சேலம், தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டங்களை கடந்த 19-ம் தேதி கூட்டினார் அன்புமணி ராமதாஸ். அதற்கு முந்தைய நாளே, பாமக எம்எல்ஏ-க்களான கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணியும், அருளும் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். இவர்கள் இருவருமே மருத்துவர் அய்யாவுக்கு அணுக்கமாக இருப்பவர்கள் என்பதால் இந்த ‘நெஞ்சுவலி’ விவகாரமும் விவாதப் பொருளானது. அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அதேநாளில் இவர்கள் இருவரையும் மருத்துவர் ராமதாஸும் தைலாபுரத்துக்கு அழைத்திருந்தாராம். எந்தப் பக்கம் போனாலும் பழி வந்து சேரும் என்பதாலேயே இருவரும் மருத்துவமனை பக்கம் போய்விட்டதாக பாமக-வினரே சொல்கிறார்கள். ஜி.கே.மணியும் அருளும் பொதுக்குழு கூட்டத்துக்கு வராத போதும் அவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற வேண்டி சேலம் பொதுக்குழுவில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார் அன்புமணி. அதேசமயம், தருமபுரி பொதுக்குழுவில் பேசிய முன்னாள் எம்எல்ஏ-வான வேலுச்சாமி, “ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றை பெற்றுத் தந்தது நீங்கள் (மருத்துவர்…
Author: admin
அவானின் பார்ட், வில்லியம் ஷேக்ஸ்பியர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்திருக்கலாம், ஆனால் அவரது படைப்புகள் இன்னும் பரவலாக வாசிக்கப்படுகின்றன. உண்மையான அன்பை வரையறுக்கும் அவரது காலமற்ற மேற்கோள்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். இப்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்று, மற்றொரு வெளிப்படுத்தப்படாத இடத்துக்கு சென்றுள்ளார். அவர் இவ்வாறு அடிக்கடி ரகசியப் பயணம் செல்வது ஏன்? அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு அவரை கட்டாயப்படுத்துவது எது? எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் மக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி பஹ்ரைன் சென்றுள்ள சமூக ஊடகங்கள் ஊகித்திருந்த நிலையில் அவர் பஹ்ரைன் வழியாக லண்டன் சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், “பிரதமர் அலுவலகம் வழக்கம்போல, அதன் மோசமான தந்திரங்களை செய்கிறது. அதற்கு…
நடிகர் அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம், கடந்த ஏப்.10-ல் வெளியானது. இதையடுத்து ஆதிக் இயக்கத்தில் அஜித்குமார் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் இதுவரை மூன்று கார் ரேஸில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். அந்த மூன்றிலும் அவர் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐரோப்பாவில் நடைபெற உள்ள ஜிடி4 கார் ரேஸின் 3-வது சுற்றில் பங்கேற்பதற்காகத் தயாராகி வருகிறார் அஜித்குமார். இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அவர் அங்குள்ள ஸ்பா ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அங்கு மொட்டையடித்தபடி புதிய தோற்றத்தில் பயிற்சியில் கலந்து கொண்ட அவருடைய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சென்னை: காவல் நிலையம் வந்த பெண்ணை கண்ணிய குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தந்தை மற்றும் சகோதரனுக்கு எதிராக அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல், புகார் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது அந்த காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி, பிரியதர்ஷினியை கண்ணிய குறைவாக நடத்தியதாகவும், அவமரியாதை செய்ததாகவும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், பிரியதர்ஷினி புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், “காவல் நிலையங்களுக்கு வரும் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்தபோதும் அதை இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பின்பற்றவில்லை. புகார் குறித்த…
ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை வித்தியாசமான தோற்றமுடைய படங்கள், ஒன்று அல்லது உறுப்புகளுடன், கண்களை ஏமாற்றுகின்றன, எனவே அவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவற்றில் நீங்கள் முதலில் கவனிப்பது உங்கள் ஆளுமை பற்றி நிறைய டிகோட் செய்யலாம். சுவாரஸ்யமானது, இல்லையா?இந்த குறிப்பிட்ட படத்தின் முதல் பார்வையில், ஒரு நபர் யானை அல்லது கிராம காட்சியைக் கவனிக்க முடியும். நபர் முதலில் கவனிப்பதைப் பொறுத்து, அவற்றின் உண்மையான தன்மையைப் பற்றி நிறைய வெளிப்படுத்த முடியும்- குறிப்பாக அவை மிகவும் உள்ளுணர்வு அல்லது ஆழமாக கவனிக்கக்கூடியவை. இந்த சோதனையை எடுக்க, கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுக்கவும். இப்போது மேலே உள்ள படத்தை புதிய கண்களால் பார்த்து, முதலில் உங்கள் கவனத்தை ஈர்த்ததைக் கவனியுங்கள். இப்போது கீழே என்ன அர்த்தம் என்பதைப் படியுங்கள்:1. நீங்கள் முதலில் யானையை பார்த்தால், இதன் பொருள் …விவரங்களில் சிக்கிக்…
புதுடெல்லி: அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தின் துயர்மிகு அனுபவங்களை சந்தித்தோர் அதனை சமூக ஊடகங்களில் பகிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டது. அதன் 50-வது நினைவு நாளான இன்றைய தினத்தை பாஜக ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக’ ( Samvidhan Hatya Diwas ) அறிவித்துள்ளது. இதனை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர், “இந்திய ஜனநாயக வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்தும் அவசரநிலையின் 50-வது ஆண்டு நாள் இன்று. இந்திய மக்கள் இந்த நாளை ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக’ நினைவுகூர்கின்றனர். இந்த நாளில் இந்திய அரசமைப்பு வகுத்துக் கொடுத்த மதிப்பீடுகள் புறந்தள்ளப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது, அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாமான்ய மக்கள் எனப்…
சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்புக்கு நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தையும், மாணவர்கள் சராசரி மதிப்பெண்களையும் அதிகரிக்க தேவையான செயல் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகும். இதற்கான வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் மாநில, மாவட்ட, பள்ளி வாரியான செயல்திறன்கள், 2023-24-ம் ஆண்டு பொதுத்தேர்வுடன் ஒப்பீடு செய்யப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எந்தெந்த பள்ளிகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் இந்த அறிக்கை உதவியாக இருக்கும். இதையடுத்து தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் தேர்ச்சி,…
371 ரன்கள் வெற்றி இலக்கை 5-ம் நாளில் இங்கிலாந்து சேஸ் செய்து அபார வெற்றி பெற்று ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. இதில் இந்திய பவுலிங்கின் போதாமை முழுக்க முழுக்க இங்கிலாந்தினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பொறுமை காக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் . அதுவும் இந்தியா நம்பியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இல்லாமல் முடிந்தது இந்தத் தொடரே இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான அடையாளமாகத் திகழ்கிறது. அதுவும் பும்ராவை 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடவைப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் பந்து வீச்சில் நல்ல தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும், சிராஜ் அடி வாங்குவதும், பிரசித் கிருஷ்னா விக்கெட் எடுத்தாலும் ஓவருக்கு 6 ரன்கள் பக்கம் கொடுப்பதும் பெரிய கவலைகளை தருகிறது. ஜடேஜாவின் காலம் முடிந்து வருகிறது. ஷர்துல் தாக்கூரை ஒரு கேப்டனாக ஷுப்மன் கில் சரியாகப்…
நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். அல்லு அர்ஜுனின் 22- வது படமான இதை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்த சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் ‘பான் வேர்ல்டு’ படமாக இருக்கும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. அங்கு தொடர்ந்து 3 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் உள்பட வசன காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. இதை முடித்துவிட்டு விபிஎக்ஸ் காட்சிகளுக்காகப் படக்குழு அமெரிக்கா செல்ல இருக்கிறது.
