படத்தின் விஷயங்கள் சரியாக நடக்காதபோது,…

Read More

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கூடிய நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டும் பணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிஐடி குடியிருப்பு முதல் தெருவில், 50 ஆயிரம் பேர் பயன்பெறும் விதமாக ரூ.3.01 கோடியில் 6.25 எம்எல்டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் (வார்டு 116) ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கட்டப்படவுள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இத்துடன் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ் 114-வது…

Read More

പ്രതീകാത്മക, அமெரிக்காவில் ஈரானின் ஏவுகணை வேலைநிறுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக பல மத்திய கிழக்கு நாடுகள் தற்காலிகமாக தங்கள் வான்வெளியை மூடிய பின்னர் விமானங்களை ரத்துசெய்து விமானங்களை மாற்றியமைக்க விமான நிறுவனங்கள் விரைந்தன தோஹாவில் உள்ள அல் உடீடியில் இராணுவத் தளம். முக்கிய ஈரானிய அணுசக்தி வசதிகள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தங்களைத் தொடங்கிய பின்னர் இந்த தாக்குதல் ஏற்பட்டது. ஈரானின் பதிலடி கொடுப்பதில் இருந்து எந்த உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என்றாலும், வளர்ந்து வரும் மோதல் உலகளாவிய விமான பயணத்திற்கு புதிய சிரமத்தை அதிகரித்துள்ளது.இதன் தாக்கம் இப்போது மத்திய கிழக்குக்கு அப்பால் விரிவடைந்து, முக்கிய சர்வதேச வழிகளை சீர்குலைக்கிறது. ஐரோப்பாவையும் கிழக்கு வட அமெரிக்காவையும் ஒரு காலத்தில் இந்திய துணைக் கண்டத்துடன் இணைத்த விமானப் பாதைகள் பெருகிய முறையில் தடைசெய்யப்பட்டு வருகின்றன. திங்களன்று, ஏர் இந்தியா தனது விமானங்களை அந்த பிராந்தியங்களுக்கும் அங்கிருந்து இடைநிறுத்துவதாக அறிவித்தது, அதிகரிக்கும் பதட்டங்கள் காரணமாக வரையறுக்கப்பட்ட ரூட்டிங்…

Read More

புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 4 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் 12-வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் கத்தார் உட்பட சில மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. எனவே அப்பகுதியில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கு செல்லும் ஏர் இந்தியாவின் விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி வழியாகவே பறக்கின்றன. இந்த நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இப்பகுதிக்கான…

Read More

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகளுக்கான கட்டிடங்களை கட்டும் திமுக அரசு, அங்கு புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதில்லை. வேலூர் மாநகரில் அமைந்துள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் நாளை திறக்க உள்ளார். ஆனால், இந்த மருத்துவமனைக்காக புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த மருத்துவமனை மட்டுமல்லாமல், புதிதாக மேம்படுத்தி கட்டப்பட்ட சேலம், திருநெல்வேலி, கிண்டி போன்ற அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. உரிய ஊதியம் மற்றும் பதவி உயர்வை தராமல் அரசு மருத்துவர்களை திமுக அரசு புறக்கணிக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம் என…

Read More

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 24) பவுனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,240-க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.73,840-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 24) கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம்…

Read More

நம்பிக்கை நீங்கள் பிறந்த ஒன்று அல்ல – இது காலப்போக்கில் நீங்கள் உருவாக்கும் ஒன்று. இன்னும் சில உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More