Author: admin

திமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக 68 ஆயிரம் டிஜிட்டல் நிர்வாகிகள் தயாராக இருப்பதாகவும், மக்களிடையே மதவாத பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதை உறுதிசெய்து கொள்கிறேன். பெண்கள், இளம் வயதினர் ஆகியோர் தங்களின் தேவைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருசில திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அதையும் தெரிவிக்கின்றனர். அதை கவனமுடன் கேட்டு, அதனை நிறைவேற்றுவதை முதல் கடமையாகக் கொண்டிருக்கிறேன்.…

Read More

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை…

Read More

மேட்டூர் / தருமபுரி: நீர்​வரத்து விநாடிக்கு 80,984 கனஅடி​யாக உயர்ந்​துள்ள நிலை​யில், மேட்​டூர் அணை விரை​வில் முழு கொள்​ளளவை எட்டி உபரிநீர் திறக்​கப்பட வாய்ப்​புள்​ள​தால், 11 மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கனமழை காரண​மாக கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பி, உபரிநீர் காவிரி​யில் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 60,740 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 73,452 கனஅடி​யாக​வும், மாலை​யில் 80,984 கனஅடி​யாக​வும் உயர்ந்​தது. அணை​யில் இருந்து டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு நேற்று காலை 22,500 கனஅடியி​லிருந்து 26,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. நீர் திறப்பை விட தண்​ணீர் வரத்து அதி​க​மாக உள்​ள​தால் அணை நீர்​மட்​டம் அதி​கரித்து வரு​கிறது. நீர்​மட்​டம் நேற்று 117.93 அடி​யாக​வும், நீர் இருப்பு 90.20 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. அணை​யின் முழு கொள்​ளள​வான 120 அடியை எட்ட இன்​னும் 2.07 அடி…

Read More

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சென்றார். அங்கு அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடிநேற்று அவருடன் செயற்கைக்கோள் தொலை தொடர்பு வசதி மூலம் கலந்துரையாடினார். இருவரும் 18 நிமிடங்கள், 25 விநாடிகள் பேசினர். பிரதமர் மோடி – ஷுபன்ஷுசுக்லா இடையே நடைபெற்ற உரையாடல் விவரம்: பிரதமர் மோடி: தாய் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயம், இந்தியர்களோடு மிக நெருக்கமாக இருக்கிறது. விண்வெளி நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை நிறுவியதற்காக 140 கோடி இந்தியர்களின் சார்பில் வாழ்த்துகளை கூறுகிறேன். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஷுபன்ஷு சுக்லா: உங்களுக்கும் 140 கோடி இந்திய மக்களுக்கும்…

Read More

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் லுனி, புத்வல், திபு போஸ்ட், ஜமில் போஸ்ட், உம்ரன்வாலி, சப்ரார் பார்வர்ட், சோட்டா சாக் மற்றும் ஜங்லோரா ஆகிய இடங்களில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. தற்போது இந்த இடங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தீவிரவாத முகாம்களை கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ரேடார் மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பில் சிக்காத வகையிலும், தெர்மல் மாஸ்க் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. மேலும் புதிய தீவிரவாத முகாம்கள் கேல், சர்தி, துத்னியல், அத்முகம், ஜூரா, லிபா, பச்சிபன், ககுதா, கோட்லி, குயிராட்டா, மந்தர், நிக்கைல்,சமன்கோட் மற்றும் ஜங்கோட் என்ற இடத்தில் மலைப் பகுதிக்குள்ளும்,…

Read More

சேலம்: அகில இந்​திய அளவில் காங்​கிரஸ் கட்சி வலு​விழந்து வரு​கிறது என்று தமாகா தலை​வர் ஜிகே.​வாசன் கூறி​னார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் எந்த குழப்​ப​மும் கிடை​யாது. ஆனால், திமுக​வினர் தாறு​மாறாக பேசி, தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்​துகிறார்​கள். கூட்​ட​ணி​யின் நிலையை அமித்ஷா ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​விட்​டார். தேஜகூ ஆட்​சிக்கு வந்​தால் யார் முதல்​வர் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். எங்​கள் நோக்​கம் மக்​கள் விரோத திமுகவை அகற்​று​வது​தான். தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீரழிந்​து​விட்​டது. போதைப் பொருட்​கள் புழக்​கத்தை அரசால் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை. தமிழகத்தில் பல்​வேறு வரி, கட்​டணங்​கள் உயர்த்​தப்​பட்​டு, மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அகில இந்​திய அளவில் காங்​கிரஸ் கட்சி பலத்தை இழந்து கொண்​டிருக்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Read More

ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஷெட்பல் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். நவீன இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயின் துறவிகளில் ஒருவராக விளங்கினார். ஜைன மத கொடி மற்றும் சின்ன வடிவமைப்பில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்நிலையில், வித்யானந்தின் நூற்றாண்டு (பிறந்த நாள்) விழா அடுத்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சார அமைச்சகமும் பகவான் மகாவீரர் அகிம்சா பாரதி அறக்கட்டளையும் இணைந்து செய்துள்ளன. இதையொட்டி நாடு முழுவதும் கல்வி, கலாச்சார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம…

Read More

அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில் எவ்வித குறைபாடு் இல்லை என்றும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், .அதுதொடர்பாக உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-2026 -ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு www.tngasa.in என்ற அதிகாரிப்பூர்வ இணையதளத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த இணையவழி விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி எவ்வித இடர்பாடும் இன்றி மாணவர்களின் பயன்பாட்டுக்காக தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இதுவரை இந்த இணையதளத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 915 மாணவர்கள் எந்தவித இடர்பாடும் இன்றி…

Read More

டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யது. இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் முக்​கிய​மான ராணுவ தளப​தி​கள், அணுசக்தி துறை​யில் ஈடு​பட்டு வந்த விஞ்​ஞானிகள் பலர் கொல்​லப்​பட்​டனர். இஸ்​ரேல் தாக்​குதலில் மேஜர் ஜெனரல் மொகம்​மது பஹெரி, கமாண்​டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்​ஞானி மொகம்​மது மெஹ்தி டெஹ்​ரான்சி உட்பட முக்​கிய நபர்​கள் பலர் உயி​ரிழந்​தனர். தற்​போது போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், உயி​ரிழந்த ராணுவ கமாண்​டர்​கள், விஞ்​ஞானிகளின் உடல்​களுக்கு நேற்று ஈரான் அரசு மரி​யாதை​யுடன் இறு​திச் சடங்கு நடை​பெற்​றது. தலைநகர் டெஹ்​ரானில் நேற்று காலை இறு​திச் சடங்கு ஊர்​வலம் நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பங்​கேற்​றனர். நாட்​டுக்​காக உயிர்த் தியாகம் செய்​தவர்​களை கவுரவிக்​கும் வகை​யில் ஊர்​வலம் நடை​பெற்​ற​தாக ஈரான் தொலைக்​காட்சி செய்தி வெளி​யிட்​டது.

Read More

தென்காசி: தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்​சம் வாக்​கு​கள் உள்​ள​தால், விஜய் தமிழக முதல்​வ​ராவது உறுதி என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் கூறி​னார். தவெக தலை​வர் விஜய் பிறந்த நாளை முன்​னிட்​டு, தென்​காசி மாவட்​டம் சங்​கரன்​கோ​விலில் கட்சி பொதுக்​கூட்​டம் மற்​றும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நேற்று இரவு நடை​பெற்​றது. இதில் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் பேசி​ய​தாவது: தவெக முன்​னேறிக் கொண்​டிருக்​கிறது. சாதாரண மக்​கள், தொழிலா​ளர்​கள் நம்​மிடம் உள்​ளனர். நமக்கு விலாசம், மூச்சு எல்​லாமே விஜய்​தான். கட்சி நிகழ்ச்​சிகளுக்கு பேனர் வைக்​கக்​கூ​டாது என்று விஜய் கூறி​யுள்​ளார். அவர் சொல்​படி அனை​வரும் செயல்பட வேண்​டும். வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க தந்தை பெயர், இருப்​பிடச் சான்று இருக்க வேண்​டுமென்​றும், இல்​லா​விட்​டால் பெயர் நீக்​கப்​படும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதற்​காக மத்​திய அரசை கண்​டிக்​கிறோம். இந்த விஷ​யத்​தில் திமுக ஏன் மவுனம் காக்​கிறது என்று தெரிய​வில்​லை. ஒவ்​வொரு வீட்​டிலும்…

Read More