Author: admin

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, வராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலின் தெற்கு புறத்தில் மிகவும் பழமையான வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு விழாவின் முதல் நாளான நேற்று காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வராஹி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நேற்று மாலை இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று (ஜூன் 26) மஞ்சள் அலங்காரம், நாளை குங்குமம், 28-ம் தேதி சந்தனம், 29-ம் தேதி தேங்காய்ப்பூ, 30-ம் தேதி மாதுளை அலங்காரம், பஞ்சமி அபிஷேகம், ஜூலை 1-ம் தேதி நவதானியம், 2-ம் தேதி வெண்ணெய், 3-ம் தேதி கனி வகை, 4-ம் தேதி காய்கறி, 5-ம் தேதி புஷ்ப அலங்காரம் மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா…

Read More

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடி​யாக அதிகரிக்கப்பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்தது. அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியி​லிருந்து 20,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை நீர்​மட்​டம் நேற்று 112.71 அடி​யாக​வும், நீர் இருப்பு 82.31 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. அதேபோல், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று மாலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி​யாக நீர்​வரத்து உள்ளது. கேரளா, கர்​நாடகா மாநிலங்​களில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் தொடர் மழை​யால் கர்​நாட​கா​வில் உள்ள கபினி, கிருஷ்ண​ராஜ சாகர் அணை​களின் நீர்​மட்​டம் வேக​மாக உயர்ந்துவரு​கிறது. இந்​நிலை​யில், அணை​களின் பாதுகாப்பு கருதி அணைகளின் உபரி நீர் காவிரி ஆற்​றில் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதி​கரித்துள்​ள​தாக நீர்​வளத் துறை அதிகாரி​கள் தெரி​வித்​தனர்.

Read More

மதுரை: ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன் மற்றும் மகளுக்கு மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட வனத் துறையில் வனவராகப் பணிபுரிந்தவர் வறுவேல். 1982-ல் மருத்துவத் தகுதியின்மை காரணமாக இவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1998-ல் இறக்கும் வரை அவர் ஓய்வூதியம் பெற்று வந்தார். பின்னர், அவரது மனைவி மரியரோஸ் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர் 2016-ல் இறந்தார். இவர்களின் மகன்கள் ஜெரால்டு, தர்சியஸ். இவர்களில் ஜெரால்டு மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் ஜெரால்டுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி, அவரது சகோதரர் தர்சியஸ் அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பினார். நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு கடந்த பிப். 10-ம் தேதி உத்தரவிட்டார். இதற்கு எதிராக தலைமை கணக்காயர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.…

Read More

கூர்மையான பார்வைக்கு பொறுப்பான விழித்திரையின் மையப் பகுதியான மாகுலாவை AMD பாதிக்கிறது. இது மத்திய பார்வையை இழக்கச் செய்கிறது, படிப்பது, முகங்களை அங்கீகரிப்பது அல்லது விவரங்களைப் பார்ப்பது கடினம். இது பொதுவாக வயது தொடர்பானது, மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் மிகவும் பொதுவானது.எதைப் பார்க்க வேண்டும்:அலை அலையான அல்லது சிதைந்ததாக தோன்றும் நேர் கோடுகள்உங்கள் பார்வையின் மையத்தில் மங்கலான அல்லது இருண்ட புள்ளிகள்சிறந்த விவரங்களைப் பார்ப்பதில் சிரமம்சரிபார்ப்பது எப்படி:ஒரு கண் மருத்துவர் ஒரு விழித்திரைத் தேர்வு மற்றும் அம்ஸ்லர் கிரிட் போன்ற சோதனைகள் மூலம் AMD ஐக் கண்டறிய முடியும், இது கோடுகளின் கட்டத்துடன் கூடிய எளிய விளக்கப்படம். கோடுகள் அலை அலையானதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தோன்றினால், அது AMD ஐக் குறிக்கலாம். OCT போன்ற மேம்பட்ட இமேஜிங் நோய் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மாகுலாவின் விரிவான படங்களை வழங்குகிறது.

Read More

சென்னை: ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான 2 நாள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ், அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி,…

Read More

சென்னை: சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணிகள், கூட்டணி தொடர்பாக விவாதிக்க ஜூன் 24, 25-ம் தேதிகளில் 42 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் நாளான நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட நிர்வாகிகள் காலையும் பின்னர் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளை பிற்பகலிலும் பழனிசாமி சந்தித்தார். இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட…

Read More

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான வினாடி வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன. அதன்படி முதல்கட்டமாக ஜூலை 7 முதல் 18-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரையும், 3-வது கட்டமாக நவம்பர் 3 முதல் 14-ம் தேதி வரையும், 4-ம்…

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் தமிழகத்துக்கு விநாடிக்கு 43,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாகமண்டலா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குடகு மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 120.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 20,315 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 18,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும்…

Read More

வேலூரில் ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார். வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.197.81 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய மருத்துவமனையில் 560 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அரங்குகள் உட்பட உயர்சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 ஆரம்ப, துணை சுகாதார நிலைய கட்டிடங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,…

Read More

எப்போதாவது கொரிய பெண்களைப் பார்த்து, அவர்கள் எப்படி புதியதாகவும், பளபளப்பாகவும்,, வயதானவர்களாகவும் எப்படி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார்கள்? நிச்சயமாக, அவர்களின் 10-படி தோல் பராமரிப்பு வழக்கம் அனைத்து கவனத்தையும் பெறுகிறது. ஆனால் இங்கே உண்மையான தேநீர்: அவர்களின் ரகசியத்தின் பெரும் பகுதி அவர்கள் சாப்பிடுவதில் உள்ளது. ஆமாம், அவர்களின் தோல் எப்படி இருக்கிறது மற்றும் உணர்கிறது என்பதில் உணவு ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. நேர்மையாக, இது ஆடம்பரமான பொருட்கள் அல்லது தீவிர உணவுகளைப் பற்றியது அல்ல. இது ஸ்மார்ட், சுத்தமான, வயதான உணவுப் பழக்கத்தைப் பற்றியது.நீங்கள் உள்ளே இருந்து ஒளிரும் மற்றும் உங்கள் தோலில் இருந்து சில வருடங்கள் ஷேவ் செய்ய விரும்பினால் (யார் இல்லை?), இங்கே கொரிய பெண்கள் தங்கள் உணவில் சேர்க்கப்படுகிறார்கள், அவை இளமையாகவும் கதிரியக்கமாகவும் இருக்க உதவுகின்றன.TOI வாழ்க்கை முறை மேசை மூலம்

Read More