திமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக 68 ஆயிரம் டிஜிட்டல் நிர்வாகிகள் தயாராக இருப்பதாகவும், மக்களிடையே மதவாத பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதை உறுதிசெய்து கொள்கிறேன். பெண்கள், இளம் வயதினர் ஆகியோர் தங்களின் தேவைகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருசில திட்டங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் அதையும் தெரிவிக்கின்றனர். அதை கவனமுடன் கேட்டு, அதனை நிறைவேற்றுவதை முதல் கடமையாகக் கொண்டிருக்கிறேன்.…
Author: admin
தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை…
மேட்டூர் / தருமபுரி: நீர்வரத்து விநாடிக்கு 80,984 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழை காரணமாக கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 60,740 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 73,452 கனஅடியாகவும், மாலையில் 80,984 கனஅடியாகவும் உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 22,500 கனஅடியிலிருந்து 26,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. நீர்மட்டம் நேற்று 117.93 அடியாகவும், நீர் இருப்பு 90.20 டிஎம்சியாகவும் இருந்தது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 2.07 அடி…
புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சென்றார். அங்கு அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடிநேற்று அவருடன் செயற்கைக்கோள் தொலை தொடர்பு வசதி மூலம் கலந்துரையாடினார். இருவரும் 18 நிமிடங்கள், 25 விநாடிகள் பேசினர். பிரதமர் மோடி – ஷுபன்ஷுசுக்லா இடையே நடைபெற்ற உரையாடல் விவரம்: பிரதமர் மோடி: தாய் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயம், இந்தியர்களோடு மிக நெருக்கமாக இருக்கிறது. விண்வெளி நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை நிறுவியதற்காக 140 கோடி இந்தியர்களின் சார்பில் வாழ்த்துகளை கூறுகிறேன். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஷுபன்ஷு சுக்லா: உங்களுக்கும் 140 கோடி இந்திய மக்களுக்கும்…
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்த தீவிரவாத முகாம்களை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் லுனி, புத்வல், திபு போஸ்ட், ஜமில் போஸ்ட், உம்ரன்வாலி, சப்ரார் பார்வர்ட், சோட்டா சாக் மற்றும் ஜங்லோரா ஆகிய இடங்களில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. தற்போது இந்த இடங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தீவிரவாத முகாம்களை கட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. ரேடார் மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பில் சிக்காத வகையிலும், தெர்மல் மாஸ்க் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. மேலும் புதிய தீவிரவாத முகாம்கள் கேல், சர்தி, துத்னியல், அத்முகம், ஜூரா, லிபா, பச்சிபன், ககுதா, கோட்லி, குயிராட்டா, மந்தர், நிக்கைல்,சமன்கோட் மற்றும் ஜங்கோட் என்ற இடத்தில் மலைப் பகுதிக்குள்ளும்,…
சேலம்: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவிழந்து வருகிறது என்று தமாகா தலைவர் ஜிகே.வாசன் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது. ஆனால், திமுகவினர் தாறுமாறாக பேசி, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கூட்டணியின் நிலையை அமித்ஷா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். தேஜகூ ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுகவை அகற்றுவதுதான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது. போதைப் பொருட்கள் புழக்கத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் பல்வேறு வரி, கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஷெட்பல் கிராமத்தில் கடந்த 1925-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்தார். நவீன இந்தியாவின் புகழ்பெற்ற ஜெயின் துறவிகளில் ஒருவராக விளங்கினார். ஜைன மத கொடி மற்றும் சின்ன வடிவமைப்பில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்நிலையில், வித்யானந்தின் நூற்றாண்டு (பிறந்த நாள்) விழா அடுத்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சார அமைச்சகமும் பகவான் மகாவீரர் அகிம்சா பாரதி அறக்கட்டளையும் இணைந்து செய்துள்ளன. இதையொட்டி நாடு முழுவதும் கல்வி, கலாச்சார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம…
அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில் எவ்வித குறைபாடு் இல்லை என்றும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், .அதுதொடர்பாக உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-2026 -ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு www.tngasa.in என்ற அதிகாரிப்பூர்வ இணையதளத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த இணையவழி விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி எவ்வித இடர்பாடும் இன்றி மாணவர்களின் பயன்பாட்டுக்காக தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. இதுவரை இந்த இணையதளத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 915 மாணவர்கள் எந்தவித இடர்பாடும் இன்றி…
டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் மேஜர் ஜெனரல் மொகம்மது பஹெரி, கமாண்டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானி மொகம்மது மெஹ்தி டெஹ்ரான்சி உட்பட முக்கிய நபர்கள் பலர் உயிரிழந்தனர். தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த ராணுவ கமாண்டர்கள், விஞ்ஞானிகளின் உடல்களுக்கு நேற்று ஈரான் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று காலை இறுதிச் சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஊர்வலம் நடைபெற்றதாக ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
தென்காசி: தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள் உள்ளதால், விஜய் தமிழக முதல்வராவது உறுதி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறினார். தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசியதாவது: தவெக முன்னேறிக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள், தொழிலாளர்கள் நம்மிடம் உள்ளனர். நமக்கு விலாசம், மூச்சு எல்லாமே விஜய்தான். கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்கக்கூடாது என்று விஜய் கூறியுள்ளார். அவர் சொல்படி அனைவரும் செயல்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தந்தை பெயர், இருப்பிடச் சான்று இருக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் பெயர் நீக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறோம். இந்த விஷயத்தில் திமுக ஏன் மவுனம் காக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும்…