பிசாசு இறுதியாக தனது பிராடாவைத் தொங்கவிடுகிறாள்!ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக ஒரு வியக்கத்தக்க ஓட்டத்திற்குப் பிறகு, அண்ணா வின்டோர் தனது நாளிலிருந்து – அமெரிக்க வோக்கின் தலைமை ஆசிரியராக – நாள் கடமைகளிலிருந்து பின்வாங்குகிறார். ஜூன் 26 அன்று நடந்த ஒரு உள் கூட்டத்தில், 75 – ஆண்டு – பாணி மொகுல் புதிதாக உருவாக்கப்பட்ட தலையங்க உள்ளடக்கப் பாத்திரத்தின் தலைவரிடம் செயல்பாட்டு ஆட்சியை ஒப்படைப்பதாக அறிவித்தார். அவர் தனது முந்தைய பாத்திரத்திலிருந்து விலகிக் கொண்டாலும், அவர் நிறுவனத்துடனான தனது உறவுகளைத் துண்டிக்கவில்லை. வோக் யுஎஸ்ஸின் ஆசிரியராக தனது ஆவணங்களை (மற்றும் பிராடா) வைத்த பிறகு, அவர் கான்டே நாஸ்டின் உலகளாவிய தலைமை உள்ளடக்க அதிகாரியாகவும், வோக்கின் உலகளாவிய தலையங்க இயக்குநராகவும் தனது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வார்.இந்த நடவடிக்கை ஒரு வியத்தகு முடிவு, நில அதிர்வு மாற்றம் மற்றும் ஒரு புதிய, உற்சாகமான தொடக்கத்தை குறிக்கிறது. ஃபேஷன் மற்றும் மீடியா வட்டங்களில்…
Author: admin
தருமபுரி / மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 16,000 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 32,000 கனஅடியாகவும், மாலையில் 50,000 கனஅடியாகவும் உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும், பிரதான அருவி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆற்றிலும், அருவிகளிலும் குளிக்க 3 நாட்களுக்கு…
சென்னை: தமிழகத்தில் 1,416 நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் 1,416 நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூகநலத் துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பொறுப்பேற்க நேரிடும்: இந்நிலையில் சமூகநல ஆணையரகத்திடம் இருந்து மின்னஞ்சல் மூலமாக காலை உணவுத் திட்டம் தொடர்பாக நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் பெறப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள நகர்ப்புற நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய…
புளோரிடா: அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு, நேற்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அவர்கள் 2 வாரத்துக்கு அங்கு தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளனர். நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றுடன் இணைந்து வர்த்தக ரீதியான விண்வெளி திட்டத்தை அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐஎஸ்எஸ்) அனுப்பி, 2 வார காலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் இஸ்ரோ சார்பில் பயணிப்பதற்கு, ககன்யான் திட்டத்துக்காக ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை விமானியான ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். அவருடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்),…
மதுரை: அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்ராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளேன். நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளேன். கட்டுமானத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுத் துறைகளில் முறையாக டெண்டர் எடுத்து, அரசு திட்டங்களின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களுக்கு 2025- 2026 ஆண்டுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இதுவரை வெளியிடப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலைப் பட்டியல் உரிய காலத்தில் வெளியிட்டால் மட்டுமே, அந்த விலைப் பட்டியல்…
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் ‘சப்ளையர்’ கெவின் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு ‘கொகைன்’ போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணா என்ற கிருஷ்ண குமார் ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு கைமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராகும்படி, போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இல்லாமல் தலைமறைவானார். இதையடுத்து, 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், அவர் நேற்று…
சென்னை: வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்தாலும், போர்ப் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு உயர்ந்தது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. குறிப்பாக கடந்த 22-ம் தேதி பவுன் ரூ.73,880-க்கும் நேற்று முன்தினம் ரூ.72,560 என்றும் விற்பனையானது. அந்த வகையில் 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது. இந்நிலையில் நேற்று விலையில் மாற்றமின்றி, அதே விலைக்கு விற்பனையானது. அதேநேரம் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.120-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1 லட்சத்து 20…
சிறுநீரில் காணக்கூடிய இரத்தம் நன்கு அறியப்பட்ட அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் சிறுநீர் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் இன்னும் சிறிய அளவிலான இரத்தங்களைக் கொண்டிருக்கலாம், அவை ஆய்வக சோதனைகளால் மட்டுமே கண்டறிய முடியும். இது நுண்ணிய ஹெமாட்டூரியா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தை விட சிறுநீரின் “ஆஃப் நிறத்தில்” காணப்படுகிறது.சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு சிறுநீர் போன்ற வெளிப்படையான அறிகுறி இல்லாததால், சிறுநீரில் உள்ள நுண்ணிய இரத்தம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. புகைபிடித்தல், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளிப்பாடு அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகள் உங்களிடம் இருந்தால், வழக்கமான சிறுநீர் சோதனைகள் இந்த மறைக்கப்பட்ட அறிகுறிகளை ஆரம்பத்தில் பிடிக்க உதவும்.ஆதாரங்கள்: மாயோ கிளினிக், கிளீவ்லேண்ட் கிளினிக், தேசிய புற்றுநோய் நிறுவனம்
பிரிட்ஜ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3 டெஸ்ட், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 56.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 78 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் உஸ்மான் கவாஜா 128 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 28 ரன்களும் சேர்த்தனர். சாம் கான்ஸ்டாஸ் 3, கேமரூன் கிரீன் 3,…
சென்னை: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் சொத்து விவரங்களை ராபர்ட் புரூஸ் மறைத்ததாகவும், தேர்தலில் பல முறைகேடுகளை செய்ததாகவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் கடந்த 19-ம் தேதி ஆஜராகி, காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸின் சொத்துகள் தொடர்பான சான்று ஆவணங்களை பதிவு செய்தார். இந்நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு…
