இஸ்லாமாபாத்: 2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தனின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின், அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா (37), தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் சரரோகா பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு பிரார்த்தனைகள் ராவல்பிண்டியில் உள்ள அவரது சொந்த கிராமமான சக்லாலா காரிசனில் நடைபெற்றது. இதில், ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டதாக பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கின் போது நடந்த பிரார்த்தனைகளின் படம் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. “மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் எதிரியை எதிர்கொண்டு துணிச்சலுடன் போராடினார். இறுதியில் துணிச்சல்,…
Author: admin
சென்னை: ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என்றும் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டு மக்களில் ஒரு தரப்பினரின் வாக்குகளை வாங்குவதற்காக வாக்குறுதிகளை அளித்து விட்டு, வெற்றி பெற்ற பிறகு அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதை தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக அரசு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை கூட்டுறவுத் துறை, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்பட்டு வருவதால், அதில் பணியாற்றும் பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் காணப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால்…
கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் ஐரோப்பாவில் விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தனது ஐ.ஜி. கைப்பிடிக்கு அழைத்துச் சென்று, 34 வயதான அவர் எழுதினார், “வாழ்க்கை புதுப்பிப்பு: கீழ் வலது அடிவயிற்றில் ஒரு விளையாட்டு குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு மென்மையான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நான் ஏற்கனவே மீட்பதற்கான பாதையில் இருக்கிறேன். திரும்பி வர காத்திருக்க முடியாது “இருப்பினும், விளையாட்டு குடலிறக்கம் என்றால் என்ன, இது ஏன் வழக்கமான குடலிறக்கத்திலிருந்து வேறுபட்டது? ஆழமாக தோண்டுவோம் …விளையாட்டு குடலிறக்கம்ஸ்போர்ட்ஸ் குடலிறக்கம், தடகள பப்ஜியா என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது அடிவயிற்று அல்லது இடுப்பு பகுதியில் உள்ள மென்மையான திசுக்களை கடுமையாக பாதிக்கும் வலி காயம். இருப்பினும், வழக்கமான குடலிறக்கத்தைப் போலல்லாமல், அது ஒரு வீக்கம் வடிவத்தில் தெரியவில்லை. அதற்கு பதிலாக, இது இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள தசைகள், தசைநாண்கள் அல்லது தசைநார்கள் ஆகியவற்றின் கண்ணீர் அல்லது திரிபு…
விண்வெளியில் இருந்து நேரலையில் பேசிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு தன்னை பழக்கிக் கொள்வதில் குழந்தைபோல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி (ராக்கெட்) விண்வெளி நோக்கி ஜூன் 25 (நேற்று) சீறிப்பாய்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமகன் ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டதால் அந்தப் பயணம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஷுபன்ஷு விண்வெளியில் டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவர், “நமஸ்கார். (வணக்கம்) நான் இங்கே பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தைபோல் நடைபயின்று கொண்டிருக்கிறேன். என்னை நானே எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் ரசிக்கிறேன். ஆக்சியம் 4 திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப விழையும் இந்தியாவின் விண்வெளித் திட்ட முன்னெடுப்புகளுக்கு…
‘வாடிவாசல்’ தள்ளிப்போனதற்கான காரணம் என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் ‘வாடிவாசல்’. தாணு தயாரிக்கவிருந்த இப்படம் தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. மேலும், வெற்றிமாறனோ சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கிவிட்டார். இப்போது நடக்கும் விஷயங்களை வைத்து பார்த்தால், ‘வாடிவாசல்’ டிராப் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. இது குறித்து விசாரித்தால், சூர்யா – வெற்றிமாறன் இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது சூர்யா தரப்பில் இருந்து முழுமையான கதையைக் கொடுத்துவிடவும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு வெற்றிமாறனோ நான் படப்பிடிப்பில் தான் இனிமேல் இந்தக் கதை எப்படி சென்றால் நன்றாக இருக்கும் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சூர்யாவோ எத்தனை நாட்கள் படப்பிடிப்பு, முழுமையான கதை இரண்டுமே முடிவான உடன் படம் பண்ணலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதற்கு வெற்றிமாறனும்…
விழுப்புரம்: “கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று (ஜூன் 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கலைஞர் தன் இறுதி மூச்சுவரை திமுக தலைவராக இருந்தார். அதேபாணியில் என் இறுதி மூச்சுவரை பாமகவுக்கு நானே தலைவராக இருப்பேன். கருணாநிதி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் அப்பதவிக்காக எப்போதும் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும். என் காலம் முடியும் வரை அன்புமணி பாமகவின் செயல் தலைவராக இருக்க வேண்டும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனது 60-வது திருமண நாள் விழாவுக்கு…
வலதுபுறம் சாப்பிடுவது, மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் உங்கள் தலைமுடியை தவறாமல் எண்ணெய்ப்பது போன்ற எளிய தினசரி பழக்கங்கள் முன்கூட்டிய சாம்பல் நிறத்தை தாமதப்படுத்த உதவும்.
ஜம்மு: நோயாளியின் உறவினரிடம் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞரின் சட்டையை கழற்றி போலீஸார் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளைஞர் இஷ்ரக் அகமது. (24). இவர் ஜம்முவின் காசிம் நகரில் தங்கியுள்ளார். ஜம்மு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உறவினரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அப்போது இஷ்ரக்கின் சட்டையை கழற்றி, கைகளை பின்னால் கட்டி, போலீஸ் வாகனத்தின் பேனட் மீது உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அத்துடன் அவரது கழுத்தில் செருப்பு மாலையும் போடப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த ஜம்மு போலீஸ் எஸ்எஸ்பி ஜோகிந்தர் சிங், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்: மெக்சிகோ நாட்டின் குவாஞ்சுவாடோவில் உள்ள இரபுவாடோ நகரில் நடந்த இரவு நேர கொண்டாட்டத்தின் போது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இரபுவாடோ நகரில் புனித யோவான் பாப்டிஸ்டைக் கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தபோது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர், பெரும்பாலான நபர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க அங்கிருந்தவர்கள் கண்ணீருடன் ஓடிய வீடியோ காட்சிகள் ஆன்லைனில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ், இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். மெக்சிகோ முதல்வர் கிளாடியா ஷீன்பாம் பார்டோ இந்த தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், இது குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறினார். கடந்த மாதம், குவாஞ்சுவாடோவின் சான் பார்டோலோ டி பெரியோஸில் கத்தோலிக்க திருச்சபை…
மேட்டுப்பாளையம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால், பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் இன்று (ஜூன் 26) பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீலகிரி மற்றும் கேரளா மலைக் காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதியாக பில்லூர் அணை கொண்டுள்ளது. நடப்பு தென்மேற்கு பருவமழைக்காலத்தில் இரண்டு முறை பில்லூர் அணை நிரம்பியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவாக இருந்தது. இதற்கிடையே, நேற்று பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் நேற்று (ஜூன் 25) காலை 87 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று (ஜூன் 25) மாலை 6 மணி நிலவரப்படி 96 அடியை எட்டியது. தொடர் மழையால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்ததால், அடுத்த சிறிது நேரத்தில்…
